இங்கே எழுதப்படுபவை என் வாசிப்பு நிரைவுக்காக மட்டுமே.

Friday, July 7, 2023

கொமோரா- லஷ்மி சரவணகுமார்








கோமோரா - லஷ்மி சரவணகுமார் 
ஒரு கேள்வியில் இருந்து இந்த நாவலை அணுகலாம், மனிதர்கள் ஏன் இவ்வளவு மோசமான குரூரமான வன்முறையாளர்களாக இருக்கிறார்கள்?. கதிரின் பதின் பருவத்தில் துவங்கும் நாவல் அவனின் இளமைக்காலத்தில் முடிகிறது அனைவராலும் கைவிடப்பட்ட புறக்கணிக்கப்பட்ட ஒருவனை இந்த சமூகம் மூர்க்கத்தனமான வதைக்கும் போது மனிதர்கள் மீதான வெறுப்பாகவும் வன்முறையாகவும் மாறுகிறது. அதே நேரத்தில் கொடூரமான போரில் இருந்து தப்பி பிழைக்கும் அழகர்சாமி போன்றவர்கள் எவ்வாறு வன்முறையாளர்களாக மாறுகிறார்கள் என்பது வரும் இறுதி அத்தியாயம் மொத்த நாவலையும் இதுவரை வாசித்து வந்த வாசகனின் பார்வையை மொத்தமாக புரட்டி போட்டு நாவலை மறுபரிசீலனை செய்ய சொல்கிறது. இறுதி அத்தியாயத்திற்கு முன்பு கூட வேறு ஒரு கோணத்தில் தெரியும் நாவல் இறுதி அத்தியாயத்தில் மொத்தமாக மாறிவிடுகிறது. அதே போல் இன்னொரு இடம் விஜி அப்பா மரணம் வெறுப்பின் வழியே வரும் நாவல் இங்கே மறுபரிசீலனை செய்ய சொல்கிறது ஆனாலும் அவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆதரவு இல்லாமல் அனாதை கிறிஸ்துவ பள்ளியில் வதைபடும் கதிரும், கம்போடியா இன படுகொலையில் வதைபட்டு தப்பி பிழைக்கும் அழகர்சாமியும் வாழ்வின் மீதான சரி தவறுகளை கணக்கிடும் காலமாக இருக்கிறது. அழகர்சாமி கொல்லப்படும் இடத்தில் அவருக்காக சில நொடிகள் பரிவு தோன்றுகிறது. அதே போல கதிரின் நியாயங்களை முறையாக நாம் மனதில் ஏற்படுத்த நாவல் தவறுகிறது . குறிப்பாக ஆரூன்சாமி வரும் இடம் கதிரின் பக்கத்தை நாயபடுத்த மன்டுமே வலிய உருவாக்க பட்டு நாவலுக்கு வெளியே நிற்கிறது. கம்போடிய இனப்படுகொலை வரும் இடங்கள் மிக விரிவான ஒரு சித்தரத்தை அழிக்க தவறிவிட்டது என்று நினைக்கின்றேன் வெறும் தகவலாக நின்று விடுகிறது. இவ்வளவு பெரிய நாவலில் முக்கியமான இடம் என்றால் சரியாக வந்து இருப்பது 

 சக்தி-முருகன்-கதிர் இவர்களுக்குள் நிகழும் புரிதல்கள் குறிப்பாக முருகனுக்கும் கதிருக்கும் இருக்கும் உறவை தெரிந்து கொண்ட பிறகும் சக்தி அவர்களை அவ்வளவு இயல்பாக ஏற்றுக் கொள்ளும் இடம் சக்தியை மொத்த நாவலிலும் முக்கியமான ஒரு பாத்திரம் காட்டிவிடுகிறது. எல்லாம் தெரிந்தும் கதிரின் அம்மாவை பார்த்து கொள்ள அரசு மருத்துவமனைக்கு செல்கிறாள் இறுதி வரை அவனோடு நல்ல உறவில் இருக்கிறாள்.

 கதிர் - சத்யா காதலை எழுத்தாளர் எந்த விதத்தில் நாயபடுத்துகிறார் என்று தெரியவில்லை. ஒரு சாராய வியாபாரி கஞ்சா வியாபாரி வறுவாய்க்கு வழி இல்லாத ஒரு லும்பன் கல்லூரி படிக்கும் சத்தியாவை (17 வயது) காதல் என்று இழுத்து கொண்டு ஓடுவதை அப்படியே அந்த பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எவ்வாறு நினைக்கிறார். (அந்த பெண்னை அந்த குடும்பம் கொலை செய்து விடுகிறது. இது இந்தசமூகத்தின் நோய்கூறு சாதி வன்முறை) . ஒரு முறை வாசிக்க வேண்டிய நாவல் தானா ? இல்லையா? விளிம்பு நிலை மனிதர்களை வைத்து எழுதப்படும் படைப்புகள் இறுதியில் பொதுவாக ஏமாற்றத்தை தருகிறது. இந்த நூலும் அதையே செய்கிறது.

Kindle பதிப்பில் ஒரே எழுத்து பிழை .. ஒரு இடத்தில் முருகன் என்று வரவேண்டும் ஆனால் கதிர் என்று இருக்கிறது.. கதிரை கதிரே எப்படி அழைத்து செல்ல முடியும்.