இங்கே எழுதப்படுபவை என் வாசிப்பு நிரைவுக்காக மட்டுமே.

Tuesday, October 24, 2017

குட்டி இளவரசன்-அந்த்வான் து செந்த்-எக்சுபெரி



இது ஒரு குழந்தை இலக்கிய நூல் போன்று இருந்தாலும் மனிதர்களின் அற்தமற்ற செயல்களை செவிடீல் அரைகிறது. ஏன் மனிதர்கள் அங்கும் இங்கும் அலைகிறார்கள் இந்த இடம் பிடிக்கவில்லையா ஏன் இடமாறுகிறார்கள் என்று கேட்கிறபோது நமக்கு தோன்றுகிறது ஏன் நாம் அங்கும் இங்கும் அலைகிறோம்?. இவர்களாள் ஒரு
ரோஜா செடியை புரிந்து கொள்ள முடியவில்லை ஆனால் ஆயிரக்கணக்கான ரோஜா செடி எதற்கு வளர்க்கிறார்கள் என்று பல கேள்விகள் குட்டி இளவரசன் கேட்கிறான். பெரியவர்களுக்கு எப்போதும் எல்லாவற்றுக்கும் விளக்கம் தேவை ஆனால் குழந்தைகள் தாங்களாகவே ஆனைத்தையும் யூகித்துக் கொள்கிறது. ஒரு மலை பாம்பு யானையை முழுங்கிய படம் வரைகிறான் அதை பலர் இடம் காட்டிய போது அது ஒரு தொப்பி என்று சொல்கிறார்கள் பிறகு உள்புறம் யானை இருப்பது போல ஒரு படம் வரைகிறான் அதை காட்டும் போது எதாவது உருப்படியான வேலை செய் என்று சொல்கிறார்கள் இப்படி தான் ஓவியம் வரைவதை அவன் கைவிட்டான்.

"பெரியவர்கள் ஒரு போதும்  எதையும் தாங்களாகவே புரிந்து கொள்வதில்லை. எப்போதும் ஒயாமல் விளக்கங்களைத் தருவது குழந்தைகளுக்குச் சலிப்பு தருவதாக இருக்கிறது"

குட்டி இளவரசன் நரி ரோஜா செடி பாம்பு என்று எல்லவற்றுடனும் பேசுகிறான் புறிந்து கொள்கிறான் ஆனால் அவனால் மனிதர்களை, மட்டும் புரிந்து கொள்ளவே முடியவில்லை. மனிதர்கள் எல்லோரும் தங்களுக்கு கீழ்பனிய சொல்கிறார்கள் அல்லது கட்டலை போடுகிறார்கள் அவர் உறவை ஏற்படுத்த விரும்பவில்லை உறவை துண்டிக்கவே நினைக்கிறார்கள் இது தான் இந்த சிறிய புத்தகத்தின் மையம் என்று நினைக்கிறேன்.

குட்டி இளவரசன் இதுவரை 173 மொழிகளில் வெளியாகி 80 மில்லியன் பிரதிகள் விற்பனையாகி உள்ளது. 1943ல் வெளியான இந்த நாவல் தமிழில் 1981 ஆண்டு க்ரியா பதிப்பக  வெளியீடாக வந்துள்ளது. மிக சிறப்பாக இந்த நாவலை பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்த்தவர்கள் மதனகல்யாணி மற்றும் வெ. ஸ்ரீராம்.

Friday, October 20, 2017

ஜீரோ டிகிரி - விமர்சனம்

நாவல் : ஸீரோ டிகிரி
எழுத்தாளர் : சாரு நிவேதிதா
பதிப்பகம் : ஜியே பதிப்பகம்
முதல் பதிப்பு : 1998
பக்கங்கள் : 252
வகை :  நான் லீனியர் நாவல்
விருது : சுவிட்சர்லாந்தின் யான் மிஸால்ஸ்கி இலக்கிய விருதுக்கு  2013-ஆம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்டது. 



முனியாண்டி கடும் உழைப்பாளி எந்த வேலையும் தட்டாமல் செய்வான் ஆனால் பேச்சு என்று வந்தால் வாக் னா வாக் டாக் னா டாக் பேக் னா பேக் சாக்னா எழுதுறது லுக்னா பாக்குறது பெக்னா சரக்கு இப்படி தான் பேசுவான்.

[°]

நீனா மாதிரி எத்தனை எத்தனை நீனாக்கள் வரலாற்றில் சுவடே இல்லாமல் கொடுமை சித்ரவதைகள் அனுபவித்து இருப்பார்கள் என்று நினைத்தால் கடும் மன வலி எழுகிறது. அதுவும் ஒரு மாகா ராணியின் பெண் அடுத்த நாள் யாருக்கோ அடிமை. வரலாற்றில் நாம் வீரம் என்று கொண்டாடுவது எல்லாம் இதை தானா, அடுத்த நாட்டை கைப்பற்றுவது, அவன் பிள்ளைகள் மனைவிகளை அடிமை படுத்தி தாசியாக விற்பது, அல்லது அனந்தபுரத்தில் தள்ளுவது. தமிழர்கள் தலைமேல் வைத்து ஆடிகொண்டு இருக்கும் இராஜராஜ சோழன் செய்ததும் இதை தானே?.முனியாண்டி எங்கு செத்தான் தென் ஆப்பிரிக்கா அல்லது காஸ்மீரா?. கல்வியறிவு உயர்ந்து மட்டும் என்ன பயன் இன்னும் சாமியார்கள் பெண்களை வன்புணர்வு செய்து கொண்டு தானே இருக்கிறார்கள் அப்போ எதுவும் மாறபோவது இல்லையா மனித அகம் எத்தனை நூற்றாண்டு கடந்தாலும் தனக்குள் இருக்கும் அந்த கொடுர குணத்தை கடத்தி கொண்டே தான் இருக்குமா.

[°]

கூண்டு கிளியின்
குஞ்சுற்கு
ஏன்
சிறகுகள்
முளைக்கிறது ?

[°]

ஒன்பதாம் நூற்றாண்டு செத்த மூளை இது வரை சாரு வின் மூன்று புத்தகம் படித்து இருக்கிறான் எக்ஸைல் வாழ்வது எப்படி சீரோ டீகிரி இந்த மூன்றையும் வைத்து ஒன்பதாம் நூற்றாண்டு செத்த மூளை சொன்னது சாரு எழுதுவது சரிபாதி அவர் சொந்த கதை சோக கதை என்று. ஒன்றை எழுதுவது பிறகு அதை விட்டுவிட்டு வேறு எதையாவது எழுதுவது பிறகு எப்போ தோன்றுகிறதோ அப்போது அதை ஐம்பது பக்கம் தாண்டி எழுதுவது கேட்டால் உலகத்தில் இப்படி எழுத ரெண்டோ மூன்றோ பேர் தான் இருக்கிறார்கள் அதில் நானும் ஒருவன் என்று விளக்கம் தருவார்.
முனியாண்டியை நாய் துரத்துகிறது வல் வள் வள் கல் வள் வாஆல் வள் வள் வள் வள் வள் வள் வள் வள் வள் வள் வள் வள் க்கள் வல் கல் வல்.   புகழ் பெற்ற விளையாட்டு வீரர் மணிக்கு முப்பது ஒரு கிலோமீட்டர் வேகத்தில் ஓடுகிறார்.
தேன் மூத்திரம் நாய் பானை இரும்பு விந்து மரம் வைப்பாட்டி வாசனை நான் கோழி மலம் வீடு மூக்கு சளி மொழி எல்லாம் வெறும் சத்தத்தால் ஆனது இந்த உலகமே சத்தங்களால் ஆனது இப்போது எழுதி கொண்டு இருக்கும் இதுவும் தான். எக்ஸைல் இல் வரும் திவாகர் நாய் போலவே இதிலும் ஒருவன்.

{°}

இதில் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் எல்லாம் நம் எங்கோ அன்றாடம் கேட்பது படிப்பது ஒரு கண்ணாடி அறை உள் நடப்பவை நாம் அறிந்து இருந்தாலும் அவர்களின் குரல் நம் காதில் விழுவதில்லை அந்த குரல்களின் அலறல் தான் சாரு வின் எழுத்து அதை தான் டார்ன்கிஸ்யும் ரைட்டிங் என்று சொல்கிறார்கள் அப்புறம் இது பின்நவினதுவம் என்ற வார்த்தை ஒத்துவரவில்லை நான்லீனியர் நான் சரி ¿. பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் அனைத்தும் செக்ஸ் சம்மந்தப்பட்டது என்பதால் அதை அதே வார்த்தைகள் கொண்டு சாரு சாடுகிறார் ஆனால் அதில் இங்கு வாசிப்பவர்களுக்கு அந்த ஆபாச வார்த்தைகள் தான் தெரிகிறதே ஒழிய அவர் பேசும் பொருள் புரிவதில்லை இதனா‌ல் சாரு ஒரு குப்பை என்று அவரை நாடு கடத்தி தூக்கில் போட வேண்டும் என்று எல்லாம் பேசுகிறார்கள். மூடர்கள். நீனா விற்கு போய் பிடித்து விட்டது அதனால் அவள் முலை மொட்டை வெட்டி எடுத்தான் அந்த சாமியார் பிறகு அதில் பிளகாய் பொடி அள்ளி கொட்டினான் இதை எப்படி எழுதுவது ரோஜா மொட்டு கிள்ளப்பட்டது என்றா பைத்தியக்காரத்தனம் மாக இல்லை செக்ஸ் பற்றிய புரிதல் இல்லாமை தான் இதற்கு காரணம். என்று சுத்த தமிழ் எழுத்தாளன் சொல்கிறான்.

[¿]

காஸ்மேனியர்கள் கார்மீனியர்களை கொள்கிறார்கள் கார்மீனியர்களை கார்மீனியர்கள் கொள்கிறார்கள்  என்ன வித்தியாசம் ஒரு எழுத்து தாணே ஆனால் இது 2700 ஆண்டுகளாக இது நடந்து வருகிறது கார்மீனியர்கள் கிருஸ்துவர்கள் அரேபியர்கள் அந்த நாட்டை கைப்பற்றிய போது (1908) சுமார் பதினெட்டு லட்சம் மக்கள் கொள்ளப்பட்டார்கள் இப்படி உலகம் முழுவதும் எத்தனையோ படுகொலைகள் இன்று முதல் நடந்து கொண்டு நான் இருக்கிறது பிறகு என்ன தான் வளச்சியோ என்ன எழவோ ஒன்று புரியவில்லை. இப்படி genocide மத சண்டை சாதி சண்டை பெண்கள் கொடுமைகள் என்று எல்லவற்றையும் சாடுகிறார் சாரு இதனால் தான் என்னவோ சாரு நிவேதிதா நாகரீகம் முன்னேற்றம் என்ற பழமைவாத ஒழுக்க விதிகளை எட்டி மிதிக்கிறார் போலும் எந்த மாற்றமும் நிகழாத போது பிறகு என்ன ஒழுக்கம் கட்டுபாடு வெங்காயம் கந்தரிக்காய் என்று.

[°]

தாயுமானவன் போன்றவர்கள் ஏன் சக மனிதனை இந்தனை கொடுமை செய்கிறார்கள், மனித அகம் ஏன் மற்ற மனிதன் துண்ப படும் போது மகிழ்கிறது அவனுள் இருக்கும் மிருக தனமா மிருகங்கள் இப்படி செய்கிறதா. மனிதர்கள் தான் தன் சக மனிதனை எப்படி எல்லாம் கொடுமை படுத்தலாம் என்று ஆயிரம் ஆயிரம் வழிகளை கண்டுபிடித்து இருக்கிறான் வரலாற்றில் என்ன என்ன சித்ரவதை முறைகள் இருந்தன என்று பார்த்தால் தலை கிறுகிறுக்கும் இப்படி எல்லாம் மனிதன் சிந்திக்க முடியுமா என்று தோன்றும். தாயுமானவன் வாயில் கொதிக்கும் எண்ணெய் ஊற்றினால் என்ன செய்வான் அம்மனை வேண்டுவனா. அவன் கால் தசையை மெழுகுவர்த்தியால் சுட்டு வெட்டி எடுத்து வெந்துவிட்டதா என்று சாபிட சொன்னால். Zero° degree is point of a perfect 360° circul we all are standing in zero point we can watch around the entire world but we don't but charu did this then only can write zero degree.

[°]

இந்த நாவலின் சவால் பல பக்கங்களில் சிதறி கிடக்கும் நாவல் பகுதிகளை ஒன்று திரட்டி தொகுத்து கொள்வது தான். உங்கள் நாட்டில் யானை இருந்தும் நீங்கள் ஏன் உண்பது இல்லை. வித்தியாசமான அனுபவம் கிடைக்கும் உண்மை. சரி நீங்களும் வாசித்து தான் பாருங்களேன்.

[.....]

Monday, October 2, 2017

வெட்டு மலை முகடு

வெட்டு மலை முகடு ( Hacksaw Ridge)
1 ஏப்ரல் 1945 இரண்டாம் உலகம் யுத்தத்தின் போது ஒகைநாவ (Okinawa) என்ற இடத்தில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாட்டிற்கு இடையில் நடந்த ஒரு போரையும் அந்த போரில் ஈடுபட்ட Desmond doss
என்பவர் வாழ்வை வைத்து  எடுக்கப்பட்ட திரைப்படம் Hacksaw Ridge. (உண்மை கதை) இயக்குனர் மெல் கிப்சன் ( mel Gibson) கதாநாயகனாக Andrew Garfield மிகச்சிறப்பாக நடித்து விருதுகள் பெற்று உள்ளனர்... Doss குழந்தையாக இருக்கும் போது அவர் சகோதரன் உடன் சண்டையில் அவனை செங்கல்லால் அடித்து விடுகிறான் அது முதல் கிருஸ்துவ முறைப்படி யாரையும் தாக்ககூடாது  கொல்ல கூடாது என்று முடிவு செய்கிறார். ஒருமுறை ஒருவர் அடிபட்ட போது அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அங்கு Dorothy சந்தித்து காதல்வயபட்டு அவரை பிறகு திருமணம் செய்துகொண்டார். இராணுவத்தில் சேர நினைத்து தன் விருப்பத்தை தந்தை இடம் சொல்ல அவர் மறுப்பு தெரிவிக்கிறார், அவர் முதல் உலக போரி ஈடுபட்டவர் அதில் பல நன்பர்களை இழந்தவர், அதனால் போர் எல்லாம் பயனற்றது நாம் ஏன் போரில் இறக்க வேண்டும் என்று போரை இராணுவத்தை வெறுப்பவர். doss ஐ அந்த கல்லறைக்கு அழைத்து சென்று என் மகனை நான் இங்கு கானவிரும்பவில்லை அதனால் நீ இராணுவத்தில் இணைய வேண்டாம் என்கிறார் ஆனால் அவர் ஏற்கனவே இராணுவ அறிக்கையில் கையெழுத்து போட்டுவிட்டதால் வேறு வழி இல்லை. தன் காதலி டார்தி இடம் சொல்லி விட்டு இராணுவ பயிற்சி பள்ளி செல்கிறார் மிக கடுமையான இரணுவத்திற்கே உறிய பயிற்சி, அங்கு டாஸ் மிக அமைதியாக இருக்கவே மற்றவர்கள் அவரை அடிக்கிறார்கள் கேலி செய்கிறார்கள் எல்லவற்றையும் பொருத்துகொண்டு பைபிள் வாசித்து கொண்டு இருக்கிறார். உண்மையான கிருஸ்துவன் யாரையும் கொல்வதில்லை என்பதால் அவர் துப்பாக்கி தொட மறுக்கிறார் அதனால் அவர் மீது இராணுவ நீதிமன்றத்தில் வழக்கு போடபடுகிறாது, அந்த வழக்கில் இருந்து அவன் தந்தை அவனை கபற்றுகிறார், பயிற்சி முடிந்து அமெரிக்கா படையில் 77 வது பிரிவில் மருத்துவ உதவிக்காக அவர் பணியில் சேர்ந்தார். இவர்கள் அங்கு செல்லும் போதே இவர்களுக்கு முன்பு சென்ற படையில் இறந்தவர்களை பினகுவியலாக ஏற்றிகொண்டு சொல்லும் போது இவர்களும் இப்படி தானே திரும்புவார்கள் என்று தோன்றுகிறது இருந்தும் மரணகளம் நோக்கி செல்கிறார்கள். போர் தொடங்குகிறது உண்மையில் ஒரு போர்களம் எப்படி இருக்கும் என்று மிக தத்ரூபமாக கண்முன் நிறுத்துகிறது இந்த திரைப்படம், எங்கு பார்த்தாலும் ஒரே மரண ஓலம் இரத்தம் புகை நெருப்பு உடல் சிதறி கிடக்கும் மனிதர்கள், செத்து நாறும் உடல்கள் என்று நம் வாழ்நாளில் போரை வெறுக்க செய்து விடும் இந்த திரைப்படம். ஒரு நொடியில் ஒருவன் இருவரை கொல்கிறான் அடுத்த நொடி அவனும் கொல்ல படுகிறான் அப்போது இங்கு நடக்கும் போர்கள் எல்லாம் எதற்காக என்று தோன்றுகிறது, ஒரு கட்டத்தில் அமெரிக்க படை பின்வாங்கிவிடுகிறது அடிபட்ட அத்தனைபேரையும் போர்கலத்திலே விட்டுட்டு எஞ்சியவர்கள் திரும்பி விடுகிறார்கள்.
ஆனால் doss மட்டுமே தனியாளாக அடிபட்டவர்களை மீட்டு சிகிச்சைக்கு அனுப்புகிறார். அவர் சோர்ந்து விழும்போதெல்லாம் இன்னும் ஒருவர் இன்னும் ஒருவர் கடவுளே என்று சொல்லும் போது கதை நம்மை கலங்க செய்கிறது. மிக நேர்த்தியான ஒலி, ஒளி பதிவுகள் மேலும் மேலும் காட்சிகளை உண்மையாக்குகிறது. அந்த போரில் 72 பேர் உயிரை டாஸ் காபற்றுகிறார், ஆனால் எல்லோருக்கும் கையோ காலோ கண்ணோ பாதிக்கப்பட்ட நிலைதான். அவர்களை எல்லாம் காப்பாற்றி விட்டு doss வரும் காட்சிகளில் ஏதோ நம்மை கலங்கடிகிறது. மீண்டும் போர் 82 இரண்டு நாள் நடக்கிறது இறுதியில் ஜப்பான் சரணடைகிறது இந்த போரில் doss காயம் அடைகிறார் அவர் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்படுகிறார். இதோடு படம் முடிகிறது.
இந்த திரைப்படம் பார்த்த பிறகு போர் எவ்வளவு கொடுமையானது எத்தனை உயிர்கள் இதற்காக பலி கொடுக்கபடுகிறது எதன் பொருட்டும் இனி போர் நிகழகூடாது என்று நினைக்க செய்கிறது இங்கு தான் இந்த திரைபடத்தின் வெற்றி உள்ளதாக தோன்றுகிறது. இந்த படம் இரண்டு ஆஸ்கர் விருதுகள் பெற்றது மேலும் சிறந்த கதை, சிறந்த ஒலி, ஒளி பதிவு, சிறந்த நடிப்பு, சிறந்த இயக்கம் என்ற பல விருதுகளை வென்றது.

Desmond doss அந்த போரில் அடிபட்டு ஐந்து வருடம் மருத்துவமனையில் இருக்கிறார் பிறகு 96% உடல் குறையோடு வீடு வருகிறார் தொடர்ந்து கொடுக்கபபட்ட மருந்தால் அவர் காது கேட்காமல் போகவே  100% உடல் இயக்கம் இல்லாதவர் ஆகிறார் மார்ச் 2006 ம் ஆண்டு 87 வயதில் இறந்தார். அமெரிக்காவின் உயரிய விருது இராணுவத்தில் எதிரியை கொல்லாதவருக்கு முதன் முதலில் doss க்கு கொடுக்கப்பட்டது. கான வேண்டிய திரைப்படம்.