இங்கே எழுதப்படுபவை என் வாசிப்பு நிரைவுக்காக மட்டுமே.

Tuesday, September 26, 2017

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாவல் : ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
எழுத்தாளர் : ஜெயகாந்தன்
பக்கங்கள் : 330
பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்





கிருஷ்ணாபுரம் என்னும் கிராமத்தில் வாழ்ந்த ஒரு மனிதன் இல்லை ஒரு வீட்டு இல்லை ஒரு உலகத்தின் கதை. சபாபதி பிள்ளை என்ற அவர் தனது மனைவி வேறு ஒருவனுடன் ஓடி போனதை இரவோடு இரவாக மறைப்பதற்காக இவரும் வீட்டை விட்டு ஓடி விடுகிறார், கிராமம் அவர்கள் குழந்தை இல்லாத துக்காதால் எங்கோ சன்யாசம் போய்விட்டதாக நினைக்கிறது. பர்மா போரின் போது ஒரு பெண்ணை சந்தித்து தப்பி இந்தியாவுக்கு வரும் போது ஒரு குழந்தையை கண்டெடுத்து வளர்க்கிறார்கள். அக்குழந்தைக்கு தனது சொத்துக்களை எல்லாம் சபாபதி பிள்ளை உயிர் எழுதி கொடுத்துவிடுகிறார். சபாபதி பிள்ளை அவரது அங்லோ இந்தியன் மனைவியும் இறந்து விடவே அவர் வளர்ப்பு மகன் ஹென்றி அவன் பப்பா ஊரான கிருஷ்ணராஜபுரம் வருகிறான். அதுவும் அவன் பப்பா தனது சொத்துகளை எல்லாம் அவன் பெயருக்கு எழுதி கொடுத்த உயிலோடு. நகரத்தில் வாழ்த ஒருவன் எப்படி தனக்கான உலகை எந்த நெருடலும் இல்லாமல் எப்படி ஏற்று நகர்கிறான் என்பது வியப்பு, பலருக்கு அடுத்தவர் வீட்டிற்கு சென்றாலே தூக்கம் வராது ஆனால் ஹென்றி மிக இயல்பாக அனைத்தையும் ஏற்று கொண்டு வாழ்வின் பகுதியாக மகிழ்ச்சியாக கடக்கிறான். பியானோ இசையை கிராமத்து கால்நடைகள் கழுத்தில் கட்டப்பட்டு இருக்கும் மணி ஓசையோடு ஒப்பிடுகிறான், அருமையான தருணம் அது பொதுவாக மேட்டு குடி வாழ்க்கை வாழ்ந்தவர்கள் தனக்கு கீழ் இருப்பதை மிக எளிதாக உதாசீனம் செய்வார்கள் முகம் சுளிப்பார்கள், ஆனால் ஹென்றி ஒரு இடத்தில் கூட எதையும் குறைகூறவோ முகம் சுளிக்கவோ இல்லை ஒவ்வொன்றில் இருந்தும் ஏதாவது ஒன்றை கற்றுகொள்ள முனைவதோடு அதை வாழ்வின் மகிழ்ச்சியான தருணமாக மாற்றி கொண்டு மிக இயல்பாக இருக்கிறான். குறிப்பாக ஆற்றில் குளிக்கும் போது சோப்பு விழுந்துவிடுகிறது இதை 'சோப்பெங்கபா' என்று பாடலாக மாற்றி பல நேரங்களில் பாடி மகிழ்கிறான். நமக்கெல்லாம் சோப்பு விழுந்த அய்யோ சோப்பு போச்சே தான் தோன்றும்?!. அவன் பப்பா வின் எந்த சொத்தும் வேண்டாம் அவர் வாழ்ந்த இந்த ஊரும் அவர் உடன் வாழ்ந்த சக மனிதர்களும் போதும் அதுவே வாழ்வின் மகத்தானவை என்று ஹென்றி நினைக்கும் போது, அப்போ நமக்கெல்லாம் நாம் பிறந்து வளர்ந்த மண் மீது ஏதோ ஒரு ஈர்ப்பு வரும் ஆனால் எந்த சம்பந்தமும் இல்லாமல் ஒரு மனிதனுக்கு அவன் அப்பா வாழ்ந்த ஊர் என்பதால் அந்த மண் மீதும் மக்களின் மீதும் ஈர்ப்பு வருகிறது என்றால் எப்படி நிகழ்கிறது இது? ஒரு வேளை சாபாதி பிள்ளைக்கு பிறந்த மகனாக இருந்தால் கூட குருதி வழி ஈர்ப்பு என்று சொல்லலாம் ஆனால் எந்த தொடர்புமே இல்லாத ஒருவனுக்கு அவன் பப்பாவின் அன்பு மட்டுமே இதை நிகழ்துகிறது என்றால் அன்பு எந்த மகத்தான ஒன்று, உண்மையில் மிக நுணுக்கமான மாற்றங்களை அப்பு செலுத்துபவர்கள் நம்மில் நிகழ்த்துகிறார்கள். வெறும் குருதி வழி சொந்ததிற்காக தான் நம் உறவுகள் மீது அன்பு செலுத்துகிறோம் ஆனால் அது அன்பல்ல கடமை என ஆகிறது, அப்புடையார் எம்பும் உரியர் பிறர்க்கு தானே? எம்பும் தமது சொந்தங்களுக்கு என்றால் அது அன்பிலார் எல்லாம் தமக்குறியர் தானே. இதில் வரும் அனைத்து பெண்களும் ஏதோ ஒரு வகையில் கனவனை பிரிந்து வாழ்கிறார்கள், தேவராஜன் மனைவி, அக்காம்பள், துரைக்கண்ணு மாமியார் பஞ்சவர்ணத்தாமள் , கிளியம்பள், ஏன் ஹென்றி தாய் கூட கனவனை இழந்தவர் தான். பெண்கள் எல்லா வாழ்வில் மிக எளிதாக புரக்கனிகபடுகிறார்கள் என்று நினைத்தால் அதே நேரம் சப்பாத்தி பிள்ளை மனைவி கனவனை புரக்கனித்து வேறு ஒருவனுடன் ஓடி போகிறாள், மனையகாரர் மனைவி நாகம்மா சிறு தவறுக்காக அவரை மிக கடுமையாக திட்டுகிறாள் அப்போது இது இரண்டுமே இரு முனை போல எப்போதும் மறி மறி நடந்து கொண்டே தான் இருக்கிறது அது தான் வாழ்வின் போக்கா எடுத்துகொண்டு நாம் நகர வேண்டியுள்ளது.
ஒரு இடத்தில் ஹென்றி சொல்கிறான் எனக்கு மதம் கிடையாது என்று, துரைக்கண்ணு அப்புறம் சமி கும்பிடுற என்று கேட்கும் போது இறைவனை கும்பிட மதம் எதற்கு என்று இப்படி பல நுக்கமான செய்திகளை சொல்லியபடி நாவல் நகர்கிறது. ஒரு இடத்தில் ஒரு பெண் நிர்வாணமாக தெருவில் சுற்றுகிறாள் அவளை எல்லோரும் பைத்தியம் என்கிறார்கள், நிர்வனமாக இருந்தால் பைத்தியமா சாமியார்கள் எல்லாம் நிர்வாணமாக தானே இருக்கிறார்கள் ஏன் சாமி சிலைகள் கூடத்தான் அப்போ உண்மையில் யார் பைத்தியம்? குளியல் அறையில் நாம் கூட அறைமணி நேரம் உடைகலைகிறோம் அப்போது நாம் கூட அறைமணி நேரம் பைத்தியம் தானே. என்னால் தேவராஜன் விட்டில் இருந்து துரைக்கண்ணு வீட்டிற்கு வாசகனாகவே செல்ல முடியவில்லை ஆனால் ஹென்றி எந்த சலனமும் இல்லாமல் போகிறான் அங்கு தங்கி குழந்தைகளோடு விளையாடி மகிழ்ச்சியாக இருக்கிறான். எது ஒன்றிலுமே ஒரு அழகு இருப்பதாக நினைத்து அதை செய்யும் ஹென்றி போலவே நாமும் இருக்க வேண்டும் அல்லவா ஆனால் நமக்கு விருப்பம் உள்ளது விருப்பம் இல்லாதது என்று பார்த்து பார்த்து வேலைகள் செய்கிறோன், ஹென்றி இடத்தில் யார் இருந்தாலும் சுண்ணாம்பு அடிக்கும் வேலையை நினைத்து கூட பார்க்க மாட்டோம் ஆனால் அவர் அனைத்தையும் வாழ்வில் இயல்பாக ஏற்றுகொள்கிறான். புதிய வீட்டிற்கு மின்சாரம் கொடுக்க சொல்லும் போது எதற்கு மின்சாரம் இந்த அகல் வெளிச்சம் போதுமே வீட்டில் வாழ மின்சாரம் தேவையில்லை என்று சொல்கிறான். திருமணம் குடும்ப வாழ்விற்கு நான் எதிரி கிடையாது ஆனால் எனக்கு திருமணம் தேவையில்லை என்று சொல்லும் போதுதான் இந்த படைப்பு உச்சம் பெறுகிறது. நம் வாழ்க்கையில் நாம் எதையும் நமது தேவைக்காக செய்வதில்லை மற்றவர்கள் செய்வதால் தானே செய்கிறோம் அல்லது மற்றவர்கள் விருப்பம் ஆசைக்கு தான் நமக்கு தேவையே இல்லாத பல விஷயங்கள் செய்து கொண்டு வாழ்வை பிரச்சனை நிறைந்த ஒன்றாக மாற்றி கொண்டு கஷ்டபடுகிறோம். இதனால் தான்  தேவராஜன் ஹென்றியை பிஃளாசபியர்,கைய்டு என்று கனகவல்லிக்கு அறிமுகம் செய்கிறான். இதில் வரும் ஆண்களும் சரி பெண்களும் சரி பிரிந்து இருந்தாலும் மனதிற்குள் அது குறித்து கவலையோடு தான் இருக்கிறார்கள் இருந்தாலும் ஏதோ ஒன்று தடுக்கிறது. ஒரு இடத்தில் சிவ பானம் உடலுக்கு கெடுதல் இல்லை என்று வருகிறது கஞ்சா புகைப்பது உண்மையில் கெடுதல் இல்லையா என்று தெரியவில்லை. நாம் அன்றாடம் தவறவிடும் அனைத்தையும் ஹென்றி கூர்ந்து கவனித்து கற்று கொள்கிறான், எவ்வளவு சிறிய விஷயமாக இருந்தாலும் அதை மகத்தான ஒன்றாக நினைத்து அகம் மகிழும் அந்த குணம் அனைவரையும் சமமாக நினைப்பது அனைத்தையும் சமமாக நினைப்பது என்று எத்தனையே நாம் ஹென்றி இடம் இருந்து கற்றுகொள்ள வேண்டும். இதில் இருந்து ஒன்று நன்றாக தெரிகிறது மனிதன் குணம் அவன் தந்தை வழி குருதியில் வருவதில்லை அது வளர்பிலும் சுற்றி இருப்பவர்களாலும் தான் வருகிறது. இந்த நாவல் வந்த காலகட்டத்தில் இது கொண்டாட பட்டத்திற்கு பல சிறப்புகள் இருக்கிறது சில வற்றை மட்டுமே இங்கே சொல்லி உள்ளேன். பேபி ஹென்றி வீட்டிற்கு வந்து சில நாளுக்குள் திருப்பவும் பழையபடி தான் போன போக்கில் போய்விடுகிறாள், புது வீட்டில் குத்து விளக்கு கொண்டு வந்து வைக்கிறாள் யாரோ விழுந்து கும்பிட்டு என்று சொன்கிறார்கள் கும்பிட்டு விட்டு கிளம்பி விடுகிறாள். அவள் இங்கு வந்தது முதலே எல்லோரும் ஏதேதோ கட்டளைகள் போட்டுகொண்டே இருக்கிறார்கள். ஏதற்கு இது எல்லாம் பேபி போல தானே நாம் எல்லாம் இருந்தோம் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரமாக சொல்ல போனால் அவளை போலவே நிர்வாணமாக ஆனால் இப்போது? இந்த கட்டுபாடு வரையறைகள் எல்லாம் எதற்கு. நாமும் பேபி போல இருந்தால் என்ன?. இந்த நாவல் வந்த காலகட்டத்தில் இது கொண்டாட பட்டத்திற்கு பல சிறப்புகள் இருக்கிறது சில வற்றை மட்டுமே இங்கே சொல்லி உள்ளேன்.