இங்கே எழுதப்படுபவை என் வாசிப்பு நிரைவுக்காக மட்டுமே.

Tuesday, April 13, 2021

பொண்டாட்டி-அராத்து


ஆண் பெண் இருவருக்கும் இடையில் இருக்கும் உறவு சிக்கலை வைத்து எழுதப்பட்ட ஒரு ஜாலியான செக்ஸியான செறிவான என்ன மொழி நடை கொண்ட நாவல். தீவிர இலக்கியம் படித்து மண்டை சூடு ஏறிய (18+) வாசகர்கள் வாசிக்கலாம். ஆனாலும் புத்தகம் முழுவதும் செக்ஸ்யே.... நினைத்து கொண்டு இருக்க வேண்டி உள்ளது அது சிறு நெருடல் தான். ஒரு நாவல் தன்னை fake என்று அழைத்துக் கொள்வதால் இதன் கதை , காலம் , நவீன துவமா , பின்நவீனத்துவமா , ஆணாதிக்கமா , பெண்ணாதிக்கமா, என்று குழப்பிக்கொள்ள தேவையில்லை . மொழி நடை எடுத்தால் கீழே வைக்க வேண்டிய எண்ணமே வராது.நாவல் முழுவதும் குறி பற்றி வருவதால் குறியீடு பற்றியும் யோசிக்க வேண்டாம். பொற்செல்வி போன்ற பெண்தான் தனக்கு மனைவியாக வரவேண்டும் என்று ஒவ்வொரு ஆணும் நினைக்கிறான் அதே நேரம் தீப்திகா, தீப்தி, தீப்து, தீபு, தீப்... போன்ற வைப்பாட்டி தேவைப்படுவதால் ஜெயமோகன் போன்றவர்கள் அவர்களின் வாழ்வை பலியிடுகிரார்கள். நீதிமன்றத்தில் இருக்கும் வழக்குகளில் 30 சதவீதத்திற்கு மேல் டைவர்ஸ் வழக்குகளாக உள்ளது இந்த வழக்குகள் அனைத்தும் ஆதிரையை லக்ஸ் எப்படி நடத்துகிறோமோ அதேபோல குற்றச்சாட்டுக்கள் உடையவை. ஒரு பெண்ணை முதலிரவின் போது எப்படி அணுக வேண்டும் என்பது கூட தெரியாமல் அந்த பெண்ணை முதல் இரவிலேயே வன்கலவி செய்து போடுகிறார்கள் கலவியில் ஈடுபடும் போது அடிக்கிறார்கள் சிகரெட்டால் சுடுகிறார்கள்.  இதில் லக்ஸ் ஒருபடி மேலேபோய் அதிரையை அவளின் அப்பா அருகில் இருந்து சுய இன்பத்திற்கு வீடியோ காலில் வரும்படி அழைக்கிரான்.  பாலியலை எந்த அளவுக்கு மறைமுகமாக ஆக்குகிறோமோ  அந்த அளவிற்கு அது பாலியல் குற்றங்களாக  வெளிப்படுவதாக எனக்கு படுகிறது.ஒரு சமூகம் புனித்தால்  கெட்டு சீரழிகிறது என்பது முக்கியமான செய்தி . இதுவரை எந்த விதமான பாலியல் அறிவும்  அல்லாமல் இணையத்தில் ஹார்ட்கோர் புரோன் பார்த்துவிட்டு முதலிரவை எதிர்கொள்ளும் ஒருவன் ரேப்பிஸ்ட்  போல தான் நடந்துகொள்வான். நாவலின் தொடக்கத்தில் யார் யாருடன் உறவு வைத்துக் கொண்டார்கள் யாருக்கு யாருடன் தொடர்பு என்பது பெரும் குழப்பமாக தோன்றலாம் நாவல் போகப்போக அனைத்து குழப்பங்களும் அவிழ்க்கப்படுகிறது. கதை இறந்தகாலம் எதிர்காலம் நிகழ்காலம் என்று முன்னும் பின்னும் சென்று வருவதால் சிறு குழப்பம் ஏற்படலாம்  இது ஒரு பின் நவீனத்துவ பாணி , ஆத்தாவை(அம்மன் கோவிலில்) நீயும் பொண்டாட்டி தானே உனக்கும் பீரியட்ஸ் வரும் தானே என்றெல்லாம் வம்புக்கு இழுப்பதும் இந்த பாணி தான். இதில் விளிம்புநிலை மக்களின் சிக்கல்கள் குறைவாகவே வருவதால் இந்தை மேட்டுக்குடிகளின் நாவல் என்று அழைக்கலாம் என நினைக்கிறேன். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு கூட சின்னவீடு என்று வெளிப்படையாக வைத்துக்கொண்டார்கள் இன்று அவை மறைமுகமான கள்ள உறவு என்று வளர்ந்து நிற்கிறது. தொடக்கத்தில் வரும் சின்னைய்யா பெரியய்யா நடுயய்யா  அவர்களின் காலகட்டத்தில் டீக்கடையிலும் அந்த ஊரிலும் பாலியல் குறித்த பேச்சுக்கள் சகஜமாக வருகின்றன உதாரணம் டீக்கடை மணி . போற்செல்வியின் பூப்பெய்திய விழாவில் கூட அவர்கள் அவ்வாறாக பேசிக் கொள்கிறார்கள் ஆனால் பொற்செல்வியின் மகள் காலகட்டத்தில் அதாவது தற்போதைய காலகட்டத்தில் ஒரு வார்த்தை கூட பாலியல் சார்ந்த வார்த்தைகள் பேசப்படவில்லை அத்தனையும் மறைமுகமாக இருக்கிறது குற்றங்களாக ஆகிறது. குறியை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது கூட பெருவாரியான ஆண்கள் அழியாதது. ஒரு பெண்ணுக்கு ஆணின் மீது ஈர்ப்பு ஒரு ஆணுக்கு பெண்ணின் மீதும் ஈர்ப்பும் இயல்பாக இருக்க வேண்டியவை ஆனால் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏன் இத்தனை முரண்பாடுகளும் சிக்கல்களும் எழுகின்றன என்பது எவ்வளவு யோசித்தாலும் எனக்கு பிடிபடாதவையாக இருக்கிறது.  90's க்கு முன் பிறந்தவர்கள் இதைப் படித்து வீணாக ஹார்ட் அட்டாக்கை வர வைத்துக்கொள்ள வேண்டாம். அப்புறம் எழுத்தாளரை அறிமுகப்படுத்தும்போது அனைத்து இடங்களிலும் இவர் நீயா நானாவில் கலந்து கொண்டவர் என்கிறார்கள் நீயா-நானா அவ்வளவு பெரிய அறிவியக்கமா போல இங்கே  என்ன எழவோ ..