இங்கே எழுதப்படுபவை என் வாசிப்பு நிரைவுக்காக மட்டுமே.

Wednesday, February 3, 2021

கொரில்லா - ஷோபாசக்தி

 

நன்றி நூலக திட்டம் : www.noolaham.org

இன்று ஐரோப்பிய வீதிகளில் எந்த ஒரு ஈழத்தமிழன் சுற்றித் திரிந்தாலும் அவனுக்குப்பின்னால் போரினால் பாதிக்கப்பட்ட கதை ஓண்டு இருக்கும். அப்படித்தான் யா. அந்தோணிதாசன் தன்னுடைய கதையை கதைக்கிறன். தனது அகதி விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளும்படி பிரான்ஸ் அரசுக்கு விண்ணப்பம் போடுகிறான். தன் நாட்டை விட்டு வெளியேறியது குறித்த காரணங்களை சொல்லும் போது ஆமிக்கும் புலிகள் இயக்கத்திற்கும் இடையில் சிக்கியவர்களின் பரிதாப நிலை விளங்குகிறது. புலிகள் இயக்கம் மற்ற போராளி இயக்கங்களை தன்னோட வளர்ச்சிக்காக கொலை செய்தது, அங்கிருந்த இஸ்லாமியர்களை வெறும் 500 ரூபாயோடு அந்த நிலத்தில் இருந்து வெளியேற்றியது, இயக்கத்திற்கு பணம் கொடுத்து உதவினார்கள் என்ற காரணத்திற்காக மணல் கொள்ளையர்களை அனுமதிப்பது, சிறுவர்களை கரும்புலிப் போராளிகளாக இயக்கத்தில் கட்டாயப்படுத்தி சேர்த்தது என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி வைக்கிறது இந்த நாவல்.IPKF ஈழம் சென்றபோது இத்தனை வருடங்களாக சிங்கள ராணுவம் செய்த கொடுமைகளை வெறும் இரண்டே நாட்களில் நிறைவேற்றுகிறது. கற்பழிப்பு, கொலைகள், உடமைகளை அழித்தல் என்று மோசமான இராணுவ அடக்குமுறைகளை IPKF  நிகழ்த்துகிறது. IPKF மீது புலிகள் நடத்திய இறுதி தாக்குதலில் 15 வயது சிறுமி கரும்புலியாக பயன்படுத்தப் பட்டிருக்கிறார். காலப்போக்கில் புலிகள் இயக்கம் தீவிரவாத வலதுசாரி தன்மைகொண்டதாக மாறுகிறது.

"இனி காந்தியே தோன்றினாலும் புலிகளின் இயக்க தலைவரின்  வேட்டில் இருந்து தப்பிக்க முடியாது "

" துவக்கு அங்க சுட்டு இங்க சுட்டு கடைசியில சும்மா இருக்கவனையும் சுடும் "

(நாவலில் இருந்து)

தமிழகத்தில் உள்ளது போலவே சற்றும் குறைவில்லாத ஜாதிய படிநிலைகளும் சாதிய அடக்குமுறைகள் அங்கு இருந்தது. காளை வண்டி போட்டியில் வெற்றி பெற்ற கீழ் சாதிகாரன் என்பதால் மலையை அவன் கழுத்தில் போடாமல் மாட்டு கழுத்தில் போடுவதாக வருகிறது. இதை ஒழிப்பதற்காக புலிகள் எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை என்பதும் இந்த நாவல் வைக்கும் குற்றச்சாட்டாக இருக்கிறது. ரொக்கிராஜ் இயக்கத்தில் சேர்ந்த பிறகு அதன் காரணத்தாலேயே அவரின் குடும்பமும் அவனின் வாழ்க்கையும் எவ்வாறு சிதைகிறது என்பதையும் அவனின் அப்பா கொரில்லாவிற்கும்  அவனுடைய  இடையே இருக்கும் எதிரெதிர் குண போராட்டம் சிறப்பாக வந்துள்ளது. வெட்டுவோன் கொத்துவோன் எண்டு இருக்கும் அப்பான் மகன். ரொக்கிராஜ் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட பிறகு சட்டை வாங்கி கொடுக்கும் இடம், லௌதிக விதிகளை மீறி நடக்கும் கொரில்லா புனைவில் மிளிர்கிறார்கள். பின் பகுதி கற்பனையானவை. நாட்டுல தான்  இயக்கங்களுக்குள் கொலை செய்து கொள்கிறார்கள் என்றால் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற அகதிகளும் குழு மோதலால் கொலை செய்து கொள்கிறார்கள். சாதி பார்த்து பழகுகிறார்கள். இந்த நாவலில் வரும் பெரும்பாலான கதாபாத்திரங்கள் இறந்து விடுகிறது இராணுவத்தால், இயக்கங்களால்,  மற்றவர்களால் கொல்லப்படுகிறார்கள். மனிதனிடம் அதிகாரம் குவியும் போது அவனுடைய குரூரத்தின் எல்லைக்கு அளவே இல்லாமல் ஆகிறது.
Lord byron எத்தனை பொருத்தமான வரியை தன் கவிதையில் சொல்கிறார். "மனிதன் அதிகாரத்தால் சீரழிந்தவன்"

மரணங்களின் செய்தி கூடக்
கிட்டாததொலைதீவில்
ஏக்கங்களையும் துக்கங்களையும்
கடலலைகளிடம் சொல்லிவிட்டுக்
காத்திருக்கும் மக்கள்...
கடலம்மா நீ மலடி
ஏனந்தத் தீவுகளை
அனாதரவாய்த் தனியேவிட்டாய்?


5.குஞ்சன்வயல்   கடற்கரையே ரெத்த வெடில் பிடிச்சுது  ஒவ்வொரு வாகனமாய் ஓடி ஓடி ரொக்கிராஜ் பிரேதங்களைப் பார்த்தான். அவனால் நிலத்தில் நிக்கக்கூட ஏலாமலுக்கு  தலை சுத்தி அப்படியே ரோட்டில் இருந்திற்றான். குழந்தை, குஞ்சு, குருமன் ,ஆம்பளையள், பொம்பளையள், எண்டு  எல்லாமாய் ஐம்பது சொச்சம் பிரேதங்கள்.

6.எல்லாரையும் வெட்டித்தான்  கொலை செய்திருக்கிறார்கள் கையில்லாமல் ,கால் இல்லாமல், தலையில்லாமல் , கைக்குழந்தையை கட்டிப்பிடிச்சுக்கொண்டு கிடந்த பிரேதங்களை தோணியிலே ஏற்றினார்கள் .

7. ஒரு பச்சைப் பாலகனுக்கு பிறந்து ஆறு மாதம் கூட இருக்காது நெஞ்சில வாளல குத்தி அந்த பிள்ளையின்ர ஆணுறுப்பை அறுத்து அந்த பாலகன்ர வாய்க்குள்ள ஆணுடம்பை அடைஞ்சு வைச்சிருக்கிறாங்கள், லோஞ்சியல பயணம் செய்த ஒருத்தரும் உயிரோடு தப்பயில்ல எல்லாரையும் வெட்டிச் சரிச்சுப் போட்டுத்தான் போயிருக்கிறாங்கள்.

(நாவலில் இருந்து)...