இங்கே எழுதப்படுபவை என் வாசிப்பு நிரைவுக்காக மட்டுமே.

Wednesday, November 8, 2017

திசை அறியும் பறவைகள் - சாரு நிவேதிதா




சாரு நிவேதிதா எழுத்து விறுவிறுப்பான நடைகொண்டது அதுவும் இந்த கட்டுரை தொகுதி இன்னும் விறு விறு. வழக்கம் போல் பல்வேறு உலக செய்திகள் திபெத் மக்கள் உணவு முறை படிக்கும் போது உலகில் தலைசிறந்த உணவு முறை என்று புரிகிறது. அதிலும் ஊழல் செய்பவர்களை தூக்கி என்ற கட்டுரை ஹஹா! ஐரோபா எப்படி குளிரை எதிர்கொள்கிறது இந்திய எப்படி எதிர்கொள்கிறது என்பதை பற்றியது இந்தியாவில் இன்னும் குப்பை கூலம் போட்டு தீ வைத்து தான் குளிர்காய வேண்டும் அதாவது ஆதி மனிதன் போல, ஆனால் ஐரோபாவில் பொது இடத்தில் எங்கும் வெப்ப கற்று வீச வசதி இருக்குமாம் அனைத்து இடத்திலும் சுடு தண்ணீர் தான். இந்தியாவில் சுடுதண்ணீர் வைக்க மின் கம்பியை தண்ணீரில் வைத்து பிறகு அது சுட்டதா என்று பார்க்க கை வைத்தால் ஜாக் அடித்து சாக வேண்டும். அப்புறம் ஏன் சாரு விற்கு இளையராஜா இசை பிடிப்பதில்லை என்று இந்த புத்தகத்தில் விரிவாக சொல்லி இருக்கிறார் ஏதே Dionysian இல்லையாம் இளையராஜா இசையில். Dionysian என்றால் என்னவென்று இந்த புத்தகம் படித்து தெரிந்து கொள்ளவும்.சரி இளையராஜா தான் இப்படி என்றால்  ஏ ஆர் ரஹ்மான் பற்றி கேட்டால் விமர்சிக்க கூட ஒரு தகுதி வேண்டும் அது ஏ ஆர் ரஹ்மான் இடம் இல்லை என்று ஒரே போடாக போட்டுகிறார். அப்புறம் பெரு என்ற கட்டுரை பெரு பற்றியது அங்கே சேகுவாரா பற்றி எல்லாம் அவ்வளவாக யாருக்கும் தெரிவதில்லை நம்ம ஊரில் ங்கோத்தா எப்படியோ அப்படி அங்க சே என்று மட்டும் அடிக்கடி சொல்லுங்களாம்.

ரஜினி சார் என்ற கட்டுரையில் தமிழர்களுக்கு தாழ்வு மனப்பான்மையும் அடிமை தனமும் இரத்தத்தில் ஊறிபோன என்கிறார் அது உண்மை தான் என்று தோன்றுகின்து ஒரு தமிழன் சக தமிழனை பார்த்து தமிழில் பேசுவது இது தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடு தான் அல்லவா. தனூஷ்கோடி அழிய காரணம் 1948 ல காந்தியின் அஸ்தி அங்கு கரைத்த பிறகு தான் அடுத்த புயலில் தனூஷ்கோடி அழிந்து குட்டிசுவர போச்சு என்று நீச்சல் காளி சொல்கிறார், யாரு நீச்சல் காளி என்றால் படித்து தெரிந்து கொள்க. வியட்நாம் போரின் போது அமெரிக்க ராணுவ களியாட்டம் போட தங்கள் நாட்டையும் பெண்களையும் விட்டு கொட்தது பாங்காக் அதன் விளைவாக தான் இன்னும் விபச்சாரம் அந்த நாட்டின் தேசிய தொழில். ஒரு மந்திரி " பெண்கள் நமது நாட்டின் இயற்கை சொத்து என்கிறார்" இன்னும் ஒரு மந்திரி " நிங்கள் செய்வது விபச்சாரம் அல்ல heroic என்றும் நாடு உங்கள் வளர்கிறது என்று சொல்கிறார். தாய்லாந்து சிவப்பு பகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை ஆண்டுக்கு 1,00,00,000.

அதிகாரம் அமைதி சுதந்திரம் என்று கட்டுரை இன்றைய காலத்தின் தேவை இங்கு எப்படி நாம் எல்லாம் வெறும் நுகர்வு பண்டமாக இருக்கிறோம் என்பது புரியும் என்ன தான் இப்படி அற்புதமாக எழுதினாலும் எவனாவது நாலு பேர் படிக்கனும் இல்லைனா என்ன காட்டு கத்து கத்தியும் என்ன பயன்?. சரபோஜி மன்னர் சாப்பிடும் கோழி கரி சமயல் எப்படி செய்வது என்ற சமயல் குறிப்பு இதில் இதில் இருக்கு. கடைசி கட்டுரை 100% உண்மை உண்மை உண்மை. அப்புறம் நான் இப்போது தான் எமினெமின் 50 cent tamil versoin கேட்டேன் இதுக்கு காரணம் சாரு தான். 

Thursday, November 2, 2017

நொறுங்கிய குடியரசு-அருந்ததி ராய்

புத்தகம் - நொறுங்கிய குடியரசு
எழுத்தாளர் : அருந்ததி ராய்
விருது : புக்கர் பரிசு பெற்றவர்
பதிப்பகம் : காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ்
முதல் பதிப்பு : 2011
பக்கங்கள் : 190


அருந்ததி ராய் இந்தியாவின் மிக முக்கியமான எழுத்தாளர். The God off small things என்று புத்தகத்திற்கு புக்கர் பரிசு பெற்று உலகளவில் அறியப்பட்டவர். இந்தியாவில் ஒடுக்கப்படும் காஷ்மீர் மணிப்பூர் நாகலாந்து போன்ற பல மக்களுக்கு குரல் கொடுப்பவர் இந்து மதத்தால் நடக்கும் அட்டுழியங்களை எதிர்த்து எழுதுபவர். இந்தியாவில் வளர்ச்சி என்ற பெயரில் நிலங்கள் கையகப்படுத்தும் அரசு அந்த இடத்தில் இருந்த தன் சொந்த நாட்டு மக்களை பலவந்தமாக துரத்துகிறது பிறகு ஏதோ ஒரு கன்பெனிக்கு அந்த இடம் கொடுக்கபடுகிறது பிறகு வெறும் ஏழு சதவிகித இலாபம் மட்டும் அவற்றிடம் இருந்து பெறுகிறது, அந்த கன்பெனிக்கு பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் கடற்கரை ஓரம் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை தருகிறது ஆனால் அந்த மக்கள் அனாதையாக கைவிடபடுகிறார்கள், ஒரு கணக்கு சொல்கிறது இப்படி இடம் மாற்றம் செய்யப்பட்ட மக்கள் எண்ணிக்கை 5 கோடி பேர் என்று. அறுபதாம் சுதந்திர தினம் கொண்டாட டெல்லியில் இருந்து தெரு வாசிகள் பலர் இப்படி அப்புறப்படுத்த பட்டார்கள் பிச்சைகாரர்கள் இருந்த இடம் தெரியாமல் ஆனார்கள் இதுதான் வளர்ச்சியா உண்மையில் யோசித்து பார்த்தால் இந்திய வறுமையை போக்கவில்லை வறுமையில் இருக்கும் மக்களை கொல்லவும் கூட செய்கிறது அரசு எப்போதும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பக்கமே நிற்கிறது இந்த தேசத்தின் ஏழை மக்களை அது மோசமாக நடத்துகிறது இதன் வெளிப்பாடு தான் 33 ரூ சம்பாதிக்கும் ஒருவர் வறுமை கோட்டிற்கு கிழ் இருப்பவர் இல்லை என்ற அறிவிப்பு கூட அரசு வறுமை போக்க திட்டம் போடுவதை விடை அதை மூடி மறைக்கவே திட்டம் போடுகிறது நம் அரசு செய்வது எல்லாம் நினைத்து பார்த்தால் நமக்கு வெட்கி தலைகுனிவாதாக தான் இருக்கிறது. பூர்வகுடி மக்களை அவர்கள் நிலத்தில் இருந்து விரட்டியடிக்க அரசு கையாளும் யுத்தியே மாவோயிஸ்ட் என்று சொல்கிறது முதல் பகுதி. அதே நேரத்தில் மாவோயிஸ்ட்களோ மக்களோ போராட்டத்தை விரும்பவில்லை மத்திய அரசு தான் அவர்கள் கையில் திணிக்கிறது என்று மாவோயிஸ்ட்களுக்கு வக்காலத்து வாங்கும் அருந்ததி ராய் தமிழ் ஈழம் விடுதலை புலிகளை மோசம் என்பது தான் எந்த தராசில் நிருத்தி எடை போடுவது என்று தெரியவில்லை.
இதன் முதல் பகுதியில் சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒரிசா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் மலைகளை வெட்டி பாக்ஸைட் எடுக்க அந்த இடத்தில் இருந்து பூர்வகுடி மக்கள் எவ்வாறு துரத்தியடிக்கபடுகிறார்கள் என்றும் எவ்வாறு மக்கள் ஒடுக்கபடுகிறார்கள் என்றும் விரிவாக பேசுகிறது.

மேலே ஏனோ வாசிக்க ஆர்வம் இல்லை.