இங்கே எழுதப்படுபவை என் வாசிப்பு நிரைவுக்காக மட்டுமே.

Wednesday, August 16, 2017

தோட்டியின் மகன்

தோட்டியின் மகன்

தோட்டியின் மகன்
ஆசிரியர் - தகழி சிவசங்கரன் பிள்ளை
தமிழில் - சுந்தர ராமசாமி
ஒரு தோட்டியின் மகன் வீடு வீடாக போய் மலத்தை மண்வெட்டியில் அள்ளி வளியில் போட்டு அதை பீப்பாய் வண்டியில் நிரப்பி அதை மலகிடங்கில் வந்து கொட்ட வேண்டும் இது தோட்டிகள் வேலை. ஏதோ மேல் எல்லாம் பீ நாற்றம் அடிப்பது போல புத்தகம் முழுவதும் நம்மையே அறியாமல் முகம் கோணிகொள்கிறது, மனது தீயில் நிற்பது போல இருக்கிறது.
எழுத்தாளர் இடம் ஒரு நீண்ட சாட்டை இருக்கிறது இது புத்தகம் முழுவதும் உங்களை தாக்கி காய படுத்தி கொண்டே வரும்.
"என்னப்பா இன்னைக்கு பாதிதான் இருக்கு எல்லா வீட்டுக்கும் போனயா?
எல்லா வீட்டுக்கும் போனேன் நேத்து எல்லாதுக்கும் தீனி  கொறவுபோல "
" என் வார்டுல நூத்துக்கு ஏழுவத்தஞ்சி அசீரணம் "
" மலத்தின் அளவு வைத்து சதி கூட பிரித்தார்கள் "
அவர்கள் மலத்தை வைத்து மனிதர்களை தெரிந்து கொண்டார்கள்.
மனிதர்கள் அன்றாடம் செய்யும் செயலுக்கு கூட அவர்கள் மிகவும் சிரமப்பட்டு செய்ய வேண்டும், நல்ல உணவு, உடை, நல்ல இருப்பிடம், குடிக்காமல் இருப்பது, பணம் சேமிப்பது, பிள்ளைகளுக்கு நல்ல பெயர் வைப்பது, வீடு கட்டுவது இப்படி எதுவுமே ஒரு தோட்டி செய்ய முடியாது.
எத்தனையோ இலட்சம் மக்கள் அந்த நகரத்தில் மூச்சு திணறி இறந்து இருக்கிறார்கள். சுவடே இல்லாமல் போன அந்த எண்ணற்ற ஆத்மாக்களின் சுவடு இந்த புத்தகம். அவர்கள் எல்லாம் திருநெல்வேலியில் இருந்து அழைத்து செல்லபட்டவர்கள்.
உங்கள் கண்ணில் இந்த புத்தகம் பட்டால் கட்டாயம் வாசித்து பாருங்கள்.

No comments:

Post a Comment