இங்கே எழுதப்படுபவை என் வாசிப்பு நிரைவுக்காக மட்டுமே.

Monday, August 7, 2017

கொலைஞன் - தஞ்சை பிரகாஷ்



இருபத்து ஐந்து பக்கங்கள் கொண்ட மிகச்சிறந்த சிறுகதை,
25 நாள் ஒரு குடும்பம் பட்டினி கிடக்கிறது, எட்டு பேர் வீடு முழுவதும் செத்து நுரைத்து கிடக்கிறார்கள்  அம்மா, தம்பி, தங்கச்சி உடல்கள். வேறு எதால் செத்தாலும் அது வெறும் சாவு, ஆனால் பசியால் செத்த அது கொலை பச்சை கொலை. இந்த கொலைக்கு யார் காரணம்? பார் இந்த கொலைக்கு பொறுப்பு? உங்கள் சட்டம் அவர்களை தண்டிக்குமா?. இந்தியாவில் குறிப்பிட்ட அளவு குழந்தை உணவுயின்றி மடிகிறது, இறப்கதற்காகவே பிறப்பெடுக்கிறது ?!. பரலோகத்தில் பசியின்றி இருக்கும் கடவுளுக்குற பசியின் கொடுமையை எப்படி புறிய வைப்பது?. கில்லர் ரெங்கராஜன் ஒரு கொலைகாரன், அப்போது இந்த சமுகம்? குற்றவாளிகள் எப்படி உருவாகிறாற்கள் கொலைகாரனாக மாற்றுகிறது. அரசியல் வாதிகள் தங்கள்சுகதள்திற்காக பதினாறு வயது உள்ள பெண்ணை ஏமாற்றுகிறார்கள் பிறகு அமிலம் கொண்டு அவளை உருக்கி கறைத்து சாக்கடையில் கலக்கிறார்கள் அவர்களுக்கு கில்லர் ரெங்கராஜன் தேவை, அரசியல் வாதிகளுக்கு கில்லர் ரெங்கராஜன் தேவை. அவனை உருவாக்கி விட்டனர் அவன் இல்லை என்றால் வேறுயாரையோ அவர்கள் தயார் செய்வார்கள். மரணமும் பசியும் அவனை துரத்துகிறது. கொலைகாரனின் மனம், வாழ்க்கையை இரத்தமும் சதையுமாக கண்முன் நிறுத்துகிறார் எழுத்தாளர், கில்லர் ரெங்கராஜன் அவன் உணர்வை புரிந்து கொள்ள உலகில் யாரும் இல்லை, இறுதியில் அவன் மனைவி சகுந்தலா அவனை முழுமையாக புரிந்து கொள்கிறாள், எவ்வளவு சிக்கலான ஒரு கொலைகாரனை அவள் சரியாக ஆழமாக புரிந்து கொள்கிறாள் என்ற போது நமக்கே ஏதோ சிலிர்ப்பாக இருக்கிறது.

"உலகத்தில் எந்த இலக்கியத்திலும் இப்படி ஒரு கதை இல்லை என்று எழுத்தாளர் சாரு நிவேதிதா சொல்கிறார்".


வாசிக்க இங்கே சொடுக்கவும்.

கொலைஞன் 

No comments:

Post a Comment