இங்கே எழுதப்படுபவை என் வாசிப்பு நிரைவுக்காக மட்டுமே.

Monday, July 31, 2017

எக்ஸைல் - சாரு நிவேதிதா

எக்ஸைல் - விமர்சனம்


இது ஒரு பின்நவினதுவ நாவல் என்பதால், நானும் பின்நவினதுவ முறையில் விமர்சனம் செய்து இருக்கிறேன்.

மொத்தத்தில் இந்த எக்ஸைல் புத்தகத்தில் சிறுகதை, கவிதை, சமையல் குறிப்பு, இயற்கை மருத்துவம், செக்ஸ் பிரச்சினை அதற்கு தீர்வுகள், Love Story, கல்ல காதல், உதையவின் சொந்த கதை, சோக கதை, பாலியல் கொடுமைகள், வரலாறு, ஆன்மிகம், நாத்திகம், அந்தரங்கம், சரக்கு பட்டியல்,வாசிய மருத்துவ தயாரிப்பு முறை, chiled abuse, கயல்லாஞ்சி கொடுரத்தின் உச்சம் எப்படி மனிதனுக்கு தன் சக மனிதன் மீது இத்தனை வன்மமும் வெறியும் வருகிறது?. (இவர்கள் இடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் கோக்கரகோ)  இப்படி எதோதோ இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு
இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு
இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு
இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு
இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு... இது ஒரு தகவல் பொக்கிஷம் என்று சொல்லலாம், சந்தேகமே இல்லாமல் கொண்டாட பட வேண்டிய நபர்  சாரு.
*இது இந்த புத்தகத்தின் இரண்டாவது கிளைமேக்ஸ்.
                 ~~~~
நீங்கள் சொல்லும் குஷால்தாஸ் எனது ஊகம் படி அது அந்த டுபாக்கூர் சாமியார் யோகி.பக்கி வாசுதேவ் என்று நினைக்கிறேன். அவர் ஆன்மிக கார்ப்பரேட் நிறுவனம் தான் தமிழகத்தில் பிரபலம். நித்தியானந்தா விடம் வேறு அனுபவம் இருந்து இருக்கிறது.
                    ~~~
எங்க ஊர்ல ஒரு எழுத்தாளர் இருக்கார், அவர் இப்படி சொல்வார். ட்ராபிக் போலிஸ் சொல்வதையே, ஒரு எழுத்தாளனும் சொன்னால், பிறகு அவன் என்ன எழுத்தாளர்???. இப்படி தான் உதையா* எழுதிய எக்ஸைல் இருக்கு. ஒரு வருடம் உங்கள் வாழ்கையில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகள், கொஞ்சம் அந்தரங்கம், நீங்கள் படிக்கும் முக்கியமானவை. இதை எல்லாம் ஒரு கோர்வைய எழுதினா நீங்களும் எக்ஸைல் புத்தகம் எழுதலாம். உதையா சொல்லும் தத்துவம் எல்லாம்  கோக்கரகோ* விற்கே  தோன்றி இருக்கிறது.
இதில் இதை ஐந்து லட்சம் செலவு செய்து ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்கிறார் உதையா . ஆங்கிலத்தில் ஒரு வேளை ஹிட் அடிக்கலாம் ஏன் என்றால் இதில் சொல்லப்படும் விஷயங்கள் கோக்கரகோ விற்கு ஏற்கனவே தெரியுமே ஒழிய ஆங்கில வாசகர்களுக்கு தெரியாது இல்லையா? அதனால் அங்கு இது கொண்டாட படலாம்.

*கோக்கரகோ என்பது வாசகன்(me).*சாரு நிவேதிதா தமிழக எழுத்தாளர், அப்புறம் உலகத்திலே மூனோ நாலோ பேரு தான் அவர் போல எழுதுராங்களாம்.


                     ~~~~
இப்படி தான் கோக்கரகோ விற்கு ஒரு அனுபவம். சரி உலக இலக்கியம் படிக்கலாம் தமிழில் தான் மொழி பெயர்ப்பு கொட்டி கிடக்கிறதே என்று ஃபியோடார் டோஸ்டோவ்ஸ்க இன் வெண்ணிற இரவுகள் வாங்கிவிட்டான். ஆச்சரியம் பாருங்க பத்து பக்கங்களுக்கு மேல் படிக்க முடியவில்லை அவ்வளவு மோசமான மொழிபெயர்ப்பு. அப்புறம் என்ன இன்னும் அந்த புத்தகம் தூங்குகிறது பணம் தான் வேஸ்ட்.
உதையாவிற்கு எப்படி பிற மொழியில் எழுத தெரியாதோ அதே போல கோக்கரகோ விற்கு ஆங்கிலம் படிக்க வராது. பிறகு எப்படி கோக்கரகோ Pablo neruda வையோ Fyodor Dostoevsky யோ Tolstoy யோ படிப்பான். டால்டாய் புத்தகங்கள் ஒரளவு நல்ல மொழிபெயர்ப்பு இருப்பதாக கேள்வி. தமிழ் சூழலில் எழுத்தாளர் படும் படு, அதை நாவல் முழுக்க புலம்பி தள்ளுகிறார் சாரு பாவம்.                  
                       ~~~~~
Kokkarako body temperature 103° degrees today, medically it's called fever, so...... Dr billed 500rs, tupied Dr not told him after injection injected you may get Allure, so Kokkarako allured in street, then one old grandma helped him, like this today  indian Dr. Kokarakko also same as udhaya how can explain loneliness he spends 27 yr lonely still continuing, Kokkarako hearing hmm kulthum elf leila we leila. Kokkarako watching Ray (Jamie boxx).
                       ~~~~
சரி இனி விஷயத்திற்கு வருவோம், பல இடங்களில் சாட்டையடியாக சமுகத்தை கேள்வி கேட்கிறார் உதையா. நூறு பேர் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்ததை உதையா கற்பழிப்பு என்று எழுதுகிறார் கோக்கரகோ விற்கு தூக்கி வாரி போட்டுவிட்டது. மனித மனதின் கீழ்மையை வெட்டி வெட்டி வைக்கிறார் உதையா, கலாச்சாரம் இனம் மொழி என்று எப்படி உழன்று கொண்டு இருக்கிறான் என்று தெளிவாக விளக்குகிறார். இதற்காகவே உதையாவை கொண்டாட தான் வேண்டும். குமுதம், ராணி, குங்குமம் படித்துவிட்டு சாண்டில்யன் தடி தடியான நாவல் கொஞ்சம், பாலகுமாரன் நாவல் கொஞ்சம் இதை படிச்சிட்டு நான் பெரிய இலக்கிய புடுங்கி என்று பலர் தமிழகத்தில் இருக்கிறார்கள். இவர்கள் எங்கு உதையாவை வாசிக்க போறாங்க, நீ ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்வதே சால சிறந்தது உதையா.
*இது கிளைமேக்ஸ்.
                     ~~~~
கிட்டத்தட்ட இந்த உலகில் அணைத்து பெண்களும் child abuse க்கு ஆளாகதவர்களே இல்லை என்று சொல்லலாம். காமம் மனிதனை எந்த கீழ்மையை நோக்கியும் தள்ளுகிறது, கமத்திற்காக தனது சக மனிதனை சக உயிரை எத்தனை கொடுமையும் செய்கிறான் ச்சே .பெண் என்னும் உயிரை எப்படி எல்லாம் வதைகிறான் oh என் சிவனே திவாகர் போன்ற அற்ப்ப மானிட பதர்களை நசுக்கி இல்லாமல் செய்ய மாட்டாயா? உமையெரு பங்கம் கொடுத்தாயே, ஏன் என்று இந்த ஆன்மா அற்ற மனித புழுக்களுக்கு சொல்லமாட்டாயா. கோக்கரகோ also have (had) one girls friend like அஞ்சலி you remember me everything, ho man I can't control my self. Those days feeling killing me, killing every minute , killing every second. I can't read anjali childwood abuse. Plz stop anjali stop. Ho no what happened to me?............................
                      ~~~~~
இன்று கோக்கரகோ அலுவலகத்தில் எக்ஸைல் படித்தான், அவன் அலுவலகத்திற்கு வந்து போகும் ஒருவர் அப்போது வந்தார் அதனால் கோக்கரகோ புத்தகத்தை மூடிவிட்டான் அவர் என்ன புத்தகம் என்று கேட்க கோ சாரு நிவேதிதா என்று சொல்ல, ஏண்டா டேய் செக்ஸ் கதை படிக்ர இடமா இது? நீ எப்படி அலுவலகத்தில் இதை படிக்கலாம்? இதில் எந்த செக்ஸ்யும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை, அவர் செக்ஸ் மூலமாக நடக்கும் மனித கீழ்மைகளை தான் சொல்கிறார். அது எல்லாம் ஒன்னும் இல்லை எல்லாம் செக்ஸ் கதை தான், நீங்கள் சாரு வை படித்து இருக்கீங்களா? என்றான் கோ, நான் பக்கம் பக்கமாக அவர் புத்தகத்தை அவர் இடமே விவாதிப்பேன், அவர் வீடு இங்க தான் வரியா போலாம், அவர் உடன் பழகி இருக்கேன் புகைப்படம் எடுத்து இருக்கேன் அவர் பத்தி எனக்கு தெரியாதா? அவரை பற்றி சொல்ல ஒரு பக்கம் படித்தால் போதாத? எல்லாம் ஆபாச கதைகள் என்றார் அந்த ஆசாமி. நீங்கள் ஒரு பக்கம் படித்து விட்டு சாரு ஒரு செக்ஸ் பைத்தியக்காரன் என்று சொல்ரீங்க, நான் 441 பக்கமும் படித்து விட்டு சாரு is great என்று சொல்கிறேன், பெண் குழந்தையை யாரோ ஒருவனை நம்பி வீட்டில் விட்டு போனா இதான் நடக்கும் என்று செருப்பால் அத்தது போல பச்சையாக சாரு சொல்கிறார்,அதில் எனக்கு எந்த ஆபாசமும் தெரியவில்லை, இதில் உங்களுக்கு ஆபாசம் தான் தெரிகிறது அதன் கருத்து தெரியவில்லை என்றால் நீங்கள் இலக்கியம் வாசிக்கவே இலாய்க்கு இல்லை என்றான் கோக்கரகோ. வேறு எதுவும் பேசாமல் ஜெயவேல் சென்றுவிட்டார். அடுத்த நாள் அலுவலகம் வந்த கோக்கரகோ விற்கு பெரும் அதிர்ச்சி, அவன் பாஸ் அவனை அழைத்து நீ இங்க ஒழுங்கா வேலை செய்வது இல்லை, நீ சரி இல்லை, உனக்கு பதில் வேறு ஆளை போட்டு இருக்கலாம் என்று அவன் தலையில் கல்லை போட்டார்கள். ( நான் அப்படி என்ன செய்து விட்டேன் சாரு? இவர்களும் உதையவின் எஸ்யும் ஒன்று தான்).

உதையா தன் எக்ஸ் இன் கெட்டு போன முலை பாலை இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை எடுத்து அவள் வலியை நீக்குகிறான், இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை மலம் சாப்பிடுவது போல இருந்து என்று உதையா சொல்கிறான். அவள் தூரத் துணிகளை துவைக்கிறான்,இன்னும் எதோதோ செய்கிறான், ஆனால் அவள் உதையவின் வீட்டை எடுத்து கொண்டு இவரை நடு தெருவில் விடுகிறாள், உதையவின் வாழ்க்கையை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது கோக்கரகோ. (இங்கு தான் பெண்களை அடிமையாகவே வைத்து இருப்பது தான் சிறந்தது என்று தோன்றுகிறது, நம் முன்னோர்கள் என்ன முட்டாளா? கோ).
                          ~~~~~
ஆற்று நீர் போல் சட சட சட சட சட சட என்று எளிமையாக ஓட்டமும் நடையுமாக போகிறது, ஆனால் transgressive, auto fiction நாவலை வாசிக்க நுண்ணுணர்வு தேவை, தமிழ் சூழலில் அறவே அது இல்லை எனலாம். அதனால் தான் சாரு எல்லோர் இடமும் திட்டு வாங்கிகொண்டு இருக்கிறார். அவரை வாசிப்பவர் எல்லோருக்கும் அவர் செக்ஸ் தான் தெரிகிறது அதன் கருத்து சரடு தெரிவதில்லை அது நுண்ணுணர்வு உள்ளவர்களுக்கு மட்டுமே கைகூடும். 

No comments:

Post a Comment