இங்கே எழுதப்படுபவை என் வாசிப்பு நிரைவுக்காக மட்டுமே.

Sunday, July 30, 2017

பசித்த மானிடம் - கரிசான் குஞ்சு

நாவல்            : பசித்த மானிடம் 
எழுத்தாளர்    : கரிச்சான் குஞ்சு(நாராயணசாமி) 
நாவல் வகை  : இலக்கிய புதினம் 
நாவல் அளவு  : 267 பக்கங்கள் 
பதிப்பகம்         : காலச்சுவடு


மனிதனுக்கு வயிறு பசியை விட பெரிய பசி உடல் பசி, உடல் பசியை மையமாக கொண்டு இந்த நாவல் எழுதப்பட்டு உள்ளது.
வாழ்வின் இருவேறு துருவங்கள், கணேசன் வாழ்வில் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் போன போக்கில் வாழ்கிறான். கிட்டா கடினமாக உழைத்து பணம் காசு அந்தஸ்து என்று உயர்ந்து திருமணம் செய்து பிள்ளை குட்டி என்று வாழ்கிறான். 1946 காலகட்டத்தில் கணேசன் ஒருவர் உடல் பசிக்கு வைப்பாட்டியாக செல்கிறான் என்பது தமிழ் சூழலில் வியப்பாக உள்ளது. சுமார் பத்து வருடங்கள் ராவுத்துர் இடம் இருக்கிறான் பிறகு ஒரு ஜவுளி தொழிலாளர் உடன் பிறகு அவனுக்கே உடல் பசிக்கிறது தேடி கொண்டு போய்விடுகிறான். ஒரு டீச்சர் உடன் சிலகாலம், பிறகு ஒரு லேடி டாக்டர் அவனை வைத்து அவள் உடல் பசி தீர்த்து கொள்கிறாள், விளைவு கணேசனுக்கு தொழு நோய் வந்துவிடுகிறது. பிறகும் ஒரு பிச்சைகார குருடியோடு வாழ்கிறான். அன்பு தான் இந்த உலகில் அடிப்படை ஆதாரம் என்று நாம் நினைக்கையில் கணேசன் அப்படி ஒரு இடத்திற்கு போகிறான் முதலில் அவனும் அப்படி தான் நினைத்தான் நாள் ஓட ஓட அவன் உள் இருக்கும் அந்த காமம் உடைத்து கொண்டு வழிகிறது, தங்கள் வாழ்வை அன்பு கொண்டு நிறைத்து கொண்ட அந்த கன்னியாஸ்திரிகள் இடம் காமம் பிறக்க அங்கு இருந்து கிளம்பி விடுகிறான். புறக்கணிப்பு பசி என்று முழு பிச்சைகாரனாக தெரு தெருவாக சுற்றி கொண்டு கணேசன் வாழ்க்கை வாழ்கிறான் ஆனால் எந்த நிலையிலும் அவனுக்கு தற்கொலை எண்ணம் வந்ததே இல்லை . கிட்டா கார் ஓட்ட கற்று கொண்டு, பிறகு மெடிக்கல் கடையில் வேலை பார்த்து பிறகு மெடிக்கல் வைத்து உயர்கிறான் ஆனால் வாழ்வில் எந்த திருப்தியும் இல்லை,தன்னையே வெறுக்கும் நிலை. கணேசன் தன் வாழ்க்கை குறித்து பரம திருப்தி இறுதியில் ஞானியாக வேறு ஆகிவிடுகிறான். உனக்கு என்ன தேவையோ எதன் பொருட்டு நீ அவர்கள் மேல் எல்லாம் பிரியமாக இருந்தாயோ அதே போல் தானே அவர்கள் தேவைக்கு உன்னிடம் அவர்கள் பிரியமாக இருந்தார்கள், இங்கு அவர்களை விட வேறு யார் மீதும் பிரியமாக இருக்க முடியாது. ஆனால் நீ உன்னையும் இழந்து விட்டு உன்னையே உனக்கு பிடிக்கவில்லை என்று சொல்லும் நிலைக்கு வந்துடயே கிட்டா, தற்கொலை விட மோசமானது தன்னை வெறுப்பது தான், உயிரை அழிக்ரேனு உடலை அழித்து கொள்ளும் பைத்தியக்கார தனம் தான் தற்கொலை கிட்டா என்று கணேசன் கிட்டாவிற்கு உபதேசிக்கிறான்.

வாழ்க்கையில் நாம் எதையெதையோ  சாப்பிடுகிறோம், நம்மையும் எதெல்லாமோ சாப்பிட்டு ஏப்பம் விடுகிறது.

No comments:

Post a Comment