இங்கே எழுதப்படுபவை என் வாசிப்பு நிரைவுக்காக மட்டுமே.

Monday, July 31, 2017

ஒரு நாள்- கா நா சு

ஒரு நாள் - கந்தாடை நாராயணசாமி சுப்ரமண்யம்.



நாவல்              :ஒரு நாள்
எழுத்தாளர்     : கா நா சுப்ரமணியம்
வகை                : இலக்கியம்
பதிப்பகம்        : ஷாண்வி புக்ஸ்
பக்கங்கள்       : 176

ஹிட்லர் படையில் ஒரு போர் வீரனாக இருந்து பிறகு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அழைப்பின் பேரில் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய மேஜர் கிருஷ்ணா மூர்த்தி, உறவினர் யாரும் இல்லாததால் தன் மாமா வீட்டிற்கு அறை குறை மனத்தோடு சாத்தனூர் சர்வமானிய அங்கரஹாரத்தற்கு வருகிறார். பல ஆண்டுகளாக எந்த மாற்றமும் தனக்குள் அனுமதிக்காத அங்கரஹாரம் அது. ஜெர்மன், பர்மா இந்திய தேசிய ராணுவம் என்று பல போர் களங்களில் மனித வேட்டைகளை பார்த்து வாழ்ந்த மூர்த்தி ஒரு நாள் சாத்தநூர் அக்ரஹாரம் வந்து அங்கு இருக்கும் சாதாரண மனிதர்களின் வாழ்கையை பால கூறுகளாக விரிவாக மூர்த்தி அவர் மாமாவின் உரையாடல் மூலம் விரிகிறது நாவல். மனித வாழ்வின் பல்வேறு சிக்கல்களை தீர்த்துவிட முடியுமா என்று விவாதித்து பார்க்கிறார்கள். மனிதன் பொருப்புக்கள் இல்லாமல் தனியாக இருக்கவே விரும்புகிறான் ஆனால் அனைவர் வாழ்விலும் அவர்கள் சுமந்தே தீரவேண்டிய கடமைகள் உள்ளது என்பதை குறிப்பாக உணர்த்துகிறது நாவல். மனிதனின் வாழ்வில் ஆதார பிடிப்பு குடும்பம் என்னும் அமைப்பு, அதில் இருந்து எந்த சுதந்திர மனிதனும் விலகி விட முடியாது என்று மூர்த்தி மூலம் உணர்த்துகிறார் கா. நா சு. 

No comments:

Post a Comment