இங்கே எழுதப்படுபவை என் வாசிப்பு நிரைவுக்காக மட்டுமே.

Monday, July 30, 2018

இடக்கை - விமர்சனம்

நாவல் - இடக்கை
எழுத்தாளர் - எஸ் ராமகிருஷ்ணன்
பதிப்பகம் - உயிர்மை
விலை -375ரூ




ஔரங்கசிப் மரணப்படுக்கையில் இருந்து தொடங்கும் நாவல், பல்வேறு கிளை விரித்து வளர்கிறது. சிறு சிறு அத்யாயங்களாக இருப்பதால்  தடையில்லாமல் வாசிக்க உதவியாக இருக்கிறது. பொதுவாக நம் சமுகம் நீதி உணர்வற்ற சமுகமாக நாம் மாறி வருகிறோம், ஜெயமோகன் நாவலில் ஒரு வரி வரும் 'நாம் செய்ய வேண்டியது எல்லாம் நமக்கு தெரிந்த நீதி உணர்ச்சி மீது ஒரு கை மண்ணை அள்ளி போடவேண்டியது தான்' என்று அதே தான் நாம் அனைவரும் செய்து கொண்டு இருக்கிறோம். நீதி நேர்மைகளை கேலியாக்கி சிரிக்கிறோம். நம் நீதி உணர்ச்சி மீது ஒரு கை மண்ணை அள்ளி நாமே போட்டு கொள்கிறோம். ஆனால் இந்த தேசத்தில் தான் பல நீதி நூல்கள் நீதி கதைகள் எழுதப்பட்டு இருக்கிறது. இந்த நாவலும் நீதிக்காக காத்திருப்பவர்களின் குமுறலாகவும் நீதி மறுக்கப்பட்டவர்களின் துயரமாகவும் தான் பேசுகிறது. ஒரு பேரரசின் வீழ்ச்சி எப்படி எளிய மனிதர்களையும் பாதிக்கிறது என்றும் அரசு நீதியுணச்சி இல்லாமல் இருந்தால் என்ன நடக்கும் என்று இடக்கை சொல்கிறது. விளிம்பு நிலை மனிதர்கள் வாழ்வு அன்றும் இன்றும் ஒன்றுபோலவே தான் இருக்கிறது என்பதையும் பேசும் இடக்கை.  சத்கர் ஔரங்கசிப் ஆட்சியின் கீழ் கப்பம் கட்டும் சிற்றரசு அதன் அரசன் பிஷாடன். ஒரு நாளைக்கு இரண்டு வழக்குகள் மட்டுமே விசாரிக்கும் பிஷாட மன்னன் ஒருவனுக்கு தூக்கு மற்றொன்று னுக்கு விடுதலை என்று கண்மூடிதணமாக திர்ப்பு சொல்வதானால் பல வழக்குகள் தேக்கி கிடக்கிறது, பலர் தங்களது நீதிக்காக காத்து இருக்கிறார்கள், அவர்கள் அனைவரும் காலா என்ற இடத்தில் அடைக்கபடுகிறார்கள்,அப்படி கைது செய்து கொண்டுவரபட்டவன் தான் தூமகேது, ஆட்டு தோல் பதப்படுத்துதல் அவன் தொழில் அதனால் அவன் ஆடு திருடினான் என்று பொய் குற்றச்சாட்டு மீது கைது செய்ய படுகிறான். தூமகேது வழியாக தான் நாவல் பயணிக்கிறது. ஒருமுறை தூமகேது பொது கிணற்றில் குளித்து விடுகிறான், தாழ்த்தப்பட்ட சாதியினார் எப்படி இதை செய்யலாம் என்று அவனுக்குத் தண்டனையாக நாய் மலத்தை வாயில் ஊற்றுவார்கள். தாழ்த்தப்பட்டவர்கள் வாயில் சிறுநீர் கழிப்பது என்பது இன்று வட இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகள் தான் மனிதன் கலாச்சாரம் மட்டுமன்றி இது போன்ற இழிவுகளையும் தொடர்ந்து பின்பற்றிவருவது மிக மோசமான ஒன்று. நமது உட‌லி‌ல் வலது கை தான் திருட்டு கொலை என்று அனைத்து குற்றங்களையும் செய்கிறது ஆனால் நாம் தண்டிப்பதோ இடது கை தான், பல்வேறு நல்ல விஷயங்களை தொடங்கும் போது இடது கையை பயன்படுத்த கூடாது என்று தண்டிக்கிறோம். அரசியலிலும் இதுவே தான் நடக்கிறது குற்றமிழைப்பவர்கள் எல்லாம் அரசு அரசியல்வாதிகள் அரசு சார்ந்த அதிகாரத்தில் இருப்பவர்கள், ஆனால் தண்டிக்கப்படுவது எல்லாம் சாதாரண மக்கள் ஏழை எளிய மக்கள். உண்மையில் அறிவியல் மட்டுமே வளர்ந்து இருக்கிறதே ஒழிய மனிதனும் அரசியலும் இன்னும் எத்தனை நூற்றாண்டு கடந்தாலும் மாறாது என்றே தோன்றுகிறது. இந்த நாவலின் இன்னோறு கதாபாத்திரம் அஜ்யா மேகம் நம்மை நிலைகுலைய செய்கிறது, பேரரசர்களின் அந்தரங்க பணி பெண் என்றால் மரணத்தின் கத்தி முனையில் நடப்பதற்கு சமமானது, அந்த வித்தையில் ஔரங்கசிப் இடம் அஜ்யா வெற்றி பெற்று இருந்தாலும் ஔரங்கசிப் நினைத்தது போலவே அவர் மரணத்திற்கு பிறகு அஜ்யா மிக மோசமான சித்ரவதைக்கு ஆளாகி இறந்து போவது ஆழமான பாதிப்பை நமக்கு ஏற்படுத்துகிறது. வெறும் கதை என்ன செய்யும் என்று கேட்பவர்களுக்கு இந்த நாவல் விடை தருகிறது தூமகேது சொல்லும் கதைகளாள் தான் அவன் சிறையில் இருந்து தப்பிகிரான் என்பது எனக்கும் முதல் அனுபவம். நாவல் தொடக்கத்தில் ஔரங்கசிப் ஒரு ரூபியிடம் ஞானம் கேட்க போவார் அந்த ரூபி அவருக்கு ஒரு கை தண்ணீரை காணிக்கையாக கொடுக்க சொல்வார் ஒரு நாட்டின் பேரரசர் ஒரு கை தண்ணீரை கூட கொடுக்க முடியாத நிலை வரும் அதான் வாழ்க்கையின் நிர்வாண உண்மை. இந்த நாவலை முடியும் போது அதே உணர்வு தான் தோன்றுகிறது பேரரசர் கைகளில் இருந்த ஒரு பொருள் சாதாரண பிச்சைக்காரன் கைக்கு வந்து சேரும், இப்படி தத்துவர்தமாக பக்கங்கள் பல. வரலாறு என்பது அரசர்களின் அரண்மனை வாழ்வும் வரலாறாகவும் தான் பதியப்பட்டு இருக்கிறது, எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் எளிய மனிதர்களின் வரலாறாக இதை எழுதி இருக்கிறார். ஒரு பேரரசின் வீழ்ச்சி எப்படி சாதாரண விளிம்புநிலை மக்களின் வாழ்வை புரட்டி போடுகிறது என்று பதிவு செய்து இருக்கிறார். வரலாற்றில் பல கிறுக்கு அரசர் ஆட்சி செய்து இருக்கிறார்கள் அவர்களால் மக்கள் அடைந்த துயரங்களையும் இந்த நாவல் பேசுகிறது, இதில் வரும் பிஷாடன் என்ற அரசர் எந்த அளவுக்கு கிறுக்கு என்றால் 'எதிரி நாட்டு மன்னன் நம் மக்கள் மீது படையெடுத்து அவர்களை துன்புறுத்துவதற்கு பதிலாக நாமே நம் மக்களை துன்புறுத்தினால் என்ன?' என்று ஒரு முறை அவன் மாமா இடம் சொல்லுவான். நமக்கு விருப்பமானவர்கள் மரணத்தை அறுகில் இருந்து பார்ப்பது சுகமானது என்றும் சொல்பவன், இப்படி பட்ட மன்னன் ஆட்சியில் மக்கள் வாழ்கை நிலை எப்படி இருக்கும் என்பதை பேசுகிறது நாவல். ஒரு புத்தகம் தான் இன்னோறு புத்தகத்திற்கு வழி காட்டும் அல்லாது நான் ஏற்கெனவே படித்த சிறந்த ஒன்றை நினைவுபடுத்தும், கடைசி அத்தியாயத்திற்கு முன் அத்தியாயம் தஞ்சை பிரகாஷ் அவர்களின் 'புறா சோக்கு' நினைவு படுத்தியது. தூமகேது ஒரு முறை தன்னை ஒரு தூக்கு கயிறு விற்பவர் என்று ஜலீல் என்ற கவிஞர் இடம் கூறுவான், அரசின் கெடுபிடிகளை, அநீதியை எதிர்த்து அரசை தண்டிக்க முடியாதவர்கள் தங்களை தாங்களே தண்டித்து கொள்ள தூக்கு கயிறு விற்பதாக சொல்லுவான், என்னை தூமகேது போன்றவர்களின் குரலாக என் கவிதைகள் இனி பேசும் என்பான் ஜலீல்.  கண்ணீர், துக்கம், ஏமாற்றம் பசி என்று அனைத்தையும் சுமந்தவாரு யாத்ரீகர்கள் பாடலை கேட்டு கொண்டு தனது இடக்கையை மெல்ல அசைத்து தாளமிடுவன் தூமகேது. ஒரு நாவல் உங்கள் மனதின் மேடு பள்ளங்களில் பல நாள்கள் அலையடித்து தொடரும் என்றால் அதுவே சிறந்த புத்தகம்.



Monday, January 1, 2018

கடந்த ஆண்டு 2017 நான் வாசித்த புத்தகங்கள்.



கடந்த ஆண்டு 2017 நான் வாசித்த புத்தகங்கள்.


1).செம்மீன்- தகழி சிவசங்கரன் பிள்ளை. (மொழிபெயர்ப்பு சுந்தர ராமசாமி) *
2).வாடிவாசல்- சி.சு செல்லப்பா. *
3).அசுரகனம்-கா.ந சுப்ரமணியம்.
4).தேர்ந்தெடுத்த கதைகள்-கி.ராஜநாராயணன். *
5).ஒரு காதல் திவந்தம்-பாலகுமாரன்.
6).ஏழாம் உலகம் - ஜெயமோகன்.
7).சிவப்புச் சின்னங்கள்-எம். சுகுமாரன். ( மொழிபெயர்ப்பு நிர்மால்யா) *
8).ஒற்றன்- அசோகமித்திரன்.
9).தலைச்சுமை-பழமன்.
10).ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் - ஜான் பெர்க்கின்ஸ். *
11).குறு நாவல்கள் - ஜெயமோகன்.
12).மலைவாசல் - சாண்டில்யன்.
13).எக்ஸைல் - சாரு நிவேதிதா*
14).ஜே ஜே வின் சில குறிப்புகள்-சுந்தர ராமசாமி. (130 பக்கங்கள் படித்து தலைவலி வந்து திருத்தப்பட்டது).
15).வில்லோடு வா நிலவே - வைரமுத்து.
16).ஒரு நாள் - கா.ந சுப்ரமணியம்.
17). பசித்த மானிடம் - கரிசான் குஞ்சு*
18).வெண்முரசு - முதற்கனல் - ஜெயமோகன்
19).வெண்முரசு - மழைப்பாடல் - ஜெயமோகன்.
20).வாழ்வது எப்படி - சாரு நிவேதிதா.
21) ஜீரோ டிகிரி- சாரு நிவேதிதா. *
22). குட்டி இளவரசன்-அந்த்வான் து செந்த்-எக்சுபெரி.
23).திசை அறியும் பறவைகள் - சாரு நிவேதிதா *
24). கடவுளும் சைத்தானும் - சாரு நிவேதிதா.
25).ஏலேய் - பூமணி
26).வெண்முரசு - வண்ணக்கடல் - ஜெயமோகன்.
27).பழுப்பு நிறபக்கங்கள் -சாரு நிவேதிதா.(பகுதி-1).

* குறிபிட்டவை கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகங்கள்.

Monday, December 18, 2017

மகாத்மா காந்தி கொலை வழக்கு - என். சொக்கன்



மகாத்மா காந்தி கொலை வழக்கு - என். சொக்கன்.
கடந்த நான்கு நாட்களாக காந்தி பற்றிய பேச்சுகலாகவே இருந்தது அத்த நேரத்தில் தான், மகாத்மா காந்தியின் கொலை வழக்கு என்ற புத்தகம் கிடைத்தது.இந்தியாவே கொண்டாடிய ஒரு மனிதரை ஏன் உலகமே கொண்டாடிய ஒரு மாமனிதரை எதற்காக கொன்றார்கள் யார் கொன்றார்கள். என்ற இக்கேள்வி உள்ளவர்களுக்கு இந்த புத்தகம் ஒரு விடை. ஏன் கொன்றார்கள்  என்ற கேள்விக்கு ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்லி இருந்தாலும் எதற்காக எப்படி கொலை நடந்தது என்று மிக விரிவாக பேசுகிறது இந்தப் புத்தகம். "நமது பூமி புனித பூமி அதை தெய்வ தன்மை இல்லாததாக மாற்ற விரும்பவில்லை மக்களை  பலியிட்டு அடைகின்ற சுதந்திரம் நமக்கு தேவையில்லை அப்படி அடையும் சுதந்திரம் நிலைக்காது என்றார் - காந்தி" அவர் எதை தடுக்க நினைத்தாரோ அது சுதந்திர இந்தியாவில்  நடந்தது கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் ரத்தத்தால் உரைத்தது மதக்கலவரங்களால்  லட்ச கணக்கான மக்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டார்கள். உண்மையில் காவல்துறை நினைத்திருந்தால் படுகொலையை தடுத்து இருக்கலாம் ஜனவரி 20ம் தேதி மகாத்மா ஒரு வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது அப்போது மதன்லால் என்ற ஒருவன் கைது செய்யப்பட்டான் அவன் காவல்துறையிடம் வேறு பல வாக்குமூலங்களை சொன்னான் அவன் அடிக்கடி ஒன்றைத் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான் அது அவர்கள் மீண்டும் வருவார்கள் என்பதுதான்.  இதை வைத்து காவல்துறை விசாரித்திருந்தால் மாபெரும் கொலையில் தடுத்திருக்கலாம் ஆனால் ஆனால் மும்பை  மற்றும் டெல்லி காவல் துறை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை இதன் விளைவாக பத்து நாள் கழித்து மகாத்மா காந்தி கொல்லப்பட்டார்.

காந்தி கொலைக்கு இவர்கள் திட்டமிட்டது எல்லாம் விளையாட்டு தனமான ஒன்றாக தான் திட்டம் போட்டு இருக்கிறார்கள். நாதுராம் கோட்ஸே இன்று இந்து முன்னணி RSS போற்றவர்கள் கொண்டாடுகிறார்கள். காந்தியின் கொலை ஒரு தவறான புரிதலால் நிகழ்ந்தது காந்தி இஸ்லாமியர்களுக்காக பேசவில்லை அவர் அறம் எதுவோ அதைத்தான் பேசினார். அவர் மதத்தின் பெயரால் படுகொலை செய்யப்பட்டார் இந்தியாவின் முதல் பெரும் வழக்கு இது எப்படி நடந்தது என்ன தீர்ப்பு வந்தது என்ன ஆவணங்கள் யார் எல்லாம் சாட்சி சொன்னார்கள் என்று இந்த புத்தகம் பேசுகிறது.