இங்கே எழுதப்படுபவை என் வாசிப்பு நிரைவுக்காக மட்டுமே.

Showing posts with label இலக்கியம். Show all posts
Showing posts with label இலக்கியம். Show all posts

Monday, August 27, 2018

நெடுங்குருதி-எஸ் ராமகிருஷ்ணன்

நெடுங்குருதி-எஸ் ராமகிருஷ்ணன்




வாழ்வின் நேரடி எதார்த்தத்தையும் நுட்பமான காட்சிப் படிமங்களின் சித்தரையும் கொண்டு உயிர்ப்புடன் குறுக்கும் நெடுக்குமாக நெய்யப்பட்ட ஒரு அற்புத படைப்பு தான் நெடுங்குருதி. நாவலின் கதை வேம்பலை என்ற கிராமத்தில் மக்களையும் அவர்களின் வாழ்வையும் புனைவு எதார்த்தமாக சித்தரித்துக் காட்டும் ஒரு படைப்பு நாவலின் முதல் பகுதி 'கோடைக்காலம் ' 'காற்றடிகாலம்' இந்த இரண்டு பகுதியுமே நாகு என்ற மைய கதாபாத்திரத்தின் வாழ்வியலோடு நாகுவின் பதின்பருவத்து அக உள சித்தரிப்பக மேலே விரிகிறது. ஊரை விட்டு வெளியே இருக்கும் புறவழிச்சாலை வழியாக எறும்புகள் சாரையாக செல்வதை பார்த்து கொண்டு இருந்தான் நாகு என்று தொடங்குகிறது நாவல். ஒரு எறும்பு ஊரை விட்டு வெளியேறி செல்கிறது என்றால் பெரும் பஞ்சம் வருவதற்கான குறியீட்டாக எறும்புகள் இருக்கிறது. வேம்பர்கள் களவை தொழிலாகக் கொண்டவர்கள் வெள்ளையர்களின் ஆட்சி காலத்தில் வேம்பர்களை அடக்குவதற்காக வெல்சி என்ற வெள்ளைய அதிகாரி வேம்பர்களை அந்த ஊரில் இருக்கும் ஒரு வேப்ப மரத்தில் தூக்கிலிடுகிறான். அந்த வேம்பு பிறகு பூக்கவோ காய்கவோ இல்லை, இதற்காக பதவி உயர்வு கிடைத்து வேறு இடத்திற்கு சென்ற பிறகு மர்மமான முறையில் இறந்து போகிறான், இந்த நிகழ்வு நாவலோடு ஒட்டாமல் மெல்லிய விலகலை கொடுப்பதாக தோன்றுகிறது. வரலாற்றுச் செய்தியாக அது தனியாக நின்று விடுகிறது. வேம்பலை என்ற கிராமத்தை நினைக்கும்போது மனதில் ஒட்டுமொத்த சித்திரமாக தோன்றுவது பக்ரீயின் மனைவி வீடு ஆதிலட்சுமி வீடு சில வேப்ப மரங்கள் இவை மட்டுமே தோன்றுகிறது நாவலில் புறவயமான காட்சி விரிப்புக்கள் குறைவாக இருப்பதே இதற்கு காரணம் அந்த கிராமத்தில் இருந்த மற்ற குடும்பங்கள் பற்றியோ அவர்களின் தொழில் வாழ்க்கை முறை பற்றி அதிகமாக வருவதில்லை, கிராமத்திற்கும் வெளி உலகிற்கும் உள்ள உறவும் எதுவும் இல்லை, நாகுவின் ஐய்யா கொண்டு வரும் பெட்ரமாஸ் லைட் மற்றும் செருப்பு தவிர. பெட்ரமாஸ் லைட் புழக்கத்திற்கு வந்தது 1910ஆம் ஆண்டுக்குப் பிறகு கைரேகை தடைச்சட்டம் சென்னை மாகாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது 1924ம் ஆண்டு நாகு இறக்கும் போது வயது 35 என வைத்துக் கொண்டால் நாவல் தொடங்கப்பட்டு 1905 ஆம் ஆண்டு முதல் நாவலின் இறுதி 1950ஆம் ஆண்டு எனக் கொள்ளலாம். ஏனென்றால் நாவல் தொடங்கும் போது நாகுவின் வயது பதினொன்று என்று தொடங்குகிறது. முதல் பகுதியில் வரும் நாகு பதின்வயதின் சித்தரிப்பாக வருகிறான் இரண்டாம் பகுதியில் வரும் நாகு முற்றிலும் வேறுவகையான நாகு. இரண்டாம் பகுதியில் வரும் நாகு அலைந்து திரிபவன் ஆகவும், காமத்தின் அலைகழிப்பாகவும் சுற்றி அலைகிறான். பெரிய களவு எதிலும் ஈடுபடாத நாகு துப்புக்கூலி மட்டும் ஒரு முறை பெற்ற நாகு கைரேகை தடைச்சட்டத்தின் போது காவல்துறையால் சுட்டுக் கொல்லப்படுகிறான் இது நம்மை திடுக்கிட்ட செய்கிறது. மொத்த வேம்பலையும் கூட பெரிய களவில் ஈடுபடவில்லை என்று தோன்றுகின்து. நாகுவின் மரணத்திற்கு பிறகு கிராம மக்கள் சாய செய்தார்களா என்று தெரியவில்லை. இப்படி நாவல் முழுவதும் பல மரணங்கள் வந்து கொண்டே இருக்கிறது மரணங்கள் ஊடே காலம் நீண்டு நெளிந்து சென்று கொண்டு இருக்கிறது. நாகுவின் ஐய்யா நாவலில் முக்கிய கதாபாத்திரம் பெரிதாக எந்த சண்டையும் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே போய்விடுகிறார் பல ஆண்டுகள் கழித்து வருகிறார். திரும்பவும் பரதேசியாக போகிறார் ஒரு கோவிலில் நாகு அவரை கண்டுபிடித்து வேம்பலைக்கு கூட்டிவருகிறான். இயலாமையும், இருப்புகொள்ளாமையும், வறுமையும் அவரை அலைக்கழிக்கிறது. பெரிதாக பேசப்படவில்லை என்றாலும் ஊகங்கள் வழியாக அவர் வளர்ந்து இருப்பது நம்மையும் அறியாமல் அவர் இறப்பின் போது பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. உதாரணமாக பக்கீரின் கொலையில் அவருக்கு இருக்கும் தொடர்பு பற்றி பேசப்படவில்லை என்பது.

மரணத்தோடு தன் காய்களை நகர்த்தி விளையாடிக்கொண்டிருக்கும் சிங்கி மூலமாகத்தான் ஒரு இடத்தில் களவு வருகிறது. குழந்தைகளின் கழுத்தில் இருக்கும் நகைகளை சிங்கி களவாடுவது இல்லை என்று சொல்லப்படுகிறது இதைத்தவிர களவை மையமாகக் கொண்ட ஒரு நாவலில் களவு பற்றி எங்கும் பெரிதாக பேசப்படவில்லை. அதேபோல் நாவலில் வட்டார வழக்கு மொழிகள் எதுவும் உருவாக்கப்படவில்லை அனைத்தும் எழுத்தாளரின் சிறந்த தனித்தன்மையுடைய மொழியின் வாயிலாகவே வெளிப்படுகிறது எந்த கதாபாத்திரமும் அதிகமாக உரையாடுவதே இல்லை. இது நாவளின் தனி சிறப்பாகவே எனக்கு தோன்றுகிறது. ரத்தினா மல்லிகாவை பார்க்க வரும் இடத்தில் எந்த ஒரு உரையாடலோ ஆசிரியரின் வழியாகவோ கூட பேசப்படவில்லை வேம்பின் பெரும் கசப்பு மௌனத்தின் ஊடாக உறைந்து நிற்கிறது. நாவலின் நெகிழ்வான இடம் நீலாவின் சமாதியில் இருக்கு மண் புழுவை கொண்டு வந்து "வீட்டடியிலே இருந்துகோ தாயி..." என்று நாகுவின் ஐய்யா சொல்லும் இடம் இலக்கியத்தின் உச்ச தருணம். கோடைக்காலம், காற்றடிகாலம், மழைக்காலம், பனிக் காலம் என்று நாவல் நான்கு பகுதிகளாக எழுதி இருந்தாலும் அனைத்திலும் உறைவது பெரும் வெய்யில் தான், நாவல் முழுக்க வெயில் வருகிறது, அதே போல் வேம்பின் தீரா கசப்பு, கசப்பு நிறைந்த அந்த மக்களின் வாழ்வை அசைபோட்ட படி குறியீட்டு சித்திரமாக மனதில் பதிகிறது.

நாவலின் இரண்டாம் பகுதி நேரடியாக நவீன வாழ்க்கையை சித்தரிக்கிறது பேருந்து, ஹோட்டல், லாட்ஜ், சாலை, கார் என்று நவீன உலக தொடர்போடு விரிகிறது. வேம்பலையின் இரண்டாம் தலைமுறை திருமால், வசந்தா. காதல் கம்யூனிஸம் பற்றி பேசப்படுகிறது ஆனால் அவர்களின் வாழ்வில் எந்த மாற்றமும் இல்லை வேம்பர்களின் அதே கசப்பு மிகுந்த வாழ்வே எஞ்சுகிறது. லாட்ஜ் லாட்ஜக தனிமையில் சுற்றி திரியும் ரத்தனா தன் வாழ்வை முடித்துக் கொள்ளும் தருணம் மீண்டும் அதே கசப்பேறிய வாழ்வின் வெறுப்பு வெளிப்படுகிறது. ஆனால் அவள் விரும்பிப் பெற்றுக் கொண்ட திருமாலின் மீது ஏன் வெறுப்பாகவே இருந்தாள் என்பது புரியவில்லை. ரத்தினா தத்தனேரி சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறாள் தமிழின் மிகச்சிறந்த எழுத்தாளர் மதுரையைச் சேர்ந்த ஜி நாகராஜன் தத்தனேரி சுடுகாட்டில் தான் தகனம் செய்யப்பட்டார், ஆக கதை களம் மதுரையை ஒட்டிய பகுதி என்பது உறுதியாகிறது.

வெறுமை நிறைந்த வாழ்வு, வறுமையும், துக்கமும் அன்பும், மரணமும் நிறைந்து நிற்கும் வேம்பலை அதன் முதாதையர்களின் மூச்சு காற்றும் மனிதர்களை வசியப்படுத்தி தன்னுள் இழுத்து கொண்டே இருக்கிறது. அதன் தொடர்ச்சியே மீண்டும் ஒரு நாகு வேம்பலை நேக்கி போகிறான் அங்கிருந்து அடுத்த தலைமுறையின் கதை தொடங்குகிறது. அரையப்பட்ட ஆணிகளும், காயங்களும் தன்னுள் புதைத்து கொண்டு மீண்டும் பூத்து காய்க்கும் அந்த வேம்பை போல அவர்கள் வாழ்வும் கசபின்றி செழிக்கலாம். "நெடுங்குருதி" வாழ்வின் எதார்த்த கலை இலக்கியத்தின் உச்சம். 

Monday, July 30, 2018

இடக்கை - விமர்சனம்

நாவல் - இடக்கை
எழுத்தாளர் - எஸ் ராமகிருஷ்ணன்
பதிப்பகம் - உயிர்மை
விலை -375ரூ




ஔரங்கசிப் மரணப்படுக்கையில் இருந்து தொடங்கும் நாவல், பல்வேறு கிளை விரித்து வளர்கிறது. சிறு சிறு அத்யாயங்களாக இருப்பதால்  தடையில்லாமல் வாசிக்க உதவியாக இருக்கிறது. பொதுவாக நம் சமுகம் நீதி உணர்வற்ற சமுகமாக நாம் மாறி வருகிறோம், ஜெயமோகன் நாவலில் ஒரு வரி வரும் 'நாம் செய்ய வேண்டியது எல்லாம் நமக்கு தெரிந்த நீதி உணர்ச்சி மீது ஒரு கை மண்ணை அள்ளி போடவேண்டியது தான்' என்று அதே தான் நாம் அனைவரும் செய்து கொண்டு இருக்கிறோம். நீதி நேர்மைகளை கேலியாக்கி சிரிக்கிறோம். நம் நீதி உணர்ச்சி மீது ஒரு கை மண்ணை அள்ளி நாமே போட்டு கொள்கிறோம். ஆனால் இந்த தேசத்தில் தான் பல நீதி நூல்கள் நீதி கதைகள் எழுதப்பட்டு இருக்கிறது. இந்த நாவலும் நீதிக்காக காத்திருப்பவர்களின் குமுறலாகவும் நீதி மறுக்கப்பட்டவர்களின் துயரமாகவும் தான் பேசுகிறது. ஒரு பேரரசின் வீழ்ச்சி எப்படி எளிய மனிதர்களையும் பாதிக்கிறது என்றும் அரசு நீதியுணச்சி இல்லாமல் இருந்தால் என்ன நடக்கும் என்று இடக்கை சொல்கிறது. விளிம்பு நிலை மனிதர்கள் வாழ்வு அன்றும் இன்றும் ஒன்றுபோலவே தான் இருக்கிறது என்பதையும் பேசும் இடக்கை.  சத்கர் ஔரங்கசிப் ஆட்சியின் கீழ் கப்பம் கட்டும் சிற்றரசு அதன் அரசன் பிஷாடன். ஒரு நாளைக்கு இரண்டு வழக்குகள் மட்டுமே விசாரிக்கும் பிஷாட மன்னன் ஒருவனுக்கு தூக்கு மற்றொன்று னுக்கு விடுதலை என்று கண்மூடிதணமாக திர்ப்பு சொல்வதானால் பல வழக்குகள் தேக்கி கிடக்கிறது, பலர் தங்களது நீதிக்காக காத்து இருக்கிறார்கள், அவர்கள் அனைவரும் காலா என்ற இடத்தில் அடைக்கபடுகிறார்கள்,அப்படி கைது செய்து கொண்டுவரபட்டவன் தான் தூமகேது, ஆட்டு தோல் பதப்படுத்துதல் அவன் தொழில் அதனால் அவன் ஆடு திருடினான் என்று பொய் குற்றச்சாட்டு மீது கைது செய்ய படுகிறான். தூமகேது வழியாக தான் நாவல் பயணிக்கிறது. ஒருமுறை தூமகேது பொது கிணற்றில் குளித்து விடுகிறான், தாழ்த்தப்பட்ட சாதியினார் எப்படி இதை செய்யலாம் என்று அவனுக்குத் தண்டனையாக நாய் மலத்தை வாயில் ஊற்றுவார்கள். தாழ்த்தப்பட்டவர்கள் வாயில் சிறுநீர் கழிப்பது என்பது இன்று வட இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகள் தான் மனிதன் கலாச்சாரம் மட்டுமன்றி இது போன்ற இழிவுகளையும் தொடர்ந்து பின்பற்றிவருவது மிக மோசமான ஒன்று. நமது உட‌லி‌ல் வலது கை தான் திருட்டு கொலை என்று அனைத்து குற்றங்களையும் செய்கிறது ஆனால் நாம் தண்டிப்பதோ இடது கை தான், பல்வேறு நல்ல விஷயங்களை தொடங்கும் போது இடது கையை பயன்படுத்த கூடாது என்று தண்டிக்கிறோம். அரசியலிலும் இதுவே தான் நடக்கிறது குற்றமிழைப்பவர்கள் எல்லாம் அரசு அரசியல்வாதிகள் அரசு சார்ந்த அதிகாரத்தில் இருப்பவர்கள், ஆனால் தண்டிக்கப்படுவது எல்லாம் சாதாரண மக்கள் ஏழை எளிய மக்கள். உண்மையில் அறிவியல் மட்டுமே வளர்ந்து இருக்கிறதே ஒழிய மனிதனும் அரசியலும் இன்னும் எத்தனை நூற்றாண்டு கடந்தாலும் மாறாது என்றே தோன்றுகிறது. இந்த நாவலின் இன்னோறு கதாபாத்திரம் அஜ்யா மேகம் நம்மை நிலைகுலைய செய்கிறது, பேரரசர்களின் அந்தரங்க பணி பெண் என்றால் மரணத்தின் கத்தி முனையில் நடப்பதற்கு சமமானது, அந்த வித்தையில் ஔரங்கசிப் இடம் அஜ்யா வெற்றி பெற்று இருந்தாலும் ஔரங்கசிப் நினைத்தது போலவே அவர் மரணத்திற்கு பிறகு அஜ்யா மிக மோசமான சித்ரவதைக்கு ஆளாகி இறந்து போவது ஆழமான பாதிப்பை நமக்கு ஏற்படுத்துகிறது. வெறும் கதை என்ன செய்யும் என்று கேட்பவர்களுக்கு இந்த நாவல் விடை தருகிறது தூமகேது சொல்லும் கதைகளாள் தான் அவன் சிறையில் இருந்து தப்பிகிரான் என்பது எனக்கும் முதல் அனுபவம். நாவல் தொடக்கத்தில் ஔரங்கசிப் ஒரு ரூபியிடம் ஞானம் கேட்க போவார் அந்த ரூபி அவருக்கு ஒரு கை தண்ணீரை காணிக்கையாக கொடுக்க சொல்வார் ஒரு நாட்டின் பேரரசர் ஒரு கை தண்ணீரை கூட கொடுக்க முடியாத நிலை வரும் அதான் வாழ்க்கையின் நிர்வாண உண்மை. இந்த நாவலை முடியும் போது அதே உணர்வு தான் தோன்றுகிறது பேரரசர் கைகளில் இருந்த ஒரு பொருள் சாதாரண பிச்சைக்காரன் கைக்கு வந்து சேரும், இப்படி தத்துவர்தமாக பக்கங்கள் பல. வரலாறு என்பது அரசர்களின் அரண்மனை வாழ்வும் வரலாறாகவும் தான் பதியப்பட்டு இருக்கிறது, எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் எளிய மனிதர்களின் வரலாறாக இதை எழுதி இருக்கிறார். ஒரு பேரரசின் வீழ்ச்சி எப்படி சாதாரண விளிம்புநிலை மக்களின் வாழ்வை புரட்டி போடுகிறது என்று பதிவு செய்து இருக்கிறார். வரலாற்றில் பல கிறுக்கு அரசர் ஆட்சி செய்து இருக்கிறார்கள் அவர்களால் மக்கள் அடைந்த துயரங்களையும் இந்த நாவல் பேசுகிறது, இதில் வரும் பிஷாடன் என்ற அரசர் எந்த அளவுக்கு கிறுக்கு என்றால் 'எதிரி நாட்டு மன்னன் நம் மக்கள் மீது படையெடுத்து அவர்களை துன்புறுத்துவதற்கு பதிலாக நாமே நம் மக்களை துன்புறுத்தினால் என்ன?' என்று ஒரு முறை அவன் மாமா இடம் சொல்லுவான். நமக்கு விருப்பமானவர்கள் மரணத்தை அறுகில் இருந்து பார்ப்பது சுகமானது என்றும் சொல்பவன், இப்படி பட்ட மன்னன் ஆட்சியில் மக்கள் வாழ்கை நிலை எப்படி இருக்கும் என்பதை பேசுகிறது நாவல். ஒரு புத்தகம் தான் இன்னோறு புத்தகத்திற்கு வழி காட்டும் அல்லாது நான் ஏற்கெனவே படித்த சிறந்த ஒன்றை நினைவுபடுத்தும், கடைசி அத்தியாயத்திற்கு முன் அத்தியாயம் தஞ்சை பிரகாஷ் அவர்களின் 'புறா சோக்கு' நினைவு படுத்தியது. தூமகேது ஒரு முறை தன்னை ஒரு தூக்கு கயிறு விற்பவர் என்று ஜலீல் என்ற கவிஞர் இடம் கூறுவான், அரசின் கெடுபிடிகளை, அநீதியை எதிர்த்து அரசை தண்டிக்க முடியாதவர்கள் தங்களை தாங்களே தண்டித்து கொள்ள தூக்கு கயிறு விற்பதாக சொல்லுவான், என்னை தூமகேது போன்றவர்களின் குரலாக என் கவிதைகள் இனி பேசும் என்பான் ஜலீல்.  கண்ணீர், துக்கம், ஏமாற்றம் பசி என்று அனைத்தையும் சுமந்தவாரு யாத்ரீகர்கள் பாடலை கேட்டு கொண்டு தனது இடக்கையை மெல்ல அசைத்து தாளமிடுவன் தூமகேது. ஒரு நாவல் உங்கள் மனதின் மேடு பள்ளங்களில் பல நாள்கள் அலையடித்து தொடரும் என்றால் அதுவே சிறந்த புத்தகம்.



Monday, December 4, 2017

வெண்முரசு - வண்ணக்கடல்




ஏழ்தெங்க நாட்டு பழையன் அவையில் நுழைந்த இளநாகன், உன் வெண்குடை நாய் குடை என்று பன் பாடி அதற்காக அவன் துரத்தப்படுவதால் மதுரைக்கு தப்பி ஒட அங்கு இருந்த அஸ்தினபுரம் போகிறான். இளநாகன் பஃறுளி ஆற்றைகடந்து தென் மதுரையை அடைகிறான், பஃறுளி ஆறு மறைந்த குமரிகண்டத்தில் ஓடிய ஆறு, ஏழ்தெங்க நாடும் குமரிகண்டநாடு,  காட்சிகள் விரிப்பால் மனம் மிக எளிதாக குமரிகண்டத்தில் ஒன்றி விடுகிறது. சதசிருங்கத்திலிருந்து தனது ஐந்து மைந்தர்கள் உடன் குந்தி நகர் திரும்பும் வழியில் நதியில் எழுந்த கார்க்கோடகன் எனும் நாகம் பிருதையின் சூரியபுதல்வன் இருக்கும் இடத்தை காட்டி விதி பயனை உரைத்து மறைந்தான். கதையும் காட்சி விரிப்பும் காவிய நடையில் நகர்வதால் சற்றே கடினமான தோன்றாலாம்..
"விண்பனித்து திரண்ட முதல்துளியென சிற்றுடலில் விழித்த பிரக்ஞை உணர்வு குடியேறா வண்ணங்களில் உவமை நிகழா வடிவங்களில் தன்னைக் கண்டு நீ பிரம்மம் என்றது"
இதை போன்ற வரிகளை வாசிக்கும் அதே வேகத்தில் கற்பனை செய்வது கடினமே ஆக இரு முறை கூறிய வாசிப்பு தேவையாகிறது. துரியோதனன் பீமன் மார் போர் செய்கிறார்கள் வெற்றி யாருக்கும் அல்ல இறுதி என் உயிர் யாருக்கேனும் தருவதாக இருந்தால் என் தமயன் துரியோதனன்க்கு அளிக்கிறேன் என்று பீமன் வாக்கு சொல்கிறான். ஆனால் விண்ணாளும் தெய்வங்கள் தங்கள் விளையாட களங்களும் காய்களும் அல்லவா தாயர் செய்கின்றனர் அவர்கள் ஆட்டிவிக்கும் பாவைகள் அல்லவா இவர்கள், அவை இவர்களை எதிரெதிர் களத்தில் அல்லவா நிறுத்துகிறது. துரியோதனனை கொல்ல வந்த கரடியிடம் இருந்து அவனை காபற்றியதன் மூலம் வெறுப்பும் குரோதமும் அணல் என மேல் எழுகிறது வளர்கிறது. பரசுராமரும் பீஷ்மரும் சரத்வானும் மட்டுமே வெல்ல முடிந்த மாபெரும் வீரனை இந்த சமுகம் எவ்வளவு எளிமையாக மிக மூர்க்கமாக காயபடுத்துகிறது குலம் இனம் என்று எந்த ஒரு மாவீரனையும் இழிந்துரைக்கிறது இந்த சமுகம், பிறந்த நாள் முதல் புறக்கணிப்பும் அவமரியாதைகளையுமே சந்தித்து கூனி குறுகும் துரோணருக்காக அகம் நீர் குமிழ்னென உடைந்து கனக்கிறது. வில் கொண்டு வெல்ல முடியாத மாவீரனை சொல் கொண்டு மிக மென்மையான தாக்கி அவனை நிலைகுலையவைக்கிறதே சமுகம். துரோணர் எதிர்காலத்தில் என்னவாக ஆவார் என்று தெரியவில்லை ஆனால் அவர் அகத்தில் இருக்கும் ஆற்றாமை மூர்க்கம் கொண்டு சினந்தெழும் போது துரோணர் முன் எதுவும் நிற்க இயலாது என்று தோன்றுகின்து.

நடப்பவை அனைத்தும் வரவிருக்கும் பாரத போருக்காக என்பதால் எதிர் எதிர் நிற்க போரவர்களை அகம் எளிதில கண்டைய விழைகிறது , துரியோதனன் - பீமன், அர்ஜுனன் - கர்ணன், ஆனால் பீமன் வாக்கு தன் உயிர் தன் தமயன் துரியோதனன்க்கு என்றும் அஸ்வத்தாமனை எந்த நிலையிலும் கொல்ல கூடாது என்ற துரோணர் சொல்லும் இருக்கிறது அப்போது இறுதியில் நிகழபோவது என்ன என்பது இந்த காய்களை நகர்த்தும் பிரம்மமே அறியும். கொடை என்றால் அது கர்ணன் என்று நாம் அறிந்ததே அப்படி பட்ட கர்ணனின் கொடை வெண்முரசுசில் எவ்வாறு அறிமுகம் ஆவர் என்று பெரிதும் எதிர்பார்த்தேன் அது ஒரு அருமையான தருணம் எதிர்பார்க்காத இடத்தில் சட்டென்று நிகழ்கிறது அது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.  வாழ்நாள் எல்லாம் அவமரியாதையும் புரக்கனிப்பும் சந்தித்த துரோணர் கர்ணனை பார்த்து நான் சூதனுக்கு கற்ப்பிப்பது இல்லை என்று சொல்லும் தருணம் ஏதோ நெருடல் கொடுக்கிறது. இந்த புவியியல் அவமரியாதை, புரக்கனிப்புக்கு நிகரான நரகம் வேறில்லை என்று ஒர் இடத்தில் வருகிறது அதே அவமரியாதை துரோணரக்கு இனையாக கர்ணன் அடையும் போது துரோணரக்கு அகம் உருகியதை விட கர்ணனுக்கு உடைந்து விம்முகிறது இயல்பாகவே அந்த இடத்தை நாம் அடைய வேண்டும் என்பது தான் கர்ணன் பாத்திரம் பளுபெரும் அது தன்னிச்சையாக நடக்கிறது அல்லது எழுத்தாளர் நுட்பம். மீண்டும் ஏகலைவன் துரோணரால் புரக்கனிக்கபடுகிறான் ஏகலைவன் துரோணரை அக கண் கொண்டு வித்தை பழகிவிட்டதால் குரு கனிக்கையாக கட்டைவிரல் பெற்ற சபையில் ஏகலைவன் அன்னையின் தீ சொல் துரோணரை படைகலத்தில் வேரறுக்கு ஆற்றல் கொண்டது அந்த ஊழ் என்றோ ஒரு நாள் அவர் முன் எழும். குரோதமும் பொறாமையும் இயல்பாகவே இரு அணிகளை எதிர் எதிராக பிரிக்கிறது அது களம் காணும் நிகழ்வில் நிகழ்கிறது. வண்ணக்கடல் புரக்கனிக்கபட்டவர்கள் வழியாக தொடங்கி முடிகிறது அதே சரடு தான் மஹாபாரதத்தின் மய்யத்தை உருவாக்கப் போவதாகவும் உள்ளது.


வண்ணக்கடல் வாசிக்க தொடங்கியதில் இருந்து " மண்மறைந்த ", "மண்மறையும்" இந்த சொல் மட்டுமே நளொன்றுக்கு பத்து முறையாவது அகத்தி எழுகிறது ஏன் என்று அறிய முடியவில்லை.

www.venmurasu.in

Tuesday, October 24, 2017

குட்டி இளவரசன்-அந்த்வான் து செந்த்-எக்சுபெரி



இது ஒரு குழந்தை இலக்கிய நூல் போன்று இருந்தாலும் மனிதர்களின் அற்தமற்ற செயல்களை செவிடீல் அரைகிறது. ஏன் மனிதர்கள் அங்கும் இங்கும் அலைகிறார்கள் இந்த இடம் பிடிக்கவில்லையா ஏன் இடமாறுகிறார்கள் என்று கேட்கிறபோது நமக்கு தோன்றுகிறது ஏன் நாம் அங்கும் இங்கும் அலைகிறோம்?. இவர்களாள் ஒரு
ரோஜா செடியை புரிந்து கொள்ள முடியவில்லை ஆனால் ஆயிரக்கணக்கான ரோஜா செடி எதற்கு வளர்க்கிறார்கள் என்று பல கேள்விகள் குட்டி இளவரசன் கேட்கிறான். பெரியவர்களுக்கு எப்போதும் எல்லாவற்றுக்கும் விளக்கம் தேவை ஆனால் குழந்தைகள் தாங்களாகவே ஆனைத்தையும் யூகித்துக் கொள்கிறது. ஒரு மலை பாம்பு யானையை முழுங்கிய படம் வரைகிறான் அதை பலர் இடம் காட்டிய போது அது ஒரு தொப்பி என்று சொல்கிறார்கள் பிறகு உள்புறம் யானை இருப்பது போல ஒரு படம் வரைகிறான் அதை காட்டும் போது எதாவது உருப்படியான வேலை செய் என்று சொல்கிறார்கள் இப்படி தான் ஓவியம் வரைவதை அவன் கைவிட்டான்.

"பெரியவர்கள் ஒரு போதும்  எதையும் தாங்களாகவே புரிந்து கொள்வதில்லை. எப்போதும் ஒயாமல் விளக்கங்களைத் தருவது குழந்தைகளுக்குச் சலிப்பு தருவதாக இருக்கிறது"

குட்டி இளவரசன் நரி ரோஜா செடி பாம்பு என்று எல்லவற்றுடனும் பேசுகிறான் புறிந்து கொள்கிறான் ஆனால் அவனால் மனிதர்களை, மட்டும் புரிந்து கொள்ளவே முடியவில்லை. மனிதர்கள் எல்லோரும் தங்களுக்கு கீழ்பனிய சொல்கிறார்கள் அல்லது கட்டலை போடுகிறார்கள் அவர் உறவை ஏற்படுத்த விரும்பவில்லை உறவை துண்டிக்கவே நினைக்கிறார்கள் இது தான் இந்த சிறிய புத்தகத்தின் மையம் என்று நினைக்கிறேன்.

குட்டி இளவரசன் இதுவரை 173 மொழிகளில் வெளியாகி 80 மில்லியன் பிரதிகள் விற்பனையாகி உள்ளது. 1943ல் வெளியான இந்த நாவல் தமிழில் 1981 ஆண்டு க்ரியா பதிப்பக  வெளியீடாக வந்துள்ளது. மிக சிறப்பாக இந்த நாவலை பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்த்தவர்கள் மதனகல்யாணி மற்றும் வெ. ஸ்ரீராம்.

Friday, October 20, 2017

ஜீரோ டிகிரி - விமர்சனம்

நாவல் : ஸீரோ டிகிரி
எழுத்தாளர் : சாரு நிவேதிதா
பதிப்பகம் : ஜியே பதிப்பகம்
முதல் பதிப்பு : 1998
பக்கங்கள் : 252
வகை :  நான் லீனியர் நாவல்
விருது : சுவிட்சர்லாந்தின் யான் மிஸால்ஸ்கி இலக்கிய விருதுக்கு  2013-ஆம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்டது. 



முனியாண்டி கடும் உழைப்பாளி எந்த வேலையும் தட்டாமல் செய்வான் ஆனால் பேச்சு என்று வந்தால் வாக் னா வாக் டாக் னா டாக் பேக் னா பேக் சாக்னா எழுதுறது லுக்னா பாக்குறது பெக்னா சரக்கு இப்படி தான் பேசுவான்.

[°]

நீனா மாதிரி எத்தனை எத்தனை நீனாக்கள் வரலாற்றில் சுவடே இல்லாமல் கொடுமை சித்ரவதைகள் அனுபவித்து இருப்பார்கள் என்று நினைத்தால் கடும் மன வலி எழுகிறது. அதுவும் ஒரு மாகா ராணியின் பெண் அடுத்த நாள் யாருக்கோ அடிமை. வரலாற்றில் நாம் வீரம் என்று கொண்டாடுவது எல்லாம் இதை தானா, அடுத்த நாட்டை கைப்பற்றுவது, அவன் பிள்ளைகள் மனைவிகளை அடிமை படுத்தி தாசியாக விற்பது, அல்லது அனந்தபுரத்தில் தள்ளுவது. தமிழர்கள் தலைமேல் வைத்து ஆடிகொண்டு இருக்கும் இராஜராஜ சோழன் செய்ததும் இதை தானே?.முனியாண்டி எங்கு செத்தான் தென் ஆப்பிரிக்கா அல்லது காஸ்மீரா?. கல்வியறிவு உயர்ந்து மட்டும் என்ன பயன் இன்னும் சாமியார்கள் பெண்களை வன்புணர்வு செய்து கொண்டு தானே இருக்கிறார்கள் அப்போ எதுவும் மாறபோவது இல்லையா மனித அகம் எத்தனை நூற்றாண்டு கடந்தாலும் தனக்குள் இருக்கும் அந்த கொடுர குணத்தை கடத்தி கொண்டே தான் இருக்குமா.

[°]

கூண்டு கிளியின்
குஞ்சுற்கு
ஏன்
சிறகுகள்
முளைக்கிறது ?

[°]

ஒன்பதாம் நூற்றாண்டு செத்த மூளை இது வரை சாரு வின் மூன்று புத்தகம் படித்து இருக்கிறான் எக்ஸைல் வாழ்வது எப்படி சீரோ டீகிரி இந்த மூன்றையும் வைத்து ஒன்பதாம் நூற்றாண்டு செத்த மூளை சொன்னது சாரு எழுதுவது சரிபாதி அவர் சொந்த கதை சோக கதை என்று. ஒன்றை எழுதுவது பிறகு அதை விட்டுவிட்டு வேறு எதையாவது எழுதுவது பிறகு எப்போ தோன்றுகிறதோ அப்போது அதை ஐம்பது பக்கம் தாண்டி எழுதுவது கேட்டால் உலகத்தில் இப்படி எழுத ரெண்டோ மூன்றோ பேர் தான் இருக்கிறார்கள் அதில் நானும் ஒருவன் என்று விளக்கம் தருவார்.
முனியாண்டியை நாய் துரத்துகிறது வல் வள் வள் கல் வள் வாஆல் வள் வள் வள் வள் வள் வள் வள் வள் வள் வள் வள் வள் க்கள் வல் கல் வல்.   புகழ் பெற்ற விளையாட்டு வீரர் மணிக்கு முப்பது ஒரு கிலோமீட்டர் வேகத்தில் ஓடுகிறார்.
தேன் மூத்திரம் நாய் பானை இரும்பு விந்து மரம் வைப்பாட்டி வாசனை நான் கோழி மலம் வீடு மூக்கு சளி மொழி எல்லாம் வெறும் சத்தத்தால் ஆனது இந்த உலகமே சத்தங்களால் ஆனது இப்போது எழுதி கொண்டு இருக்கும் இதுவும் தான். எக்ஸைல் இல் வரும் திவாகர் நாய் போலவே இதிலும் ஒருவன்.

{°}

இதில் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் எல்லாம் நம் எங்கோ அன்றாடம் கேட்பது படிப்பது ஒரு கண்ணாடி அறை உள் நடப்பவை நாம் அறிந்து இருந்தாலும் அவர்களின் குரல் நம் காதில் விழுவதில்லை அந்த குரல்களின் அலறல் தான் சாரு வின் எழுத்து அதை தான் டார்ன்கிஸ்யும் ரைட்டிங் என்று சொல்கிறார்கள் அப்புறம் இது பின்நவினதுவம் என்ற வார்த்தை ஒத்துவரவில்லை நான்லீனியர் நான் சரி ¿. பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் அனைத்தும் செக்ஸ் சம்மந்தப்பட்டது என்பதால் அதை அதே வார்த்தைகள் கொண்டு சாரு சாடுகிறார் ஆனால் அதில் இங்கு வாசிப்பவர்களுக்கு அந்த ஆபாச வார்த்தைகள் தான் தெரிகிறதே ஒழிய அவர் பேசும் பொருள் புரிவதில்லை இதனா‌ல் சாரு ஒரு குப்பை என்று அவரை நாடு கடத்தி தூக்கில் போட வேண்டும் என்று எல்லாம் பேசுகிறார்கள். மூடர்கள். நீனா விற்கு போய் பிடித்து விட்டது அதனால் அவள் முலை மொட்டை வெட்டி எடுத்தான் அந்த சாமியார் பிறகு அதில் பிளகாய் பொடி அள்ளி கொட்டினான் இதை எப்படி எழுதுவது ரோஜா மொட்டு கிள்ளப்பட்டது என்றா பைத்தியக்காரத்தனம் மாக இல்லை செக்ஸ் பற்றிய புரிதல் இல்லாமை தான் இதற்கு காரணம். என்று சுத்த தமிழ் எழுத்தாளன் சொல்கிறான்.

[¿]

காஸ்மேனியர்கள் கார்மீனியர்களை கொள்கிறார்கள் கார்மீனியர்களை கார்மீனியர்கள் கொள்கிறார்கள்  என்ன வித்தியாசம் ஒரு எழுத்து தாணே ஆனால் இது 2700 ஆண்டுகளாக இது நடந்து வருகிறது கார்மீனியர்கள் கிருஸ்துவர்கள் அரேபியர்கள் அந்த நாட்டை கைப்பற்றிய போது (1908) சுமார் பதினெட்டு லட்சம் மக்கள் கொள்ளப்பட்டார்கள் இப்படி உலகம் முழுவதும் எத்தனையோ படுகொலைகள் இன்று முதல் நடந்து கொண்டு நான் இருக்கிறது பிறகு என்ன தான் வளச்சியோ என்ன எழவோ ஒன்று புரியவில்லை. இப்படி genocide மத சண்டை சாதி சண்டை பெண்கள் கொடுமைகள் என்று எல்லவற்றையும் சாடுகிறார் சாரு இதனால் தான் என்னவோ சாரு நிவேதிதா நாகரீகம் முன்னேற்றம் என்ற பழமைவாத ஒழுக்க விதிகளை எட்டி மிதிக்கிறார் போலும் எந்த மாற்றமும் நிகழாத போது பிறகு என்ன ஒழுக்கம் கட்டுபாடு வெங்காயம் கந்தரிக்காய் என்று.

[°]

தாயுமானவன் போன்றவர்கள் ஏன் சக மனிதனை இந்தனை கொடுமை செய்கிறார்கள், மனித அகம் ஏன் மற்ற மனிதன் துண்ப படும் போது மகிழ்கிறது அவனுள் இருக்கும் மிருக தனமா மிருகங்கள் இப்படி செய்கிறதா. மனிதர்கள் தான் தன் சக மனிதனை எப்படி எல்லாம் கொடுமை படுத்தலாம் என்று ஆயிரம் ஆயிரம் வழிகளை கண்டுபிடித்து இருக்கிறான் வரலாற்றில் என்ன என்ன சித்ரவதை முறைகள் இருந்தன என்று பார்த்தால் தலை கிறுகிறுக்கும் இப்படி எல்லாம் மனிதன் சிந்திக்க முடியுமா என்று தோன்றும். தாயுமானவன் வாயில் கொதிக்கும் எண்ணெய் ஊற்றினால் என்ன செய்வான் அம்மனை வேண்டுவனா. அவன் கால் தசையை மெழுகுவர்த்தியால் சுட்டு வெட்டி எடுத்து வெந்துவிட்டதா என்று சாபிட சொன்னால். Zero° degree is point of a perfect 360° circul we all are standing in zero point we can watch around the entire world but we don't but charu did this then only can write zero degree.

[°]

இந்த நாவலின் சவால் பல பக்கங்களில் சிதறி கிடக்கும் நாவல் பகுதிகளை ஒன்று திரட்டி தொகுத்து கொள்வது தான். உங்கள் நாட்டில் யானை இருந்தும் நீங்கள் ஏன் உண்பது இல்லை. வித்தியாசமான அனுபவம் கிடைக்கும் உண்மை. சரி நீங்களும் வாசித்து தான் பாருங்களேன்.

[.....]

Tuesday, September 26, 2017

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாவல் : ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
எழுத்தாளர் : ஜெயகாந்தன்
பக்கங்கள் : 330
பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்





கிருஷ்ணாபுரம் என்னும் கிராமத்தில் வாழ்ந்த ஒரு மனிதன் இல்லை ஒரு வீட்டு இல்லை ஒரு உலகத்தின் கதை. சபாபதி பிள்ளை என்ற அவர் தனது மனைவி வேறு ஒருவனுடன் ஓடி போனதை இரவோடு இரவாக மறைப்பதற்காக இவரும் வீட்டை விட்டு ஓடி விடுகிறார், கிராமம் அவர்கள் குழந்தை இல்லாத துக்காதால் எங்கோ சன்யாசம் போய்விட்டதாக நினைக்கிறது. பர்மா போரின் போது ஒரு பெண்ணை சந்தித்து தப்பி இந்தியாவுக்கு வரும் போது ஒரு குழந்தையை கண்டெடுத்து வளர்க்கிறார்கள். அக்குழந்தைக்கு தனது சொத்துக்களை எல்லாம் சபாபதி பிள்ளை உயிர் எழுதி கொடுத்துவிடுகிறார். சபாபதி பிள்ளை அவரது அங்லோ இந்தியன் மனைவியும் இறந்து விடவே அவர் வளர்ப்பு மகன் ஹென்றி அவன் பப்பா ஊரான கிருஷ்ணராஜபுரம் வருகிறான். அதுவும் அவன் பப்பா தனது சொத்துகளை எல்லாம் அவன் பெயருக்கு எழுதி கொடுத்த உயிலோடு. நகரத்தில் வாழ்த ஒருவன் எப்படி தனக்கான உலகை எந்த நெருடலும் இல்லாமல் எப்படி ஏற்று நகர்கிறான் என்பது வியப்பு, பலருக்கு அடுத்தவர் வீட்டிற்கு சென்றாலே தூக்கம் வராது ஆனால் ஹென்றி மிக இயல்பாக அனைத்தையும் ஏற்று கொண்டு வாழ்வின் பகுதியாக மகிழ்ச்சியாக கடக்கிறான். பியானோ இசையை கிராமத்து கால்நடைகள் கழுத்தில் கட்டப்பட்டு இருக்கும் மணி ஓசையோடு ஒப்பிடுகிறான், அருமையான தருணம் அது பொதுவாக மேட்டு குடி வாழ்க்கை வாழ்ந்தவர்கள் தனக்கு கீழ் இருப்பதை மிக எளிதாக உதாசீனம் செய்வார்கள் முகம் சுளிப்பார்கள், ஆனால் ஹென்றி ஒரு இடத்தில் கூட எதையும் குறைகூறவோ முகம் சுளிக்கவோ இல்லை ஒவ்வொன்றில் இருந்தும் ஏதாவது ஒன்றை கற்றுகொள்ள முனைவதோடு அதை வாழ்வின் மகிழ்ச்சியான தருணமாக மாற்றி கொண்டு மிக இயல்பாக இருக்கிறான். குறிப்பாக ஆற்றில் குளிக்கும் போது சோப்பு விழுந்துவிடுகிறது இதை 'சோப்பெங்கபா' என்று பாடலாக மாற்றி பல நேரங்களில் பாடி மகிழ்கிறான். நமக்கெல்லாம் சோப்பு விழுந்த அய்யோ சோப்பு போச்சே தான் தோன்றும்?!. அவன் பப்பா வின் எந்த சொத்தும் வேண்டாம் அவர் வாழ்ந்த இந்த ஊரும் அவர் உடன் வாழ்ந்த சக மனிதர்களும் போதும் அதுவே வாழ்வின் மகத்தானவை என்று ஹென்றி நினைக்கும் போது, அப்போ நமக்கெல்லாம் நாம் பிறந்து வளர்ந்த மண் மீது ஏதோ ஒரு ஈர்ப்பு வரும் ஆனால் எந்த சம்பந்தமும் இல்லாமல் ஒரு மனிதனுக்கு அவன் அப்பா வாழ்ந்த ஊர் என்பதால் அந்த மண் மீதும் மக்களின் மீதும் ஈர்ப்பு வருகிறது என்றால் எப்படி நிகழ்கிறது இது? ஒரு வேளை சாபாதி பிள்ளைக்கு பிறந்த மகனாக இருந்தால் கூட குருதி வழி ஈர்ப்பு என்று சொல்லலாம் ஆனால் எந்த தொடர்புமே இல்லாத ஒருவனுக்கு அவன் பப்பாவின் அன்பு மட்டுமே இதை நிகழ்துகிறது என்றால் அன்பு எந்த மகத்தான ஒன்று, உண்மையில் மிக நுணுக்கமான மாற்றங்களை அப்பு செலுத்துபவர்கள் நம்மில் நிகழ்த்துகிறார்கள். வெறும் குருதி வழி சொந்ததிற்காக தான் நம் உறவுகள் மீது அன்பு செலுத்துகிறோம் ஆனால் அது அன்பல்ல கடமை என ஆகிறது, அப்புடையார் எம்பும் உரியர் பிறர்க்கு தானே? எம்பும் தமது சொந்தங்களுக்கு என்றால் அது அன்பிலார் எல்லாம் தமக்குறியர் தானே. இதில் வரும் அனைத்து பெண்களும் ஏதோ ஒரு வகையில் கனவனை பிரிந்து வாழ்கிறார்கள், தேவராஜன் மனைவி, அக்காம்பள், துரைக்கண்ணு மாமியார் பஞ்சவர்ணத்தாமள் , கிளியம்பள், ஏன் ஹென்றி தாய் கூட கனவனை இழந்தவர் தான். பெண்கள் எல்லா வாழ்வில் மிக எளிதாக புரக்கனிகபடுகிறார்கள் என்று நினைத்தால் அதே நேரம் சப்பாத்தி பிள்ளை மனைவி கனவனை புரக்கனித்து வேறு ஒருவனுடன் ஓடி போகிறாள், மனையகாரர் மனைவி நாகம்மா சிறு தவறுக்காக அவரை மிக கடுமையாக திட்டுகிறாள் அப்போது இது இரண்டுமே இரு முனை போல எப்போதும் மறி மறி நடந்து கொண்டே தான் இருக்கிறது அது தான் வாழ்வின் போக்கா எடுத்துகொண்டு நாம் நகர வேண்டியுள்ளது.
ஒரு இடத்தில் ஹென்றி சொல்கிறான் எனக்கு மதம் கிடையாது என்று, துரைக்கண்ணு அப்புறம் சமி கும்பிடுற என்று கேட்கும் போது இறைவனை கும்பிட மதம் எதற்கு என்று இப்படி பல நுக்கமான செய்திகளை சொல்லியபடி நாவல் நகர்கிறது. ஒரு இடத்தில் ஒரு பெண் நிர்வாணமாக தெருவில் சுற்றுகிறாள் அவளை எல்லோரும் பைத்தியம் என்கிறார்கள், நிர்வனமாக இருந்தால் பைத்தியமா சாமியார்கள் எல்லாம் நிர்வாணமாக தானே இருக்கிறார்கள் ஏன் சாமி சிலைகள் கூடத்தான் அப்போ உண்மையில் யார் பைத்தியம்? குளியல் அறையில் நாம் கூட அறைமணி நேரம் உடைகலைகிறோம் அப்போது நாம் கூட அறைமணி நேரம் பைத்தியம் தானே. என்னால் தேவராஜன் விட்டில் இருந்து துரைக்கண்ணு வீட்டிற்கு வாசகனாகவே செல்ல முடியவில்லை ஆனால் ஹென்றி எந்த சலனமும் இல்லாமல் போகிறான் அங்கு தங்கி குழந்தைகளோடு விளையாடி மகிழ்ச்சியாக இருக்கிறான். எது ஒன்றிலுமே ஒரு அழகு இருப்பதாக நினைத்து அதை செய்யும் ஹென்றி போலவே நாமும் இருக்க வேண்டும் அல்லவா ஆனால் நமக்கு விருப்பம் உள்ளது விருப்பம் இல்லாதது என்று பார்த்து பார்த்து வேலைகள் செய்கிறோன், ஹென்றி இடத்தில் யார் இருந்தாலும் சுண்ணாம்பு அடிக்கும் வேலையை நினைத்து கூட பார்க்க மாட்டோம் ஆனால் அவர் அனைத்தையும் வாழ்வில் இயல்பாக ஏற்றுகொள்கிறான். புதிய வீட்டிற்கு மின்சாரம் கொடுக்க சொல்லும் போது எதற்கு மின்சாரம் இந்த அகல் வெளிச்சம் போதுமே வீட்டில் வாழ மின்சாரம் தேவையில்லை என்று சொல்கிறான். திருமணம் குடும்ப வாழ்விற்கு நான் எதிரி கிடையாது ஆனால் எனக்கு திருமணம் தேவையில்லை என்று சொல்லும் போதுதான் இந்த படைப்பு உச்சம் பெறுகிறது. நம் வாழ்க்கையில் நாம் எதையும் நமது தேவைக்காக செய்வதில்லை மற்றவர்கள் செய்வதால் தானே செய்கிறோம் அல்லது மற்றவர்கள் விருப்பம் ஆசைக்கு தான் நமக்கு தேவையே இல்லாத பல விஷயங்கள் செய்து கொண்டு வாழ்வை பிரச்சனை நிறைந்த ஒன்றாக மாற்றி கொண்டு கஷ்டபடுகிறோம். இதனால் தான்  தேவராஜன் ஹென்றியை பிஃளாசபியர்,கைய்டு என்று கனகவல்லிக்கு அறிமுகம் செய்கிறான். இதில் வரும் ஆண்களும் சரி பெண்களும் சரி பிரிந்து இருந்தாலும் மனதிற்குள் அது குறித்து கவலையோடு தான் இருக்கிறார்கள் இருந்தாலும் ஏதோ ஒன்று தடுக்கிறது. ஒரு இடத்தில் சிவ பானம் உடலுக்கு கெடுதல் இல்லை என்று வருகிறது கஞ்சா புகைப்பது உண்மையில் கெடுதல் இல்லையா என்று தெரியவில்லை. நாம் அன்றாடம் தவறவிடும் அனைத்தையும் ஹென்றி கூர்ந்து கவனித்து கற்று கொள்கிறான், எவ்வளவு சிறிய விஷயமாக இருந்தாலும் அதை மகத்தான ஒன்றாக நினைத்து அகம் மகிழும் அந்த குணம் அனைவரையும் சமமாக நினைப்பது அனைத்தையும் சமமாக நினைப்பது என்று எத்தனையே நாம் ஹென்றி இடம் இருந்து கற்றுகொள்ள வேண்டும். இதில் இருந்து ஒன்று நன்றாக தெரிகிறது மனிதன் குணம் அவன் தந்தை வழி குருதியில் வருவதில்லை அது வளர்பிலும் சுற்றி இருப்பவர்களாலும் தான் வருகிறது. இந்த நாவல் வந்த காலகட்டத்தில் இது கொண்டாட பட்டத்திற்கு பல சிறப்புகள் இருக்கிறது சில வற்றை மட்டுமே இங்கே சொல்லி உள்ளேன். பேபி ஹென்றி வீட்டிற்கு வந்து சில நாளுக்குள் திருப்பவும் பழையபடி தான் போன போக்கில் போய்விடுகிறாள், புது வீட்டில் குத்து விளக்கு கொண்டு வந்து வைக்கிறாள் யாரோ விழுந்து கும்பிட்டு என்று சொன்கிறார்கள் கும்பிட்டு விட்டு கிளம்பி விடுகிறாள். அவள் இங்கு வந்தது முதலே எல்லோரும் ஏதேதோ கட்டளைகள் போட்டுகொண்டே இருக்கிறார்கள். ஏதற்கு இது எல்லாம் பேபி போல தானே நாம் எல்லாம் இருந்தோம் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரமாக சொல்ல போனால் அவளை போலவே நிர்வாணமாக ஆனால் இப்போது? இந்த கட்டுபாடு வரையறைகள் எல்லாம் எதற்கு. நாமும் பேபி போல இருந்தால் என்ன?. இந்த நாவல் வந்த காலகட்டத்தில் இது கொண்டாட பட்டத்திற்கு பல சிறப்புகள் இருக்கிறது சில வற்றை மட்டுமே இங்கே சொல்லி உள்ளேன். 

Monday, August 28, 2017

வெண்முரசு : மழைப்பாடல் - ஜெயமோகன்



மழைப்பாடல் ஒவ்வொரு அத்தியாயத்திலும் எத்தனை எத்தனை வர்ணனை எங்கு இருந்து கொட்டுகிறது ஜெயமோகனுக்கு வியப்பு வியப்பு. ஓரே ஒரு உவமையை தவிர வேறு எந்த உவமை திரும்ப வரவில்லை ' விழி மூடி இமையுள் அசையும் குருதியை பார்த்து கொண்டு இருந்தான்' இது மட்டும் இரண்டு இடத்தில் வருகிறது. அனேகமாக அனைத்து அத்தியாயத்திலும் துனை கதை வருகிறது, ஆறுமுகன் அவதாரம் மிக முக்கியமான ஒன்று. பீஷ்மர் காந்தாரம் செல்லும் போது மோகஞ்சந்தாரோ (இறந்தவர்களின் மேடு) போய் பார்க்கிறார்
“சூதர்களின் கதைகளில் கிருதயுகத்துக்கு முன்பு சத்யயுகத்தில் மூதாதையர் இறப்பதேயில்லை என்றும் அவர்கள் முதுமையால் குருதியிழந்து உலர்ந்துச் சுருங்கியதும் பெரியதாழிகளில் வைத்து மண்ணுக்குள் இறக்கிவிடுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.” இப்பொழுது இது திராவிடதேசத்திலும் தமிழ் மக்கள் இடத்திலும் இது வழக்கில் உள்ளது என்றும்
பிரம்மாவின் சந்ததியில்
“காந்தாரருக்கு ஐந்து மைந்தர்கள் பிறந்தனர். மூத்தகுலம் காந்தாரகுலமாக ஆகி இந்த மண்ணை ஆள்கிறது. பிறநால்வர் சேரர் சோழர் பாண்டியர் கோலர் என்று சொல்லப்பட்டார்கள். அவர்கள் இங்கிருந்து கிளம்பி தட்சிணத்தை அடைந்து அங்கே எங்கேயோ நாடாள்கிறார்கள்” என்றும்
இது அக்னிபுராணத்தில் உள்ளது என்று பீஷ்மர் சொல்லும் செய்தி வியப்பாக உள்ளது.
மேலும் மஹாபாரதம் காலத்தில் திராவிடம், தமிழகம் தனி தனி பகுதிகள் என்று தெரிகிறது. மஹாபாரதம் காலத்தில் சேர, சோழ, பாண்டிய அரசுகள் இருந்தனவா என்று தெரியவில்லை.
மஹாபாரதம் முழுவதும் நடைபெற்றபோகும் அனைத்திற்கும் பெண்களே அடித்தளம் அமைக்கிறார்கள், அம்பிகை கரம் பிடித்து அன்னை என்று அஸ்தினபுரியில் கால்வைத்த அம்பாலிகை இருவர் இடத்திலும் எப்படி இந்தனை குரோதம் விரிசல் வந்தது என்று நினைத்தால், அறியனை என்று தோன்றுகிறது. எப்போதும் அம்பிகை வயிற்றில் இன்னோர் உயிர் வளந்ததோ அப்போதே அவள் என் அன்னையல்லை என்றும் இனி இவள் உண்பதும் உயிர்ப்பதும் அந்த உயிருக்கு தான் என்று அம்பாலிகா நினைக்கிறாள், அதன்பொருட்டு அவள் எந்த எல்லையையும் தொடுவாள் என்று உணர்கிறாள். அப்போது உறவுகள் என்பது மேலும் மேலும் உறவுகளை வளர்க்கவா அல்லது உறவுகள் இடையே பிரிவுகளை பகைமையை ஏற்படுத்த மட்டும் தானா?. இன்றும் கூட திருமணம் முடிந்தால் தன் குடும்பத்தை பார்க்க தான் சொல்லிதருகிறது சமுகம் அப்போது அன்று முதல் இன்றுவரை மனித அகம் மாறவே இல்லையா,? அப்போது நாம் மாற்றம் என்று சொல்லிக்கொள்வது எல்லாம் வெறும் புறமாற்றாம் தானா? மானிட மனித அகம் அன்று இன்றும் எப்போதும் அப்படியேதான் இருக்கபோகிறது அதில் எந்த மாற்றமும் அற்ப மானிட்டர்கள் நம்மால் ஏற்படுத்தவே முடியாது என்ற உண்மையை இந்த மழைப்பாடல் உணர்த்துகிறது.
திருதராஷ்டிரன் மகன்கள் தியவர்களக பிறப்பதற்கும், தாமதமாக பிறப்பதற்கும், அவன் விழியற்றவனாக பிறந்தற்கும் யார் காரணம் எவர் பிழை? ஏன் திருதராஷ்டிரன் அறம் கொண்டவனாகவே இருந்தாலும் அவனுக்கு நடப்பவை எல்லாம் தியவையாகவே அமைகிறது? பாரதம் முழுக்க இரத்தாறு ஓட ஏற்கனவே முடிவு செய்யபட்டுவிட்டது இறை இவர்களை அரசியல் காய்களாக வைத்து தாயத்தை உருட்டி விலையாட தொடங்கி விட்டான் நடப்பவைகளை யாராலும் தடுக்க முடியாது அல்லவா.


சிறு பிழையால் காந்தாரம் மகதம் இடையேயான மண உறவு தடைபட்டு போகிறது இந்த சிரிய இடைவெளி பீஷ்மர் பயன்படுத்திகொல்கிறார் வரலாறு மாறிவிடுகிறது. சுகோணன் என்னும் தூது பருந்து இறப்பதும் அதை ஓனாய் உண்ணும் போது சகுனி பார்ப்பது இந்த இடத்தில் இரு கதை இனைகிறது மிகச் சிறந்த இடம் இது. பழங்காலத்தில் தாலி பனையேலையில் கட்டப்பட்டது என்று தெரியும் ஆனால் அந்த பனையேலை எப்படி எடுக்கப்படுகிறது என்று தெரியாது, வசுமதி திருதராஷ்டிரன் திருமண சடங்கில் இது வருகிறது, ஏறத்தாழ அன்று முதல் இன்று வரை திருமண சடங்கு ஒன்றாக இருப்பது பெரும் வியப்பாக உள்ளது. பனை பல ஆண்டுகள் வளர்ந்தபின் ஒரு கட்டத்தில் பூக்கிறது அப்படி பூக்கும் பனை தாலிபனை எனப்படும், அந்த பனையை வணங்கி அதில் இருந்து ஓலை மற்றும் பூவை வெட்டி வந்து அதற்கு சடங்குகள் செய்து தாலி செய்யப்படுகிறது. அந்த பனையோலையில் மணமகன், மணமகள் பெயர் எழுதப்படும் அல்லது இரு நாட்டு அரசு முத்திரை வரையப்படும்.
இந்த பகுதியை தொகுத்து சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் ' திருதராஷ்டிரன் பாண்டு வளர்ந்து விட்டார்கள். திருதராஷ்டிரனுக்கு பெண் தேடும் போது பல சத்ரிய தேசம் விழியிழந்தவன் என்பதால் பெண் கொடுக்க மறுக்கிறது, மதத்திற்கு தூது சொன்ற போது மகதம் அரசர் மறுப்பு சொல்ல ஆனால் இளவரசர் அஸ்தினபுரத்தின் உறவை விரும்புகிறார் ஆனால் காலம் கடந்து விட்டது, காந்தார நாட்டிற்கு பிதாமகர் பீஷ்மர் தூது சென்றுவிட்டார். பீஷ்மரை காந்தாரம் வரவேற்கிறது ஆனால் காந்தார குலமூதாதைகள் விழியாற்றவனுக்கு பெண் கொடுக்க மறுக்க திருதராஷ்டிரன் காந்தாரியை கவர்ந்து வருகிறான். கணவன் காணாத புவியை தானும் காண்பதில்லை என்று விழியை திரையிட்டுகொண்டு காந்தாரி அஸ்தினபுரம் வரும் போது மழை கொட்டி புவி குளிர்கிறது, குருதி மழையு‌ம் பொழிகிறது இது எதிர்காலத்தை உணர்த்தும் குறிப்பு. அஸ்தினபுரியின் மக்கள் காந்தாரியை வியப்போடு போற்றுகிறது.
யது வம்சதார்கள் யமுனை கரையில் வாழ்ந்து வந்தனர் அவர்கள் யாதவர்கள் என்று அழைக்கப்பட்டனர். யாதவர் பசுக்களை வளர்ப்பது தொழில். லவணர்கள் மொழியற்றவர்களாகவும் கருமைநிறம் கொண்டவர்களாகவும் வேட்டைதொழிலை செய்துவந்தனர். காட்டுக்குள் மேய்ச்சலுக்குச் செல்லும் கன்றுகளை லவணர் கவர்ந்துசெல்வதும் அதைத்தடுக்கமுயலும் யாதவர்களைக் கொல்வதும் அன்றாட நிகழ்ச்சியாக இருந்தது.

குடிமூதாதையர் கூடிய சபையில் அடுத்ததாக சூரசேனர் (யாதவர்) லவணகுலத்தைச்சேர்ந்த பெண்ணை மணந்துகொள்ளவேண்டும் என்று சொல்லப்பட்டது. லவணர்களை பிற யாதவர்கள் ஏற்றுக்கொள்வதற்கு அது இன்றியமையாதது என்றனர் குடிமூத்தார்.அவ்வாறாக சூரசேனர் லவணகுலத்தைச்சேர்ந்த மரீஷையை மணந்தார்.  அவர்களுக்கு பிறந்த குழந்தை அனைத்தும் கரியவையாக இருந்தது 13 வதாக வசுதேவன் பிறந்தான் குழந்தை செந்நிறம் அப்போதே இன்னொரு குழந்தை பிறந்தது செந்நிறமான பெண்குழந்தை பிருதை. அவள் அரண்மனைக்கு வந்த மாக முனிவர் துர்வாசர் க்கு பணிவிடை செய்கிறாள் அதன்பொருட்டு அவளுக்கு விண்ணகத்தார் உடன் உரையாடும் ஒரு மந்திரத்தை சொல்லி இதை உன் கனவன் உடன் கூடும் போது மட்டும் பயன்படுத்து என்கிறார், ஆனால் பிருதை பொறுமையிழந்து அதை முன்கூட்டியே பயன்படுத்திவிடுவதால் சூரியன் போன்ற ஒலிகொண்ட விண்ணவர் பிருதைக்கு கரு கொடுக்கிறார் திருமணமாகமலே கருத்தரிக்கிறாள். அந்தக் கருவை கலைக்க நினைக்கிறாள் ஆனாலும் நாகங்கள்  கருவிற்கு துணை இருக்கிறது. 12 மாதங்கள் கழித்து சூரியப் புதல்வன் பிறக்கிறான்(கர்ணன்) . அரண்மனைக்கு அக்குழந்தையை எடுத்துச் செல்ல இயலாத குந்தி சிறுபடகில் அந்தக் குழந்தையை வைத்து நதியில் விடுகிறாள். அக்குழந்தை அதிரதன் என்பவரால் கண்டெடுக்கப்பட்டார் இவர் அரசர் திரிதராஷ்டிராவின் சாரதி ஆவார். அவரும் அவரது மனைவி ராதாவும்  குழந்தையை சொந்த மகனாகவே வளர்த்தனர். 
திருதராஷ்டிரன் அறியனை அமரும் நிகழ்வு தயார் செய்யப்படுறது பெரும் செல்வமும் படையும் கொண்டு சகுனி அஸ்தினபுரி வருந்தடைகிறான். அம்பாலிகா தன் மகன் பாண்டு அறியனை ஏறவேண்டும் என்பதால் எதிர்ப்பு கிளம்புகிறது. நில அதிர்வு வந்ததால் நாட்டிற்கு அழிவு ஏற்படும் என்று அறியனை ஏறுதல் தடை செய்யப்படுகிறது. பிறந்தது முதல் இந்த தருணத்திற்காகக் காத்திருந்தான்   திருதராஷ்டிரன் அவனிடம் யார் என்ற செய்தியை சொல்வது? பீஷ்மரை சத்தியவதி தெரிவிக்கும்படி சொல்கிறாள் அவர் கடுமையாக எதிர்ப்பு தெரிக்கிறார். சத்தியவதி தேவவிருதன் இடையே முதல் பூசல் ஏற்றப்படுகிறது. என் தமக்கை அறியனை அமர்வாள் என்ற பிதாமகர் வாக்கை நம்பி தான் நான் அஸ்தினபுரி வந்தேன் இதை ஏற்க முடியாது என்று சகுனி சொல்கிறார். நீங்கள் 18 ஆண்டுகள்  பெறுங்கள் உங்கள் தமக்கையின் மகன் அறியனை ஏறுவான் இது என் வாக்கு அதுவரை நீங்கள் இங்கேயே தங்கலாம் உங்கள் தமக்கையின் மைந்தனை உங்கள் விருப்பப்படி வளர்தெடுங்கள் என்கிறார் பீஷ்மர் சகுனி 18 ஆண்டு அஸ்தினபுரியில் தங்குகிறார்.
பீஷ்மர் பயந்த அளவுக்குள் திருதராஷ்டிரன் அதை எதிர்கொள்ளவில்லை மாறாக “விதுரா, மூடா, என் இளவல் நாடாள விழைந்தான் என்றால் அவன் மண்ணைப் பிடுங்கி ஆளும் வீணனென்றா என்னை நினைத்தாய்? உடல், உயிர், நாடு, புகழ் என எனக்குரியதனைத்தும் இவனுக்குரியதேயாகும்” என்றான். ஆனால் காந்தாரியிடம் இச்செய்தியை சொல்லும்பொழுது இவையனைத்தும் குந்தியாள் நடந்தவை என்ன அவள் மீது தீச்சொல் இடுகிறாள் உன்னை பழிதீர்பேன் என்கிறாள். பாண்டு அறியனை ஏறினால் யாதவ பெண் குந்தி சத்ரியார்கள் அறியாணை அமர குலமூதாதைகள் எதிர்ப்பு தெரிவிக்க ஆனால் எந்த சத்ரிய மன்னனும் மணகொடையாளிக்க மறுக்க மாத்ரநாட்டு இளவரசர் சல்லியர் அவரது தங்கை மாத்ரியை பாண்டுவுக்கு மணமுடிப்பதாக வாக்களித்தார். பாண்டு மாத்தியை மணநிகழ்வு முடிந்தது. பாண்டு வேட்டைக்கு கானகம் சென்றபோது அவ்வனத்தில் காமத்தில் திளைத்திருந்த இரு மான்களை அப்பெய்தி கொன்றான் மான் உருவில் இருந்த சுகுணன் அவன் துனை கௌசிகையும் தீச்சொல் இட்டனர் இன்று முதல் உன் வாழ்நாள் முழுவதும் காமம் என்பது கிடையாது மனம் துடிக்க உடல் தாளாமல் உன்னை கொல்லும் ஆயுதமாக காமம் ஆகுக என்று. இதன்பொருட்டு பாண்டு தனது இருதுணைவியுடன் வனம்புக விழைகிறான். விதுரன் தாயார் சிவை ஒரு சூத பெண் என்பதால் அவள் மற்ற அரசிகளுக்கு நிகராக நடத்தப்படவில்லை ஒதுக்கி வைக்கம்படுகிறாள், அவளுக்கும் தன் மகன் தான் அஸ்தினபுரியின் அரசன் என்று கனவுகான்கிறாள். உத்தரமதுராபுரியின் தேவகன் மகள் சுருதைக்கும் விதுரனுக்கும் திருமணம் நடக்கிறது. பாண்டு வனம்புகுந்து குடில் அமைத்து வாழ்கிறான், காந்தாரி தூது கிருஷ்ணாபருந்து மூலம் அஸ்தினபுரியின் செய்திகளை அறிந்து கொள்கிறாள். காந்தாரி கருவுற்று இருந்தால் சில தீய அறிகுறிகள் அஸ்தியில் நடக்கிறது. பாண்டுவிடம் குந்தி தனக்கு பிறந்த குழந்தை பற்றி சொல்கிறாள் அவன் இந்த பாரதவர்ஷத்தை ஆளபிறந்த சூரிய புதல்வன் என்கிறாள், பாண்டு அக்குழந்தையை ஏற்று அவனுக்கு துனையாக ஒரு தருமனை பெற்று கொடுக்குப்படி பாண்டு கேட்க்க, அவள் மந்திரத்தை பயன்படுத்தி எமதர்மனை வரவைத்து அவர் உடன் இனைந்து ஒரு குழந்தை பெற்றாள். அக்குழந்தை தருமன், விதிஷ்டிரன், பரதன் என்ற பெயர்களை பெற்றான். காந்தாரிக்கு 12 மாதங்கள் கடந்தும் குழந்தை பெறவில்லை அது மதங்க கர்ப்பம் என்று முனிவர் சொன்னார். அதாவது இருபது மாத கர்பம் குழந்தை நூறு ஆள் பலம் கொண்டு பிறக்கும். அக்குழந்தை தீய குணங்கள் கொண்டது அதனால் இந்த நகர் அழியும் என்று மக்கள் பேச தொடங்கிவிட்டார்கள், இதனால் அக்குழந்தையை வேறு எங்காவது அனுப்பி விட சொல்கிறார்கள். அக்குழந்தை அப்படி பிறக்க யார் காரணம்? இந்த இடத்தில் திருதராஷ்டிரன் சொல் நம்மை கலங்கடிகிறது..
“அழியட்டும். இந்நகரும் இந்நாடும் அழியட்டும். இவ்வுலகே அழியட்டும். நான் அந்தப்பழியை ஏற்றுக்கொள்கிறேன். என்னை அதற்காக மூதாதையர் பழிக்கட்டும். தெய்வங்கள் என்னை தண்டிக்கட்டும். என் மைந்தனை மார்போடணைத்துக்கொண்டு விண்ணிலிருக்கும் தெய்வங்களிடம் சொல்கிறேன். ஆம், நாங்கள் பழிகொண்டவர்கள். நாங்கள்
வெறுக்கப்பட்டவர்கள். ஆகவே தன்னந்தனிமையில் நிற்பவர்கள். எங்களுக்கு வேறு எவரும் இல்லை. தெய்வங்கள்கூட இல்லை” என்றான் திருதராஷ்டிரன். அவன் உதடுகள் துடித்தன. சிவந்த கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. “அவனுக்கு இவ்வுலகில் நானன்றி வேறு எவருமில்லை. அவனை என்னால் வெறுக்கமுடியாது. அவனை என்னால் ஒரு கணம்கூட விலக்கமுடியாது.”

காந்தாரியை முதுநாகினி வந்து சந்தித்தாள் இவன் நாகர்குலதை காக்கும் அரசன் இவன் அழிவற்றவன், நீ இந்த பாரததின் கற்புக்கரசி நீ ஆடையின்றி உன் மைந்தனை பார் அவன் வெல்வரற்றவன் அவன் அழிவற்றவன் என்றால் காந்தாரி அட்டைகளை கலந்து தன் கண்கட்டை அவிழ்த்து பார்த்தாள் காற்றில் பட்டாடை வந்து அவன் தொடையில் விழுந்தது அவள் அவன் தொடையை காணவில்லை உடனே அஞ்சி பயந்து அவனை காக்க நூறு தமயன் வேண்டும் என்று நினைக்கிறாள், இவன் வெல்வரற்றவன் ஆகையால் இவன் சுயோதனன் அல்ல, துரியோதனன் என்றாள்..
குந்திக்கு ஆறு மாதத்தில் மீண்டும் ஒரு குழந்தை பிறக்கிறது அதற்கு பீமசேனன் என்று பெயர் சூட்டப்பட்டது. பாறைகளை கூட கையால் உடைக்கும் அளவுக்கு பலம் கொண்டு இருந்தான். மீண்டும் ஒரு குழந்தை பெற்றாள், அவனுக்கு அர்ஜுனன் என்று நாமம் சூட்டப்பட்டது இந்திரனே ஐராவதத்தில் தோன்றி இவன் நானென்றாறிக என்று ஆசி கூறி அருள்புறிந்தார். இவன் வில் வித்தையில் சிறந்தது விளங்கினான். மாத்ரி  துர்வாசர் அளித்த மத்திரத்தை பண்படுத்தி இரண்டு குழந்தைகள் பெற்றாள். காந்தாரி இரண்டாவது குழந்தை பிறந்தது துச்சானன் என்று பெயர். அவள் பத்து தமக்கைகள் இரண்டு இரண்டு குழந்தைகள் பெற்றனர். பாண்டவர்கள் ஒரளவு வளர்ந்து விட்டார்கள். பாண்டு மாத்ரி உடன் காமம் கொண்டு திளைக்க முயலும் போது அந்த அதிர்வை அவன் உடல் தாங்காமல் இறந்துவிடுகிறான். அவன் சிதையில் மாத்ரி சதி ஏறுகிறாள், செய்தி அஸ்தினபுரியை உலுக்கியது. அம்பிகா, அம்பாலிகா இருவரும் வனம்புக விழைந்து வனம் புகுகிறார்கள். தவளைகள் விண்ணவர் உடன் வேண்டுகிறது மழை! மழை! மழை! ஓம்! ஓம்! ஓம்! , வருடங்கள் சுழன்று காலம் விரைகிறது. 

Sunday, August 27, 2017

வாழ்வது எப்படி - சாரு நிவேதிதா

வகை              : கட்டுரைகள்
எழுத்தாளர்    : சாரு நிவேதிதா
பதிப்பகம்       : உயிர்மை
முதல் பதிப்பு : டிசம்பர் 2009




மிக எளிய வாழ்க்கை அனுபவங்களை அதே நேரத்தில் மிக சுவாரசியமாகவும், நகைச்சுவை உடனும் சொல்லும் கட்டுரை, ரஜினி பற்றி, கமல் பற்றி, மைக்கேல் ஜாக்சன் பற்றி, வேலிமுட்டி சாராயம் பற்றி . அப்புறம் வழக்கம் போல எழுத்தாளர்களை தமிழகத்தில் மதிப்பதில்லை என்று புலம்பல். தழிழ் எழுத தெரியலை, கல்வி சரியில்லை என்று புலம்பல் எத்தனை முறை சங்கு ஊதினாலும் அரசின் செவிட்டு காதில் தான் விழப்போவதே இல்லையே.
கனிமொழிக்கு எழுதிய கடிதம் அருமையான ஒரு, ஏழைகள் தானே அரசியல் காய்கள் இதில் கனிமொழி அநாதை குழந்தைகள் உடன் திரைபடம் பார்ப்பதில் என்ன வியப்பு. அரசியல் என்று வந்த பிறகு உலக அறிவு இருந்தால் என்ன இல்லாட்டி என்ன, அரசியல் ஆட்டம் ஒன்று தானே.!

மைக்கேல் ஜாக்சன் கட்டுரை முக்கியமான ஒன்று. உலக புகழ் கொண்ட ஒருவர் உடன் மிக நெருக்கமாக உணர்வை ஏற்படுத்தியது. மைக்கேல் ஜாக்சன் உரை அவர் பாடல் வரி அவரின் குழந்தை பருவத்தை தொலைத்த வலி வெளிப்படுகிறது, ஆனாலும் அவர் மீது மோசமான விமர்சனம் வைக்கப்பட்டது பெரும் கசப்பு.
பீர்பால் கதைகள், பிளேபாய் கதை நன்று.
வாழ்வது எப்படி என்ற கட்டுரை இந்திய கல்வி முறை என்பது வெறும் கூலி தொழிலாளர்களை மட்டுமே உருவாக்கும் தோல்வி அடைந்த கல்வி முறை தான் அதில் மாற்று கருத்து இல்லை, வாழ்கை கல்வி மட்டும் போதுமா வாழ்கைக்கு? எனக்கு சமைக்க தெரியும், நீச்சல் தெரியும், சாலையில் சரியாக நடக்க தெரியும், குப்பையை சரியாக குப்பை தொட்டியில் போட தெரியும், மற்றவர்கள் உடன் அனுசரித்து வாழதெரியும் சாதாரண விவசாயி. எல்லாம் வைத்து கொண்டு என்ன செய்வது பணம் காய்க்கும் மரத்தில் இருந்து பணம் பரிக்கதெரியாமல்? ஜானி வாக்கர், பிலாக் லேபில், ஐந்து நட்சத்திர பார் என்று உங்கள் எழுத்தில் மட்டும் படித்துவிட்டு சாக வேண்டுமா சாரு?. உங்கள் வீட்டு பப்பு, ஸோரோ, வாழும் வாழ்கை கூட இந்த தேசத்தில் பாதி மக்கள் வாழவில்லை என்பதை தாங்கள் அறியாததா? இதில் பணகாய்ச்சி மரத்தில் பணம் பறிக்க சொல்லிகொடுத்தால் என்ன வானம் ஏறி வைகுண்டம் போக சொல்லிகொடுத்தால் என்ன.

இப்போது உங்கள் கடவுள் நித்யானந்தா பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று நினைத்தால் ஹா ஹா ஹா... 

Wednesday, August 16, 2017

தோட்டியின் மகன்

தோட்டியின் மகன்

தோட்டியின் மகன்
ஆசிரியர் - தகழி சிவசங்கரன் பிள்ளை
தமிழில் - சுந்தர ராமசாமி
ஒரு தோட்டியின் மகன் வீடு வீடாக போய் மலத்தை மண்வெட்டியில் அள்ளி வளியில் போட்டு அதை பீப்பாய் வண்டியில் நிரப்பி அதை மலகிடங்கில் வந்து கொட்ட வேண்டும் இது தோட்டிகள் வேலை. ஏதோ மேல் எல்லாம் பீ நாற்றம் அடிப்பது போல புத்தகம் முழுவதும் நம்மையே அறியாமல் முகம் கோணிகொள்கிறது, மனது தீயில் நிற்பது போல இருக்கிறது.
எழுத்தாளர் இடம் ஒரு நீண்ட சாட்டை இருக்கிறது இது புத்தகம் முழுவதும் உங்களை தாக்கி காய படுத்தி கொண்டே வரும்.
"என்னப்பா இன்னைக்கு பாதிதான் இருக்கு எல்லா வீட்டுக்கும் போனயா?
எல்லா வீட்டுக்கும் போனேன் நேத்து எல்லாதுக்கும் தீனி  கொறவுபோல "
" என் வார்டுல நூத்துக்கு ஏழுவத்தஞ்சி அசீரணம் "
" மலத்தின் அளவு வைத்து சதி கூட பிரித்தார்கள் "
அவர்கள் மலத்தை வைத்து மனிதர்களை தெரிந்து கொண்டார்கள்.
மனிதர்கள் அன்றாடம் செய்யும் செயலுக்கு கூட அவர்கள் மிகவும் சிரமப்பட்டு செய்ய வேண்டும், நல்ல உணவு, உடை, நல்ல இருப்பிடம், குடிக்காமல் இருப்பது, பணம் சேமிப்பது, பிள்ளைகளுக்கு நல்ல பெயர் வைப்பது, வீடு கட்டுவது இப்படி எதுவுமே ஒரு தோட்டி செய்ய முடியாது.
எத்தனையோ இலட்சம் மக்கள் அந்த நகரத்தில் மூச்சு திணறி இறந்து இருக்கிறார்கள். சுவடே இல்லாமல் போன அந்த எண்ணற்ற ஆத்மாக்களின் சுவடு இந்த புத்தகம். அவர்கள் எல்லாம் திருநெல்வேலியில் இருந்து அழைத்து செல்லபட்டவர்கள்.
உங்கள் கண்ணில் இந்த புத்தகம் பட்டால் கட்டாயம் வாசித்து பாருங்கள்.

ஏழாம் உலகம் - ஜெயமோகன்



வணக்கம் ஜெ.

உங்கள்ஏ ழாம் உலகம் புத்தகம் படித்தேன், எப்படி உங்களால் அவர்கள் வாழ்கையை ஊடுருவி கண்டு எழுதினிர்கள் என்று வியப்பாக உள்ளது, எத்தனை குறையிருந்தாதுல் எப்படி அவர்களால் அவ்வளவு மகிழ்ச்சியாக வாழ்கையை வாழ முடிகிறது, நமக்கு எல்லாம் இருந்தும் எதோ ஒரு குறை சொல்லி வருத்தப்பட்டு கொண்டே இருக்கிறோம். குறிப்பாக குய்யன். அவர்களுக்கு ஒரு காதல் இருக்கிறது, அவர்களுக்குள்ளும் ஒரு தாய் இருக்கிறாள், இதை நாம் எப்போதாவது உணர்ந்து இருக்கிறோமா இல்லை, உங்கள் புத்தகம் எனக்கு அந்த உலகத்தை காட்டியது, எங்கள் பகுதியில் ஒரு பிச்சைக்காரன் இல்லை ஒரு உருபடி இருகிறார் அவர் எப்போதும் அம்மா, சித்தப்பா, பெரியப்பா, 2000 நோட்டு போடுங்க என்று நக்கல் அடிபார், நான் தினமும் அந்த வழியாக தான் போகிறேன் ஆனால் ஏழாம் உலகம் படித்த பிறகு தான் அவரின் கிண்டல் என் காதிற்கு எட்டியது. நாம்ம யாருக்கு என்ன பாவம் செஞ்சோம் என்று வெகுளியாக பண்டாரத்தின் மனைவியை சொல்வது எதிலும் நிறுத்தி எடை போடுவது என்றே தெரியவில்லை. எருக்குவை காவல்துறையே கற்பழித்தால் வேறு எங்கும் போய் முறையிடுவது? எருக்கு அதுக்கு காலு இல்ல, அதுக்கு எதுக்குடா காலு தூக்கி கேரியரில் வை என்று சொல்லும் காவல்துறை அதிகாரி என்றைக்கும் இருக்க தானே செய்கிறார்கள். (அதுவும் இடுப்பு ஒடையும் அளவுக்கு). இடையே வரும் பாடல்கள் அற்புதம். அதில் இந்த வரியை எனக்காக எடுத்து கொண்டேன்.

" சித்தம் உலையல்லோ
சீவன் தீயல்லோ
நித்தம் எரியுதடி-என் கண்ணம்மா
நின்று கொதிக்குதடீ. ""

மாங்காண்டி சாமியாரை கார்ப்பரேட் சாமியராக மாற்ற எவ்வளவு முயற்சிகள், எல்லாவற்றையும் மௌனம் என்னும் ஆயுதத்தால் முறியடித்து வெற்றுவிட்டாரே அகிம்சை எத்தனை உறுதியானது.

முத்தம்மை பீ காட்டில் கற்பழிக்கபடுகிறாளே, மனிதன் மகளிருக்கு என்று கண்டு பிடித்த மகத்தான ஒன்று அவளுக்கும் தானே இருக்கிறது, அது கற்பழிப்பு தானே? பதினெட்டு ஈனி இருக்காளே எத்தனை கற்பழிப்பு நடந்து இருக்கிறது, இந்த சமுகத்திற்காக எருக்கு, முத்தம்மை இருவரின் வாழ்க்கை என்ன செய்தி சொல்கிறார்கள் என்று நினைத்தால் சிந்தனை எங்கேங்கோ முட்டி மோதி உடைபட்டு போகிறது. உயிர் வாழ்வதின் மகத்துவத்தை இந்த ஏழாம் உலகத்து மனிதர்கள் இடம் கற்று கொள்ள வேண்டும். இப்போது எல்லாம் சாலை ஓரம் இருக்கும் அந்த ஏழாம் உலகத்து மனிதர்களை பார்க்காமல் கடந்து போக முடியவில்லை. வட்டார வழக்கு சொல்லுக்கு அகராதி கொடுத்தது சிறப்பு... எழுத்து பிழை மன்னிக்கவும். நன்றி.

தண்ணீர் - அசோகமித்திரன்




அசோகமித்திரன் - தண்ணீர்



எத்தனை எளிமையான எழுத்து நான் உங்களை விட அதி மேதாவி நான் எழுத்தாளன் என்று ஒரு இடத்தில் கூட குழப்பமான அறிவாளி தனமான வரி என்று நாவல் முழுக்க ஒரு இடத்தில் கூட கான இயலவில்லை. அதே அளவுக்கு சற்று குறையாத அளவுக்கு மனித மனதின் ஆழத்தை ஊடருத்து கண் முன் வைக்கிறார், வாழ்க்கை இத்தனை கொடுமையானதாக இருந்தாலும் ஏன் வாழ வேண்டும் என்று எளிமையாக சிந்திக்க வைக்கிறார். சென்னையில் தனியாக வசிக்கும் ஜமுனா, சாயா என்ற இரு பெண்களின்  வாழ்க்கை வழியாக நாவலில் பயணம் தொடர்கிறது. தொடர்வண்டி போல மெதுவாக தொடங்கி பின் வேகம் கூடிகொண்டே போகிறது அந்த வேகத்திற்கு ஈடு கொடுத்து பயணிக்க வேண்டியது வாசகனின் கடமை. சென்னையில் நடுத்தர மக்களின் வாழ்க்கையில் தண்ணீர் கிடைப்பது என்பது எவ்வளவு கடினமான ஒரு என்று சொல்கிறது நாவல், கதை கலம் 1980 என்று வைத்து கொள்ளலாம் குழந்தைகள் கழிவறையில் மலம் கழித்தால் தண்ணீர் வேண்டும் என்று தெருவில் குழந்தைகள் மலம் கழிக்கிறார்கள் அதை பல்லம் தோண்ட வரும் கார்ப்பரேஷன் கார்கள் தெருவில் குழி தோண்டி போட்டு விடுவதால் அந்த பகுதியில் எந்த வாகனமும் சரியா போக முடியாது, அவர்கள் தோண்டும் குழியால் சாக்கடை தண்ணீர், குடி தண்ணீர் ஒன்றாகிவிடுவது சென்னையில் சாதாரண ஒன்றாக இன்று இருக்கிறது. பின்பு டான்க் வைத்து லாரி மூலம் தண்ணீர் விடுவார்கள் லாரிக்கு 300 என்று அந்த லாரி டிரைவர் அந்த எளிய மக்களிடம் சுடண்டுகிறான். அந்த காலத்தில் 300 ரூ என்றால் எவ்வளவு பெரிய தொகை அதே தான் இன்று பெரிய தொழிலாக வளர்ந்து நிற்கிறது.
ஜமுனாவை பாஸ்கர ராவ் என்பவன் சினிமாவில் நடிக்க வைப்பதாக சொல்லி கூட்டி போய் ஆந்திர மாநில தடியர்கள் முன் நிர்வாணமாக ஓட வைக்கிறான் பிறகு ஒரு பிள்ளையும் கொடுத்து விடுகிறான் இந்த உறவு பிடிக்காத சாயா ஹாஸ்டலில் தங்க போய்விடுகிறாள் ஜமுனாவை தனிமை வாட்ட தற்கொலைக்கு முடிவு செய்கிறாள் இதை வீட்டு ஓனர் பார்த்து விட்டு வீட்டை காலி செய்யசொல்லி தொல்லை. சாதாரண பெண்ணக வந்து போகும் டீச்சரம்ம ஒரு இடத்தில் வெடிக்கிறாள் அந்த வெடிப்பில் வாழ்கையை எதிர்கொள்ளும் சக்தியை ஜமுனா பெறுகிறாள் இது நாவளின் முக்கியமான இடம். பெண்ணா பொறந்துட்டு அழலாமோடி? என்று கேட்கும் டீச்சரம்மவின் கேள்வில் எத்தனை துயரங்கள் மறைத்து கிடக்கிறது. இலாதவனின் காமம் எத்தனை வெறி கொண்டு வெளிப்பட்டு வலிப்பாக டீச்சரம்மவின் கணவனுக்கு வருகிறது என்பதை சொல்லும் இடம் அற்புதம். அதோ இரண்டு குழந்தைகள் தூக்க முடியாமல் தண்ணீர் குடத்தை தூக்கி கொண்டு போகிறதே அந்த தண்ணீர் அந்த குழந்தைக்க? இல்லை யாரோ அவர்களை செய்ய வைத்து இருக்கிறார்கள் வாழ்கையில் யாருக்கு தான் கஷ்டம் இல்லை? அதற்காக அந்த குழந்தைகள் என்ன சாகிறேன் என்றா போகிறது?. டீச்சரம்மா விடம் இருந்து வாழ்தலுக்கான உந்துதல் ஜமுனாவிற்கு கிடைக்கிறது, வாசகனுக்கும் தான். ஜமுனா உன் குழந்தைக்கு அப்பா வேண்டாமா, நாளை ஊரார்க்கு எப்படி பதில் சொல்வது என்று சாயா கேட்கிறாள், ஜமுனா எதற்கு அப்பா நமக்கு எல்லாம் அப்பா இருந்தாரா என்ன? என்று சர்வசாதாரணமாக கேட்கிறாள்,நாளை தானே உலகம் கேள்வி கேட்கும் நாளை பதில் சொல்லிகிறேன் இன்று ஏன் கவலை பட வேண்டும்? என்று சொல்கிறாள். ஆமாம் அந்த இரண்டு பெண்களுக்கு என்ன ஆயிற்று ஏன் தன்னம்தனியாக இருகிறார்கள், ஏன் என்ற கேள்விக்கு எல்லாம் வாசகர்கள் விடை கண்டுகொள்க வேண்டும். இருவரும் சமைக்காமல் வெளியே கிளம்பும் போது 'பாவம் புது குக்கர்' ஏமாந்து போகும் என்று சொல்கிறாள். அவளை நினைத்து நாம் எல்லோரும் வருத்த படுகிறற்கள் ஆனால் அவள் உயிரற்ற குக்கருக்கு கவலை படுகிறாள். இப்படி பட்ட பெண்களை தான் இந்த சமுகம் வாழ்நாள் முழுவதும் ஏமாற்றி வருகிறார்கள், மென்மையான பெண்களை சமுகம் வெறும் காமப் பொருளாக மட்டுமே நடத்துகிறது. எதன் பொருட்டு ஒரு ஆண் ஒரு பெண்ணுக்கு உதவி செய்ய முன் வருகிரான்? என்ற கேள்வியை எழுத்தாளர் நம் முன் வைக்கிறார், ஆமாம் அதன் அடி ஆழத்தில் இருப்பது காமம் தான் அது தான் அவனை தூண்டுகிறது.
சில இடங்களில் பிராமணர்கள் மீதான ஒடுக்கு முறையை தொட்டு செல்கிறது.
 பாஸ்கர் ராவ் கார் சேற்றில் மாட்டி கொள்கிறது
"இடது பக்க இரண்டு சக்கரம் சேற்றில் சிக்கியது, சாயா ஜமுனாவின் கையை பிடித்தாள் ''

என்று கதை முடிகிறது இந்த குறியீடு எதை குறிக்கிறது என்று சிந்தித்தால் வாசகனின் வாசிப்பு பூர்த்தி அடையும். அசோகமித்ரன் படைப்பில் தண்ணீர் குறிப்பிடத்தக்கது.

Monday, July 31, 2017

எக்ஸைல் - சாரு நிவேதிதா

எக்ஸைல் - விமர்சனம்


இது ஒரு பின்நவினதுவ நாவல் என்பதால், நானும் பின்நவினதுவ முறையில் விமர்சனம் செய்து இருக்கிறேன்.

மொத்தத்தில் இந்த எக்ஸைல் புத்தகத்தில் சிறுகதை, கவிதை, சமையல் குறிப்பு, இயற்கை மருத்துவம், செக்ஸ் பிரச்சினை அதற்கு தீர்வுகள், Love Story, கல்ல காதல், உதையவின் சொந்த கதை, சோக கதை, பாலியல் கொடுமைகள், வரலாறு, ஆன்மிகம், நாத்திகம், அந்தரங்கம், சரக்கு பட்டியல்,வாசிய மருத்துவ தயாரிப்பு முறை, chiled abuse, கயல்லாஞ்சி கொடுரத்தின் உச்சம் எப்படி மனிதனுக்கு தன் சக மனிதன் மீது இத்தனை வன்மமும் வெறியும் வருகிறது?. (இவர்கள் இடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் கோக்கரகோ)  இப்படி எதோதோ இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு
இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு
இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு
இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு
இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு... இது ஒரு தகவல் பொக்கிஷம் என்று சொல்லலாம், சந்தேகமே இல்லாமல் கொண்டாட பட வேண்டிய நபர்  சாரு.
*இது இந்த புத்தகத்தின் இரண்டாவது கிளைமேக்ஸ்.
                 ~~~~
நீங்கள் சொல்லும் குஷால்தாஸ் எனது ஊகம் படி அது அந்த டுபாக்கூர் சாமியார் யோகி.பக்கி வாசுதேவ் என்று நினைக்கிறேன். அவர் ஆன்மிக கார்ப்பரேட் நிறுவனம் தான் தமிழகத்தில் பிரபலம். நித்தியானந்தா விடம் வேறு அனுபவம் இருந்து இருக்கிறது.
                    ~~~
எங்க ஊர்ல ஒரு எழுத்தாளர் இருக்கார், அவர் இப்படி சொல்வார். ட்ராபிக் போலிஸ் சொல்வதையே, ஒரு எழுத்தாளனும் சொன்னால், பிறகு அவன் என்ன எழுத்தாளர்???. இப்படி தான் உதையா* எழுதிய எக்ஸைல் இருக்கு. ஒரு வருடம் உங்கள் வாழ்கையில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகள், கொஞ்சம் அந்தரங்கம், நீங்கள் படிக்கும் முக்கியமானவை. இதை எல்லாம் ஒரு கோர்வைய எழுதினா நீங்களும் எக்ஸைல் புத்தகம் எழுதலாம். உதையா சொல்லும் தத்துவம் எல்லாம்  கோக்கரகோ* விற்கே  தோன்றி இருக்கிறது.
இதில் இதை ஐந்து லட்சம் செலவு செய்து ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்கிறார் உதையா . ஆங்கிலத்தில் ஒரு வேளை ஹிட் அடிக்கலாம் ஏன் என்றால் இதில் சொல்லப்படும் விஷயங்கள் கோக்கரகோ விற்கு ஏற்கனவே தெரியுமே ஒழிய ஆங்கில வாசகர்களுக்கு தெரியாது இல்லையா? அதனால் அங்கு இது கொண்டாட படலாம்.

*கோக்கரகோ என்பது வாசகன்(me).*சாரு நிவேதிதா தமிழக எழுத்தாளர், அப்புறம் உலகத்திலே மூனோ நாலோ பேரு தான் அவர் போல எழுதுராங்களாம்.


                     ~~~~
இப்படி தான் கோக்கரகோ விற்கு ஒரு அனுபவம். சரி உலக இலக்கியம் படிக்கலாம் தமிழில் தான் மொழி பெயர்ப்பு கொட்டி கிடக்கிறதே என்று ஃபியோடார் டோஸ்டோவ்ஸ்க இன் வெண்ணிற இரவுகள் வாங்கிவிட்டான். ஆச்சரியம் பாருங்க பத்து பக்கங்களுக்கு மேல் படிக்க முடியவில்லை அவ்வளவு மோசமான மொழிபெயர்ப்பு. அப்புறம் என்ன இன்னும் அந்த புத்தகம் தூங்குகிறது பணம் தான் வேஸ்ட்.
உதையாவிற்கு எப்படி பிற மொழியில் எழுத தெரியாதோ அதே போல கோக்கரகோ விற்கு ஆங்கிலம் படிக்க வராது. பிறகு எப்படி கோக்கரகோ Pablo neruda வையோ Fyodor Dostoevsky யோ Tolstoy யோ படிப்பான். டால்டாய் புத்தகங்கள் ஒரளவு நல்ல மொழிபெயர்ப்பு இருப்பதாக கேள்வி. தமிழ் சூழலில் எழுத்தாளர் படும் படு, அதை நாவல் முழுக்க புலம்பி தள்ளுகிறார் சாரு பாவம்.                  
                       ~~~~~
Kokkarako body temperature 103° degrees today, medically it's called fever, so...... Dr billed 500rs, tupied Dr not told him after injection injected you may get Allure, so Kokkarako allured in street, then one old grandma helped him, like this today  indian Dr. Kokarakko also same as udhaya how can explain loneliness he spends 27 yr lonely still continuing, Kokkarako hearing hmm kulthum elf leila we leila. Kokkarako watching Ray (Jamie boxx).
                       ~~~~
சரி இனி விஷயத்திற்கு வருவோம், பல இடங்களில் சாட்டையடியாக சமுகத்தை கேள்வி கேட்கிறார் உதையா. நூறு பேர் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்ததை உதையா கற்பழிப்பு என்று எழுதுகிறார் கோக்கரகோ விற்கு தூக்கி வாரி போட்டுவிட்டது. மனித மனதின் கீழ்மையை வெட்டி வெட்டி வைக்கிறார் உதையா, கலாச்சாரம் இனம் மொழி என்று எப்படி உழன்று கொண்டு இருக்கிறான் என்று தெளிவாக விளக்குகிறார். இதற்காகவே உதையாவை கொண்டாட தான் வேண்டும். குமுதம், ராணி, குங்குமம் படித்துவிட்டு சாண்டில்யன் தடி தடியான நாவல் கொஞ்சம், பாலகுமாரன் நாவல் கொஞ்சம் இதை படிச்சிட்டு நான் பெரிய இலக்கிய புடுங்கி என்று பலர் தமிழகத்தில் இருக்கிறார்கள். இவர்கள் எங்கு உதையாவை வாசிக்க போறாங்க, நீ ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்வதே சால சிறந்தது உதையா.
*இது கிளைமேக்ஸ்.
                     ~~~~
கிட்டத்தட்ட இந்த உலகில் அணைத்து பெண்களும் child abuse க்கு ஆளாகதவர்களே இல்லை என்று சொல்லலாம். காமம் மனிதனை எந்த கீழ்மையை நோக்கியும் தள்ளுகிறது, கமத்திற்காக தனது சக மனிதனை சக உயிரை எத்தனை கொடுமையும் செய்கிறான் ச்சே .பெண் என்னும் உயிரை எப்படி எல்லாம் வதைகிறான் oh என் சிவனே திவாகர் போன்ற அற்ப்ப மானிட பதர்களை நசுக்கி இல்லாமல் செய்ய மாட்டாயா? உமையெரு பங்கம் கொடுத்தாயே, ஏன் என்று இந்த ஆன்மா அற்ற மனித புழுக்களுக்கு சொல்லமாட்டாயா. கோக்கரகோ also have (had) one girls friend like அஞ்சலி you remember me everything, ho man I can't control my self. Those days feeling killing me, killing every minute , killing every second. I can't read anjali childwood abuse. Plz stop anjali stop. Ho no what happened to me?............................
                      ~~~~~
இன்று கோக்கரகோ அலுவலகத்தில் எக்ஸைல் படித்தான், அவன் அலுவலகத்திற்கு வந்து போகும் ஒருவர் அப்போது வந்தார் அதனால் கோக்கரகோ புத்தகத்தை மூடிவிட்டான் அவர் என்ன புத்தகம் என்று கேட்க கோ சாரு நிவேதிதா என்று சொல்ல, ஏண்டா டேய் செக்ஸ் கதை படிக்ர இடமா இது? நீ எப்படி அலுவலகத்தில் இதை படிக்கலாம்? இதில் எந்த செக்ஸ்யும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை, அவர் செக்ஸ் மூலமாக நடக்கும் மனித கீழ்மைகளை தான் சொல்கிறார். அது எல்லாம் ஒன்னும் இல்லை எல்லாம் செக்ஸ் கதை தான், நீங்கள் சாரு வை படித்து இருக்கீங்களா? என்றான் கோ, நான் பக்கம் பக்கமாக அவர் புத்தகத்தை அவர் இடமே விவாதிப்பேன், அவர் வீடு இங்க தான் வரியா போலாம், அவர் உடன் பழகி இருக்கேன் புகைப்படம் எடுத்து இருக்கேன் அவர் பத்தி எனக்கு தெரியாதா? அவரை பற்றி சொல்ல ஒரு பக்கம் படித்தால் போதாத? எல்லாம் ஆபாச கதைகள் என்றார் அந்த ஆசாமி. நீங்கள் ஒரு பக்கம் படித்து விட்டு சாரு ஒரு செக்ஸ் பைத்தியக்காரன் என்று சொல்ரீங்க, நான் 441 பக்கமும் படித்து விட்டு சாரு is great என்று சொல்கிறேன், பெண் குழந்தையை யாரோ ஒருவனை நம்பி வீட்டில் விட்டு போனா இதான் நடக்கும் என்று செருப்பால் அத்தது போல பச்சையாக சாரு சொல்கிறார்,அதில் எனக்கு எந்த ஆபாசமும் தெரியவில்லை, இதில் உங்களுக்கு ஆபாசம் தான் தெரிகிறது அதன் கருத்து தெரியவில்லை என்றால் நீங்கள் இலக்கியம் வாசிக்கவே இலாய்க்கு இல்லை என்றான் கோக்கரகோ. வேறு எதுவும் பேசாமல் ஜெயவேல் சென்றுவிட்டார். அடுத்த நாள் அலுவலகம் வந்த கோக்கரகோ விற்கு பெரும் அதிர்ச்சி, அவன் பாஸ் அவனை அழைத்து நீ இங்க ஒழுங்கா வேலை செய்வது இல்லை, நீ சரி இல்லை, உனக்கு பதில் வேறு ஆளை போட்டு இருக்கலாம் என்று அவன் தலையில் கல்லை போட்டார்கள். ( நான் அப்படி என்ன செய்து விட்டேன் சாரு? இவர்களும் உதையவின் எஸ்யும் ஒன்று தான்).

உதையா தன் எக்ஸ் இன் கெட்டு போன முலை பாலை இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை எடுத்து அவள் வலியை நீக்குகிறான், இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை மலம் சாப்பிடுவது போல இருந்து என்று உதையா சொல்கிறான். அவள் தூரத் துணிகளை துவைக்கிறான்,இன்னும் எதோதோ செய்கிறான், ஆனால் அவள் உதையவின் வீட்டை எடுத்து கொண்டு இவரை நடு தெருவில் விடுகிறாள், உதையவின் வாழ்க்கையை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது கோக்கரகோ. (இங்கு தான் பெண்களை அடிமையாகவே வைத்து இருப்பது தான் சிறந்தது என்று தோன்றுகிறது, நம் முன்னோர்கள் என்ன முட்டாளா? கோ).
                          ~~~~~
ஆற்று நீர் போல் சட சட சட சட சட சட என்று எளிமையாக ஓட்டமும் நடையுமாக போகிறது, ஆனால் transgressive, auto fiction நாவலை வாசிக்க நுண்ணுணர்வு தேவை, தமிழ் சூழலில் அறவே அது இல்லை எனலாம். அதனால் தான் சாரு எல்லோர் இடமும் திட்டு வாங்கிகொண்டு இருக்கிறார். அவரை வாசிப்பவர் எல்லோருக்கும் அவர் செக்ஸ் தான் தெரிகிறது அதன் கருத்து சரடு தெரிவதில்லை அது நுண்ணுணர்வு உள்ளவர்களுக்கு மட்டுமே கைகூடும். 

ஒரு நாள்- கா நா சு

ஒரு நாள் - கந்தாடை நாராயணசாமி சுப்ரமண்யம்.



நாவல்              :ஒரு நாள்
எழுத்தாளர்     : கா நா சுப்ரமணியம்
வகை                : இலக்கியம்
பதிப்பகம்        : ஷாண்வி புக்ஸ்
பக்கங்கள்       : 176

ஹிட்லர் படையில் ஒரு போர் வீரனாக இருந்து பிறகு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அழைப்பின் பேரில் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய மேஜர் கிருஷ்ணா மூர்த்தி, உறவினர் யாரும் இல்லாததால் தன் மாமா வீட்டிற்கு அறை குறை மனத்தோடு சாத்தனூர் சர்வமானிய அங்கரஹாரத்தற்கு வருகிறார். பல ஆண்டுகளாக எந்த மாற்றமும் தனக்குள் அனுமதிக்காத அங்கரஹாரம் அது. ஜெர்மன், பர்மா இந்திய தேசிய ராணுவம் என்று பல போர் களங்களில் மனித வேட்டைகளை பார்த்து வாழ்ந்த மூர்த்தி ஒரு நாள் சாத்தநூர் அக்ரஹாரம் வந்து அங்கு இருக்கும் சாதாரண மனிதர்களின் வாழ்கையை பால கூறுகளாக விரிவாக மூர்த்தி அவர் மாமாவின் உரையாடல் மூலம் விரிகிறது நாவல். மனித வாழ்வின் பல்வேறு சிக்கல்களை தீர்த்துவிட முடியுமா என்று விவாதித்து பார்க்கிறார்கள். மனிதன் பொருப்புக்கள் இல்லாமல் தனியாக இருக்கவே விரும்புகிறான் ஆனால் அனைவர் வாழ்விலும் அவர்கள் சுமந்தே தீரவேண்டிய கடமைகள் உள்ளது என்பதை குறிப்பாக உணர்த்துகிறது நாவல். மனிதனின் வாழ்வில் ஆதார பிடிப்பு குடும்பம் என்னும் அமைப்பு, அதில் இருந்து எந்த சுதந்திர மனிதனும் விலகி விட முடியாது என்று மூர்த்தி மூலம் உணர்த்துகிறார் கா. நா சு.