இங்கே எழுதப்படுபவை என் வாசிப்பு நிரைவுக்காக மட்டுமே.

Tuesday, October 24, 2017

குட்டி இளவரசன்-அந்த்வான் து செந்த்-எக்சுபெரி



இது ஒரு குழந்தை இலக்கிய நூல் போன்று இருந்தாலும் மனிதர்களின் அற்தமற்ற செயல்களை செவிடீல் அரைகிறது. ஏன் மனிதர்கள் அங்கும் இங்கும் அலைகிறார்கள் இந்த இடம் பிடிக்கவில்லையா ஏன் இடமாறுகிறார்கள் என்று கேட்கிறபோது நமக்கு தோன்றுகிறது ஏன் நாம் அங்கும் இங்கும் அலைகிறோம்?. இவர்களாள் ஒரு
ரோஜா செடியை புரிந்து கொள்ள முடியவில்லை ஆனால் ஆயிரக்கணக்கான ரோஜா செடி எதற்கு வளர்க்கிறார்கள் என்று பல கேள்விகள் குட்டி இளவரசன் கேட்கிறான். பெரியவர்களுக்கு எப்போதும் எல்லாவற்றுக்கும் விளக்கம் தேவை ஆனால் குழந்தைகள் தாங்களாகவே ஆனைத்தையும் யூகித்துக் கொள்கிறது. ஒரு மலை பாம்பு யானையை முழுங்கிய படம் வரைகிறான் அதை பலர் இடம் காட்டிய போது அது ஒரு தொப்பி என்று சொல்கிறார்கள் பிறகு உள்புறம் யானை இருப்பது போல ஒரு படம் வரைகிறான் அதை காட்டும் போது எதாவது உருப்படியான வேலை செய் என்று சொல்கிறார்கள் இப்படி தான் ஓவியம் வரைவதை அவன் கைவிட்டான்.

"பெரியவர்கள் ஒரு போதும்  எதையும் தாங்களாகவே புரிந்து கொள்வதில்லை. எப்போதும் ஒயாமல் விளக்கங்களைத் தருவது குழந்தைகளுக்குச் சலிப்பு தருவதாக இருக்கிறது"

குட்டி இளவரசன் நரி ரோஜா செடி பாம்பு என்று எல்லவற்றுடனும் பேசுகிறான் புறிந்து கொள்கிறான் ஆனால் அவனால் மனிதர்களை, மட்டும் புரிந்து கொள்ளவே முடியவில்லை. மனிதர்கள் எல்லோரும் தங்களுக்கு கீழ்பனிய சொல்கிறார்கள் அல்லது கட்டலை போடுகிறார்கள் அவர் உறவை ஏற்படுத்த விரும்பவில்லை உறவை துண்டிக்கவே நினைக்கிறார்கள் இது தான் இந்த சிறிய புத்தகத்தின் மையம் என்று நினைக்கிறேன்.

குட்டி இளவரசன் இதுவரை 173 மொழிகளில் வெளியாகி 80 மில்லியன் பிரதிகள் விற்பனையாகி உள்ளது. 1943ல் வெளியான இந்த நாவல் தமிழில் 1981 ஆண்டு க்ரியா பதிப்பக  வெளியீடாக வந்துள்ளது. மிக சிறப்பாக இந்த நாவலை பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்த்தவர்கள் மதனகல்யாணி மற்றும் வெ. ஸ்ரீராம்.

No comments:

Post a Comment