இங்கே எழுதப்படுபவை என் வாசிப்பு நிரைவுக்காக மட்டுமே.

Thursday, November 2, 2017

நொறுங்கிய குடியரசு-அருந்ததி ராய்

புத்தகம் - நொறுங்கிய குடியரசு
எழுத்தாளர் : அருந்ததி ராய்
விருது : புக்கர் பரிசு பெற்றவர்
பதிப்பகம் : காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ்
முதல் பதிப்பு : 2011
பக்கங்கள் : 190


அருந்ததி ராய் இந்தியாவின் மிக முக்கியமான எழுத்தாளர். The God off small things என்று புத்தகத்திற்கு புக்கர் பரிசு பெற்று உலகளவில் அறியப்பட்டவர். இந்தியாவில் ஒடுக்கப்படும் காஷ்மீர் மணிப்பூர் நாகலாந்து போன்ற பல மக்களுக்கு குரல் கொடுப்பவர் இந்து மதத்தால் நடக்கும் அட்டுழியங்களை எதிர்த்து எழுதுபவர். இந்தியாவில் வளர்ச்சி என்ற பெயரில் நிலங்கள் கையகப்படுத்தும் அரசு அந்த இடத்தில் இருந்த தன் சொந்த நாட்டு மக்களை பலவந்தமாக துரத்துகிறது பிறகு ஏதோ ஒரு கன்பெனிக்கு அந்த இடம் கொடுக்கபடுகிறது பிறகு வெறும் ஏழு சதவிகித இலாபம் மட்டும் அவற்றிடம் இருந்து பெறுகிறது, அந்த கன்பெனிக்கு பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் கடற்கரை ஓரம் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை தருகிறது ஆனால் அந்த மக்கள் அனாதையாக கைவிடபடுகிறார்கள், ஒரு கணக்கு சொல்கிறது இப்படி இடம் மாற்றம் செய்யப்பட்ட மக்கள் எண்ணிக்கை 5 கோடி பேர் என்று. அறுபதாம் சுதந்திர தினம் கொண்டாட டெல்லியில் இருந்து தெரு வாசிகள் பலர் இப்படி அப்புறப்படுத்த பட்டார்கள் பிச்சைகாரர்கள் இருந்த இடம் தெரியாமல் ஆனார்கள் இதுதான் வளர்ச்சியா உண்மையில் யோசித்து பார்த்தால் இந்திய வறுமையை போக்கவில்லை வறுமையில் இருக்கும் மக்களை கொல்லவும் கூட செய்கிறது அரசு எப்போதும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பக்கமே நிற்கிறது இந்த தேசத்தின் ஏழை மக்களை அது மோசமாக நடத்துகிறது இதன் வெளிப்பாடு தான் 33 ரூ சம்பாதிக்கும் ஒருவர் வறுமை கோட்டிற்கு கிழ் இருப்பவர் இல்லை என்ற அறிவிப்பு கூட அரசு வறுமை போக்க திட்டம் போடுவதை விடை அதை மூடி மறைக்கவே திட்டம் போடுகிறது நம் அரசு செய்வது எல்லாம் நினைத்து பார்த்தால் நமக்கு வெட்கி தலைகுனிவாதாக தான் இருக்கிறது. பூர்வகுடி மக்களை அவர்கள் நிலத்தில் இருந்து விரட்டியடிக்க அரசு கையாளும் யுத்தியே மாவோயிஸ்ட் என்று சொல்கிறது முதல் பகுதி. அதே நேரத்தில் மாவோயிஸ்ட்களோ மக்களோ போராட்டத்தை விரும்பவில்லை மத்திய அரசு தான் அவர்கள் கையில் திணிக்கிறது என்று மாவோயிஸ்ட்களுக்கு வக்காலத்து வாங்கும் அருந்ததி ராய் தமிழ் ஈழம் விடுதலை புலிகளை மோசம் என்பது தான் எந்த தராசில் நிருத்தி எடை போடுவது என்று தெரியவில்லை.
இதன் முதல் பகுதியில் சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒரிசா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் மலைகளை வெட்டி பாக்ஸைட் எடுக்க அந்த இடத்தில் இருந்து பூர்வகுடி மக்கள் எவ்வாறு துரத்தியடிக்கபடுகிறார்கள் என்றும் எவ்வாறு மக்கள் ஒடுக்கபடுகிறார்கள் என்றும் விரிவாக பேசுகிறது.

மேலே ஏனோ வாசிக்க ஆர்வம் இல்லை. 

No comments:

Post a Comment