இங்கே எழுதப்படுபவை என் வாசிப்பு நிரைவுக்காக மட்டுமே.

Friday, October 20, 2017

ஜீரோ டிகிரி - விமர்சனம்

நாவல் : ஸீரோ டிகிரி
எழுத்தாளர் : சாரு நிவேதிதா
பதிப்பகம் : ஜியே பதிப்பகம்
முதல் பதிப்பு : 1998
பக்கங்கள் : 252
வகை :  நான் லீனியர் நாவல்
விருது : சுவிட்சர்லாந்தின் யான் மிஸால்ஸ்கி இலக்கிய விருதுக்கு  2013-ஆம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்டது. 



முனியாண்டி கடும் உழைப்பாளி எந்த வேலையும் தட்டாமல் செய்வான் ஆனால் பேச்சு என்று வந்தால் வாக் னா வாக் டாக் னா டாக் பேக் னா பேக் சாக்னா எழுதுறது லுக்னா பாக்குறது பெக்னா சரக்கு இப்படி தான் பேசுவான்.

[°]

நீனா மாதிரி எத்தனை எத்தனை நீனாக்கள் வரலாற்றில் சுவடே இல்லாமல் கொடுமை சித்ரவதைகள் அனுபவித்து இருப்பார்கள் என்று நினைத்தால் கடும் மன வலி எழுகிறது. அதுவும் ஒரு மாகா ராணியின் பெண் அடுத்த நாள் யாருக்கோ அடிமை. வரலாற்றில் நாம் வீரம் என்று கொண்டாடுவது எல்லாம் இதை தானா, அடுத்த நாட்டை கைப்பற்றுவது, அவன் பிள்ளைகள் மனைவிகளை அடிமை படுத்தி தாசியாக விற்பது, அல்லது அனந்தபுரத்தில் தள்ளுவது. தமிழர்கள் தலைமேல் வைத்து ஆடிகொண்டு இருக்கும் இராஜராஜ சோழன் செய்ததும் இதை தானே?.முனியாண்டி எங்கு செத்தான் தென் ஆப்பிரிக்கா அல்லது காஸ்மீரா?. கல்வியறிவு உயர்ந்து மட்டும் என்ன பயன் இன்னும் சாமியார்கள் பெண்களை வன்புணர்வு செய்து கொண்டு தானே இருக்கிறார்கள் அப்போ எதுவும் மாறபோவது இல்லையா மனித அகம் எத்தனை நூற்றாண்டு கடந்தாலும் தனக்குள் இருக்கும் அந்த கொடுர குணத்தை கடத்தி கொண்டே தான் இருக்குமா.

[°]

கூண்டு கிளியின்
குஞ்சுற்கு
ஏன்
சிறகுகள்
முளைக்கிறது ?

[°]

ஒன்பதாம் நூற்றாண்டு செத்த மூளை இது வரை சாரு வின் மூன்று புத்தகம் படித்து இருக்கிறான் எக்ஸைல் வாழ்வது எப்படி சீரோ டீகிரி இந்த மூன்றையும் வைத்து ஒன்பதாம் நூற்றாண்டு செத்த மூளை சொன்னது சாரு எழுதுவது சரிபாதி அவர் சொந்த கதை சோக கதை என்று. ஒன்றை எழுதுவது பிறகு அதை விட்டுவிட்டு வேறு எதையாவது எழுதுவது பிறகு எப்போ தோன்றுகிறதோ அப்போது அதை ஐம்பது பக்கம் தாண்டி எழுதுவது கேட்டால் உலகத்தில் இப்படி எழுத ரெண்டோ மூன்றோ பேர் தான் இருக்கிறார்கள் அதில் நானும் ஒருவன் என்று விளக்கம் தருவார்.
முனியாண்டியை நாய் துரத்துகிறது வல் வள் வள் கல் வள் வாஆல் வள் வள் வள் வள் வள் வள் வள் வள் வள் வள் வள் வள் க்கள் வல் கல் வல்.   புகழ் பெற்ற விளையாட்டு வீரர் மணிக்கு முப்பது ஒரு கிலோமீட்டர் வேகத்தில் ஓடுகிறார்.
தேன் மூத்திரம் நாய் பானை இரும்பு விந்து மரம் வைப்பாட்டி வாசனை நான் கோழி மலம் வீடு மூக்கு சளி மொழி எல்லாம் வெறும் சத்தத்தால் ஆனது இந்த உலகமே சத்தங்களால் ஆனது இப்போது எழுதி கொண்டு இருக்கும் இதுவும் தான். எக்ஸைல் இல் வரும் திவாகர் நாய் போலவே இதிலும் ஒருவன்.

{°}

இதில் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் எல்லாம் நம் எங்கோ அன்றாடம் கேட்பது படிப்பது ஒரு கண்ணாடி அறை உள் நடப்பவை நாம் அறிந்து இருந்தாலும் அவர்களின் குரல் நம் காதில் விழுவதில்லை அந்த குரல்களின் அலறல் தான் சாரு வின் எழுத்து அதை தான் டார்ன்கிஸ்யும் ரைட்டிங் என்று சொல்கிறார்கள் அப்புறம் இது பின்நவினதுவம் என்ற வார்த்தை ஒத்துவரவில்லை நான்லீனியர் நான் சரி ¿. பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் அனைத்தும் செக்ஸ் சம்மந்தப்பட்டது என்பதால் அதை அதே வார்த்தைகள் கொண்டு சாரு சாடுகிறார் ஆனால் அதில் இங்கு வாசிப்பவர்களுக்கு அந்த ஆபாச வார்த்தைகள் தான் தெரிகிறதே ஒழிய அவர் பேசும் பொருள் புரிவதில்லை இதனா‌ல் சாரு ஒரு குப்பை என்று அவரை நாடு கடத்தி தூக்கில் போட வேண்டும் என்று எல்லாம் பேசுகிறார்கள். மூடர்கள். நீனா விற்கு போய் பிடித்து விட்டது அதனால் அவள் முலை மொட்டை வெட்டி எடுத்தான் அந்த சாமியார் பிறகு அதில் பிளகாய் பொடி அள்ளி கொட்டினான் இதை எப்படி எழுதுவது ரோஜா மொட்டு கிள்ளப்பட்டது என்றா பைத்தியக்காரத்தனம் மாக இல்லை செக்ஸ் பற்றிய புரிதல் இல்லாமை தான் இதற்கு காரணம். என்று சுத்த தமிழ் எழுத்தாளன் சொல்கிறான்.

[¿]

காஸ்மேனியர்கள் கார்மீனியர்களை கொள்கிறார்கள் கார்மீனியர்களை கார்மீனியர்கள் கொள்கிறார்கள்  என்ன வித்தியாசம் ஒரு எழுத்து தாணே ஆனால் இது 2700 ஆண்டுகளாக இது நடந்து வருகிறது கார்மீனியர்கள் கிருஸ்துவர்கள் அரேபியர்கள் அந்த நாட்டை கைப்பற்றிய போது (1908) சுமார் பதினெட்டு லட்சம் மக்கள் கொள்ளப்பட்டார்கள் இப்படி உலகம் முழுவதும் எத்தனையோ படுகொலைகள் இன்று முதல் நடந்து கொண்டு நான் இருக்கிறது பிறகு என்ன தான் வளச்சியோ என்ன எழவோ ஒன்று புரியவில்லை. இப்படி genocide மத சண்டை சாதி சண்டை பெண்கள் கொடுமைகள் என்று எல்லவற்றையும் சாடுகிறார் சாரு இதனால் தான் என்னவோ சாரு நிவேதிதா நாகரீகம் முன்னேற்றம் என்ற பழமைவாத ஒழுக்க விதிகளை எட்டி மிதிக்கிறார் போலும் எந்த மாற்றமும் நிகழாத போது பிறகு என்ன ஒழுக்கம் கட்டுபாடு வெங்காயம் கந்தரிக்காய் என்று.

[°]

தாயுமானவன் போன்றவர்கள் ஏன் சக மனிதனை இந்தனை கொடுமை செய்கிறார்கள், மனித அகம் ஏன் மற்ற மனிதன் துண்ப படும் போது மகிழ்கிறது அவனுள் இருக்கும் மிருக தனமா மிருகங்கள் இப்படி செய்கிறதா. மனிதர்கள் தான் தன் சக மனிதனை எப்படி எல்லாம் கொடுமை படுத்தலாம் என்று ஆயிரம் ஆயிரம் வழிகளை கண்டுபிடித்து இருக்கிறான் வரலாற்றில் என்ன என்ன சித்ரவதை முறைகள் இருந்தன என்று பார்த்தால் தலை கிறுகிறுக்கும் இப்படி எல்லாம் மனிதன் சிந்திக்க முடியுமா என்று தோன்றும். தாயுமானவன் வாயில் கொதிக்கும் எண்ணெய் ஊற்றினால் என்ன செய்வான் அம்மனை வேண்டுவனா. அவன் கால் தசையை மெழுகுவர்த்தியால் சுட்டு வெட்டி எடுத்து வெந்துவிட்டதா என்று சாபிட சொன்னால். Zero° degree is point of a perfect 360° circul we all are standing in zero point we can watch around the entire world but we don't but charu did this then only can write zero degree.

[°]

இந்த நாவலின் சவால் பல பக்கங்களில் சிதறி கிடக்கும் நாவல் பகுதிகளை ஒன்று திரட்டி தொகுத்து கொள்வது தான். உங்கள் நாட்டில் யானை இருந்தும் நீங்கள் ஏன் உண்பது இல்லை. வித்தியாசமான அனுபவம் கிடைக்கும் உண்மை. சரி நீங்களும் வாசித்து தான் பாருங்களேன்.

[.....]

No comments:

Post a Comment