இங்கே எழுதப்படுபவை என் வாசிப்பு நிரைவுக்காக மட்டுமே.

Monday, December 18, 2017

மகாத்மா காந்தி கொலை வழக்கு - என். சொக்கன்



மகாத்மா காந்தி கொலை வழக்கு - என். சொக்கன்.
கடந்த நான்கு நாட்களாக காந்தி பற்றிய பேச்சுகலாகவே இருந்தது அத்த நேரத்தில் தான், மகாத்மா காந்தியின் கொலை வழக்கு என்ற புத்தகம் கிடைத்தது.இந்தியாவே கொண்டாடிய ஒரு மனிதரை ஏன் உலகமே கொண்டாடிய ஒரு மாமனிதரை எதற்காக கொன்றார்கள் யார் கொன்றார்கள். என்ற இக்கேள்வி உள்ளவர்களுக்கு இந்த புத்தகம் ஒரு விடை. ஏன் கொன்றார்கள்  என்ற கேள்விக்கு ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்லி இருந்தாலும் எதற்காக எப்படி கொலை நடந்தது என்று மிக விரிவாக பேசுகிறது இந்தப் புத்தகம். "நமது பூமி புனித பூமி அதை தெய்வ தன்மை இல்லாததாக மாற்ற விரும்பவில்லை மக்களை  பலியிட்டு அடைகின்ற சுதந்திரம் நமக்கு தேவையில்லை அப்படி அடையும் சுதந்திரம் நிலைக்காது என்றார் - காந்தி" அவர் எதை தடுக்க நினைத்தாரோ அது சுதந்திர இந்தியாவில்  நடந்தது கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் ரத்தத்தால் உரைத்தது மதக்கலவரங்களால்  லட்ச கணக்கான மக்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டார்கள். உண்மையில் காவல்துறை நினைத்திருந்தால் படுகொலையை தடுத்து இருக்கலாம் ஜனவரி 20ம் தேதி மகாத்மா ஒரு வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது அப்போது மதன்லால் என்ற ஒருவன் கைது செய்யப்பட்டான் அவன் காவல்துறையிடம் வேறு பல வாக்குமூலங்களை சொன்னான் அவன் அடிக்கடி ஒன்றைத் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான் அது அவர்கள் மீண்டும் வருவார்கள் என்பதுதான்.  இதை வைத்து காவல்துறை விசாரித்திருந்தால் மாபெரும் கொலையில் தடுத்திருக்கலாம் ஆனால் ஆனால் மும்பை  மற்றும் டெல்லி காவல் துறை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை இதன் விளைவாக பத்து நாள் கழித்து மகாத்மா காந்தி கொல்லப்பட்டார்.

காந்தி கொலைக்கு இவர்கள் திட்டமிட்டது எல்லாம் விளையாட்டு தனமான ஒன்றாக தான் திட்டம் போட்டு இருக்கிறார்கள். நாதுராம் கோட்ஸே இன்று இந்து முன்னணி RSS போற்றவர்கள் கொண்டாடுகிறார்கள். காந்தியின் கொலை ஒரு தவறான புரிதலால் நிகழ்ந்தது காந்தி இஸ்லாமியர்களுக்காக பேசவில்லை அவர் அறம் எதுவோ அதைத்தான் பேசினார். அவர் மதத்தின் பெயரால் படுகொலை செய்யப்பட்டார் இந்தியாவின் முதல் பெரும் வழக்கு இது எப்படி நடந்தது என்ன தீர்ப்பு வந்தது என்ன ஆவணங்கள் யார் எல்லாம் சாட்சி சொன்னார்கள் என்று இந்த புத்தகம் பேசுகிறது. 

No comments:

Post a Comment