இங்கே எழுதப்படுபவை என் வாசிப்பு நிரைவுக்காக மட்டுமே.

Sunday, August 12, 2018

மூங்கில் கோட்டை - சாண்டில்யன்



நீண்ட நாட்களாக எந்த புத்தகத்தையும் முழுமையாக வாசித்து முடிக்காததால் இந்த புத்தகத்தைத் தேர்ந்தெடுத்தேன்.  பொதுவாக வரலாற்று நாவல்கள் ஒன்று இரண்டு குறிப்புகளை வைத்துக் கொண்டு மொத்த நாவலையும் கற்பனையாக புனையும் வகையை கொண்டது ஒரு தீவிர இலக்கிய வாசகனுக்கு அதனால் வரலாற்று நாவல்கள் சற்று சலிப்பூட்டுவதாகவே அமையும். இளம் வயதில் அரியணை ஏறிய பாண்டிய நெடுஞ்செழியனின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது இந்த நாவல், சேரர் சோழர் படைகளை வெற்றிக் கொண்டு சேரமானை சிறை எடுத்து ஒரு மூங்கில் கோட்டை அமைத்து அதைச் சுற்றி அகழிகள் அமைத்து மறைத்து வைக்கப்பட்டார். சேரனை விடுவிக்க வந்த அவனது யானைப் படைகள் அருவியில் விழுந்து பாண்டியனின் உத்தியால் தோல்வியுற்றதாக வரலாறு கூறுகிறது. இந்த வரலாற்றை வைத்துக்கொண்டு மொத்த நாவலும் புனையப்பட்டிருக்கிறது இதில் வரும் கதாநாயகன் இளமாறனுக்கு எடுத்துச் சொல்லி விளக்கம் கொடுப்பதாக நாவல் முழுக்க அமைந்துள்ளது பொதுவாக சாண்டில்யன் நாவல்களில் கதாநாயகியை வர்ணிக்கவே ஐம்பது பக்கங்கள் எடுத்துக்கொள்வார் இது எனக்கு மிக மிக சலிப்பூட்டுவதாக இருப்பதால் நாம் சாண்டில்யன் புத்தகங்களை தொடுவதே இல்லை ஆனால் விரைந்து வாசிக்க வேண்டும் என்பவர்கள் சாண்டில்யன் போன்ற வரலாற்று நாவல்கள் தான் மிகச்சிறந்த தேர்வு . தமிழகத்தில் இது போன்ற நாவல்கள்தான் அதிகமாக வாசிக்கப் படுகிறது அதனால் இந்த நாவல் இருபத்தி ஐந்து பதிப்புகளை தொட்டிருக்கிறது. 

No comments:

Post a Comment