Sunday, May 7, 2023

காலா பாணி


பிரிட்டிஷ் அரசு இந்த மண்ணில் நாடு பிடிப்பதற்காக செய்த கொடுமைகள் ஏராளம் ஏராளம். நயவஞ்சகதந்தால் குறுக்கு வழியில் ஏமாற்றி இங்கே அதிகாரத்திற்கு வந்து சொந்த நாட்டு மக்களை அடிமை படுத்தினார்கள் . தங்கள் மண்ணையும் அரசையும் இந்த கயவர்கள் இடம் இருந்து காப்பாற்ற இந்தியாவிலே முதல் முதலாக மக்களை ஒன்று திரட்டி போர் செய்தவர்கள் சின்ன மருது, பெரிய மருது, கட்ட பொம்மன் வேலுநாச்சியார் ஊமைத்துரை போன்றவர்கள் . காளையார் கோவில் போர் என்று வரலாற்றில் அழைக்கப்படும் இந்த போரில் எந்த விசாரணையும் இல்லாமல் ஐநூறு பேர் தூக்கிலிடப்பட்டனர் குழந்தைகள் முதியவர்கள் என்று அனைவரும் தூக்கிலிடப்பட்டனர். அவர்கள் தலை துண்டிக்கப்பட்டு ஊர் நடுவில் தொங்கவிட்டு பொது மக்களை பயமுறுத்தினார்கள். சின்ன மருது மக்களை திரட்ட 'ஜம்பு தீவு' என்ற பிரகடனத்தை வெளியிட்டார் முதல் முறையாக இதற்கு பிரிட்டிஷ் அரசு இரண்டு முறை பதில் பிரகடனம் வெளியிட்டது. தெற்கில் சிவகங்கை சீமை பிரிட்டிஷ் அரசுக்கு பெரிய தலைவலியாக இருந்தது ஐநூறு பேரை தூக்கிலிடப்பட்ட பிறகு சிவகங்கை அரசர் வேங்கை வயல் வேங்கை பெரிய உடையணத் தேவன் ( வேலுநாச்சியார் , பெரிய மருது வின் மருமகன்) சின்ன மருதுவின் மகன் துரை சாமி , கட்ட பொம்மன் வளர்ப்பு மகன் தளவாய் குமாரசாமி நாயக்கன் ஆகிய 73 பேரை காலா பாணி என்று பினாங்கு தீவிற்கு முதல் முறையாக நாடு நடத்தினார்கள். கல் கையில் விலங்கோடு நடந்தே தூத்துக்குடி துறைமுகம் வரை அழைத்து வந்து அட்மிரல் நெல்சன் கப்பலில் பினாங்கு அனுப்பபடுகிறார்கள் முறையான உணவு தண்ணீர் இல்லாமல் வழியிலேயே  மூவர் இறந்து போனார்கள், பினாங்கு தீவில் பலர் இறக்க பலர் மனநிலை பாதிக்கப்பட்டவர் ஆகிறார்கள். பிறகு இரும்பு வெட்டும் சுரங்கங்களில் கூளிவேலைக்கு செல்கிறார்கள். 

ஒரு இடத்தில் வேங்கை பெரிய உடையன் சொல்வார்கள்
 " இனி நாம நம் கரிசல் செம்மண்ணை எப்போதும் போர்போமோ இல்ல பாக்காமலே போய்டுவோமோ"  என்று வாசகன் மனம் உடைந்து விடுகிறது. 

மால்பரோ கோட்டையில் இருட்டில் அடைக்கப்பட்ட வேங்கையாள் அங்கு முதல் முறையாக கொடுக்காபுளி மரம் நடப்பட்டது. அந்த இரண்டு மரம் இன்றும் இருக்கிறது என்பதை நினைத்தால் அந்த மரத்தை கட்டிக்கொள்ள ஆசை வருகிறது.

 வெறும் 35 வயதில் துரைசாமியும் 34 வயதில் வேங்கை வயல் பெரிய உடையார் தேவரும் இறந்து போனார்கள் என்பது நெஞ்சை உலுக்க கூடியதாக இருக்கிறது . தன் அரசை காப்பாற்றவும் சொந்த மண்ணில் விடுதலைக்குப் போர் செய்ததற்காகவும் இந்த மண்ணில் இருந்து கண் காணாத தீவிற்கு அவர்களை நாடு கடத்தியது ஆங்கில அரசு.  அந்த 73 பேரையும் கிட்டத்தட்ட என்று தமிழகம் இன்று மறந்தே போய்விட்டது அவர்களை மீண்டும் இந்த நூல் நமக்கு வெளிகாட்டி இருக்கிறது. எங்கிருந்தோ வந்த ஆங்கிலேயர்கள் இந்த மண்ணில் வாழும் பூர்வகுடி  மக்களை கொத்துக்கொத்தாக தூக்கிலிடும் போது அந்த மக்களின் மனநிலை என்னவாக இருந்திருக்கும் ?  அவர்கள் இந்த ஆங்கிலேயர்களை எதிர்ப்பதை தவிர வேறு என்ன வழி அவர்களுக்கு இருந்திருக்கிறது ஆனால் அவர்கள் அதற்காக எவ்வளவு தூரம் கொடுமைப்படுத்தப்பட்டார்கள் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டார்கள் என்பது கண் முன்னே நமக்கு இருக்கும் வரலாறு .அப்படிப்பட்டவர்களின் தியாகத்தால் எண்ணற்றவர்களின் உயிரின் விலையும் சேர்த்து தான் இன்று இந்த நாடு சுதந்திரம் அடைந்து இருக்கிறது.ஆனால் இன்றைய அரசியல்வாதிகள்‌ . தங்கள் சுடுகாட்டிற்கு கோடிகளில் செலவு செய்து பளபளக்கும் கற்களை பதித்துக் கொள்கிறார்கள். பேனாவிற்கு சிலை வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் தங்கள் உயிரையே இந்த நாட்டிற்காக கொடுத்த எண்ணற்ற வீர மறவர்கள் இந்த மண்ணில்  அடையாளமே இல்லாமல் போய்விட்டார்கள் என்பதை நினைக்கும் போது தான் இன்றைய அரசியல்வாதிகள் மீது கடுமையான  சினமும்  வெறுப்பும் வருகிறது. 

வேங்கை பெரிய உடையணத் தேவன் அவர்கள் சகாக்கள் பாதத்தில் என் சென்னியை வைக்கிறேன்.