இங்கே எழுதப்படுபவை என் வாசிப்பு நிரைவுக்காக மட்டுமே.

Wednesday, January 1, 2020

2019- வாசித்த புத்தகங்கள்

இந்த ஆண்டு உருப்படியாக எதுவும் வாசிக்கவே இல்லை. வாசித்தவை கிழே... இவை அனைத்தும் வாசிக்க வேண்டிய நல்ல புத்தகங்களே.


1) யாமம் - எஸ் ராமகிருஷ்ணன்
2) எங் கதெ - இமயம்
3) சஞ்சாரம் - எஸ் ராமகிருஷ்ணன்
4) திருடன் மணியன் பிள்ளை - ஆர் இந்துகோபன்
5) அஜ்வா - சரவணன் சந்திரன்
6) பிறகு - பூமணி
7) வெக்கை - பூமணி
8)நெடுஞ்சாலை - கண்மணி குணசேகரன்
9)ரூஹ்-லட்சுமி சரவணக்குமார்.

Thursday, August 15, 2019

நெடுஞ்சாலை - கண்மணி குணசேகரன்



ராஜேஸ்வரி பஸ்  எங்க ஊருக்கு இரண்டு பஸ் வருது ஒரு பஸ் எங்க ஊருரோட  கடைசியா திரும்பி கள்ளக்குறிச்சி போகும், இன்னும் ஒன்னு விழுப்புரம் வரை போகும். இதுவரைக்கும் இந்த பஸ் முதலாளிகள் எல்லாம் எப்படி இதை நடத்துறாங்க நினைச்சு பார்த்தது கூட இல்லை இதில் ஒரு இடத்தில் ராஜேஸ்வரி பஸ்ஸின் முதலாளி செட்டியார் வருகிறார் டிக்கெட்  கலெக்ஷன் குறைவாக இருக்கிறது என்று செக்கரை வாங்கு வாங்கு என்று வாங்குகிறார்.
" நீ பாட்டுக்கு பின்னாடி சீட்ல ஒட்காந்துகிட்டு வரவ போரவ சூத்துல மூஞ்சிய தேச்சிட்டு  இருந்தா எப்படியா கலெக்ஷன் வரும்"
இதை பார்த்ததும் அங்கு வேலை கேட்டுச் சென்ற தமிழரசனுக்கு மட்டுமல்ல எனக்கும்கூட அதிர்ச்சியாகவே இருந்தது ஒரு முதலாளியின் உண்மை முகத்தை நேருக்கு நேர் நின்று பார்க்கும் போது நம்மையே கதிகலங்க வைக்கிறது.

" தமிழரசன் செட்டியாரு கண்டக்டர் வேலை கேட்டு"

" க்கு‌ம் செட்டியார் மொதல மொழநீட்டு நீட்டிடு செட்டியார்ன மட்டும் இப்பவே மொதலாலியாக்கி உட்டுரன் சரியா?, செட்டி கிட்ட கொஞ்சம் அசந்த அப்பறம் நா உங்கிட்ட சீட்டு கிழிச்சி கொடுக்க நிக்கனும் ஆளயே முழுங்கிடொனுவ செட்டிங்க "

கண்மணி குணசேகரனின் யதார்த்த எழுத்து அற்புதமான கலைப் படைப்பாக கைகூடி வந்திருக்கிறது. கடலூரில் போக்குவரத்து அலுவலக ஊழியரான குணசேகரன் அவரது பணி அனுபவங்கள் தொகுத்து எழுதி இருக்கிறார். ஆறு வருடமாக இந்த கதைக்கருவை எழுதலாம் என்று திட்டம் வைத்திருந்தும் எங்கே இதை எழுதி தன்னை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பி விடுவார்களோ என்ற பயத்தில் எழுதாமல் இருந்ததாக அவரே குறிப்பிடுகிறார் பிறகு ஒருவழியாக எழுதிவிட்டார். இத்தனை ஆண்டுகள் ஆகியும் எதுவுமே நடக்கவில்லை ஏனென்றால் அவரது படைப்புகளை யாருமே வாசிக்கவே இல்லை என்பதே காரணம், சரி நானாக புத்தகத்தை கொடுத்து வாசிக்கச் சொல்லியும் பார்த்துவிட்டேன் யாரும் வாசிக்கவேயில்லை  என்று கண்மணி சொல்கிறார்.
 தமிழரசன் அய்யனார் ஏழைமுத்து ஆகிய மூவரும் தற்காலிக பணி ஆட்களாக பெரியார் டிப்போ வேலைக்குச் செல்கிறார்கள் அவர்கள் சந்திக்கும் வேளை சவால்களை அவர்களின் குடும்ப பின்புலத்தையும் சொல்லிச் செல்கிறது நாவல். எங்கேயோ ஒரு அரசு பேருந்து டயர் வெடித்து நிற்கிறதை நாம எல்லோரும் பார்த்திருப்போம் ஆனால் அதற்குப் பின்னாடி ஒரு சீஎல் க்கு பத்து நாள் வேலை போகும் என்பது நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. புது டயர் வாங்க வேண்டிய காச எவனோ ஒரு அரசியல்வாதி எடுத்துட்டு போயி வப்பாட்டி ஊட்ல படுத்து கெடந்துட்டு வருவான், ஆனா அதுக்கான தண்டனையை அத்து கூலிக்கு வேலை செய்ர  கடைநிலை ஊழியன் தலையில் விழுகிறது. ஒரு அரசுத்துறை எவ்வளவு ஊழல் மலிந்த தாக இருக்கிறது என்பதை நேரடியாக இதில் பேசப் படவில்லை ஆனால் கதையில் பின்புலத்தில் கதையை இயக்குவது இந்த ஊழல் தான் என்பதை வாசகன் அறியலாம். நகர அரசு பேருந்து என்றால் நம் நினைவுக்கு வருவது ஓட்டை உடைசல் மான ஒரு பேருந்தும் சிடுசிடுப்பு முகத்துடன் உள்ள நடத்துனரும் தான், அந்த முகத்திற்கு பின்னணியில் இருக்கும் காயங்களையும் துயர் மிகுந்த பணிச்சுமைகளை எடுத்துச் சொல்கிறது இப்படைப்பு எதார்த்தமான கதாபாத்திரத்திமும் பேச்சு பொழியும் தொய்வு இல்லாமல் வாசிக்க முடிகிறது. அய்யனார் சந்திரா சந்தித்துக்கொள்ளும் அத்தியாயம், ஏழைமுத்து மனைவி பார்வதியை கம்பளி ஆடு குட்டி போட்டதை வைத்து குழந்தையின்மையை குத்தி காட்டி சண்டை இழுக்கும் அத்தியாயமும் இந்நாவலின் உச்சமான இடம். பேருந்தும் நெடுஞ்சாலையும் பலருக்கு பல நினைவுகளை கொடுக்கிறது காதல் பிரிவு, காயங்கள், மரணங்கள், சண்டை, அடிதடி என்று ஆனால் அதை இயக்கும் நபர்களின் பணிச்சுமையை நான் நேரில் கண்டிருக்கிறேன் சார் சார் கொஞ்சம் பாத்து போடுங்க மூனு நாள எரங்காம ஒட்ரன் சார் என்று சீசன் நேரங்களில் தன் பிஎம் இடம் கெஞ்சும் ஓட்டுநர்களை நான் பார்த்து இருக்கிறேன். அப்படி ராபகலாக கண்விழித்து ஓட்டும் ஓட்டுநர்களுக்கு நடத்துநர்களும் இந்தப் படைப்பை கண்மணி குணசேகரன் அவர்கள் சமர்ப்பித்திருக்கிறார். இதை வாசித்த பிறகு பேருந்து ஓட்டுநர் நடத்துநர் மீது நீங்கள் கொண்டிருக்கும் பார்வை மாறி இருக்கும். கண்மணியின் முக்கிய படைப்பு அவரின் 'அஞ்சலை' கேரளாவில் ஒரு பல்கலைக்கழகம் இதை பாடமாக வைத்து இருக்கிறது அப்படி பட்ட மகத்தான கலைஞன் எங்க மள்ளாடை கொள்ளியில் இருந்து வந்தவன் என்பதே எங்கள் நடு நாட்டிற்கு பெருமை...

இந்தப் புத்தகத்தை கொடுத்து விட்டு கண்மணி குணசேகரனின் "அஞ்சலை" நாவல் இருக்கிறதா என்று நூலகரிடம் கேட்டேன் கண்... மணி... குணசேகரனா...... அவரை இப்பதான் கேள்விபடரேன் தம்பி என்றார்....

Wednesday, April 17, 2019

யாமம் - எஸ் ராமகிருஷ்ணன்



எஸ் ராமகிருஷ்ணனின் வெயிலை போலவே இரவும் எத்தனை இனிமையானதாக இருக்கிறது நெடுங்குருதி வெயில் மையச் சரடாக வும் தொன்மை படிமமாகும் பின்னப்பட்டிருக்கும் இந்த நாவலில் இரவும் வரலாறும் அத்தர் வாசனையும் மையச் சரடாக இருக்கிறது. 
யாமம் என்றால் இரவு, இரவை போல விளங்கமுடியாத இருளாக மனிதர்களும் அவர்களின் அகமும் இருக்கிறது என்பதையே இந்த யாமம் . ஒரு ஞானியிடம் இருந்து அத்தர் தயாரிக்கும் முறையை பெறும் அப்துல் கரீம் இரவை போல சுகந்தம் தரும் யாமம் என்ற வாசனை திரவியம் கண்டுபிடிக்கிறார். உயர்குடி முதல் சாதாரண மக்கள் வரை அந்த அத்தரை வாங்கிப் பூசிக் கொள்கிறார்கள் மதி மயக்கும் அதன் வாசனை காமத்தையும் கிளறுவதாக இருக்கிறது. 


இந்த நாவலில் முதன்முதலில் என்பதே வரலாறாக மாறுகிறது முதல் முதலில் வெள்ளைக்காரர்கள் மிளகு வாங்கி விற்பதற்காக இங்கிலாந்தில் இருந்து வருகிறார்கள் பிறகு கரையானைப் போல் இந்த தேசத்தை சுரண்டுகிறார்கள். அதே போல முதன் முதலில் நில அளவைகள் எங்கிருந்து யாரால் தொடங்கப்பட்டது, சென்னை நகரத்தை ஒயிட் டவுன் பிளாக் டவுன் என்று இரண்டாகப் பிரிப்பது, முதல் தேயிலை இந்திய வருகை, முதல் கிறிஸ்தவ மதமாற்றம் இப்படி நாவலில் பின்னணியில் வரலாற்று இழையோடுகிறது. அந்த வரலாற்றில் விசித்திர நிகழ்வுகள் விசித்திர மனிதர்கள் சுவடே இல்லாமல் மறைந்து போன துயரமிகு வாழ்வின் வரலாற்று மீள்பதிவே யாமம்.

சதாசிவ பண்டாரம் காரணமே இல்லாமல் திருநீலகண்டம் என்ற நாய் சென்ற இடமெல்லாம் அலைந்து திரிந்து நாய் போன போக்கில் தன் வாழ்வை செலுத்தி இறுதியில் பட்டினத்தார் சமாதியில் முக்தியடைகிறார். வாழ்வில் எந்த ஒழுங்கும் கட்டுப்பாடும் இல்லாமல் வாழ்வை அதன் போக்கில் விட்டு பண்டாரம் கண்ட வாழ்வின் தரிசனத்தை நம்மையும் அடைய வைக்கிறது. நேர் எதிரில் வெள்ளைக்காரர்கள் நாய்களை வாங்கி வருவதும் பிறகு ஒரு வருடம் கழித்து அதுகளை வேட்டையாடிக் கொள்வதும் விசித்திரம் தானே?

கிருஷ்ணப்ப கரையாளர் சொத்துக்காக லண்டன் வரை கூட வழக்கை எடுத்துச் செல்ல முயற்சி செய்கிறார் ஆனால் அவரே தான் எந்த சொத்தும் பணமும் வேண்டாம் என்று கடைசியில் மறுக்கிறார். அவர் எலிசபெத்துடன் மலைக்குச் சென்று இயற்கையோடு தன் வாழ்க்கையை கழிக்கும் போது மனமாற்றம் அடைகிறார். இயற்கைக்கு மாறுதல் என்பது மனிதன் இயல்புக்கு திரும்புதல் என்ற என்றாகிறது இல்லையா?. எலிசபெத்தின் குழந்தைகால நினைவுகள், துயரங்கள் பின்பு அவள் வேசியாக மாறுவது என்பவையெல்லாம் வெளியேறமுடியாத இதய குமிழியாக இதயத்தில் எங்கோ தங்கிவிடுகிறது.

லண்டனில் போகத்திற்கான இடமாக நினைக்கும் சற்குணம் பிறகு லண்டனில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக புரட்சியாளனாக மாறுவது வியப்பான தருணம். 

" லண்டன் மீதான எனது கனவுகள் கலைந்து போய் விட்டன லண்டன் ஒரு பொதுக் கழிப்பிடம் போல் உள்ளது" 

" இப்படி நாய்க்கு எலும்புத் துண்டை தூக்கி எறிவது போல் உன்னை போன்ற அறிவாளிகளை சமூகத்தைப் பற்றி சிந்திக்கவிடாமல் செய்கிறார்கள்" 

- நாவலில் இருந்து. 



லண்டனுக்கு கணிதம் கற்க செல்லும் திருச்சிற்றம்பலம் திரும்பி வரும்போது காமத்தால் சிதைந்து போன குடும்பங்களையும் உறவுகளை இருந்தான். இதே போல தான் ராமானுஜம் கூட கணிதத்திற்கு வாழ்கை அற்பணித்து அவதியுற்றார். தையல் நாயகியின் பத்திரகிரி உறவையும் தொடக்கத்தில் கசப்பாக என்னும் பகுதியில் மனைவி விசாலா பிறகு அதை அதன்போக்கில் ஏற்றுக் கொள்கிறாள். இதில் வரும் மனிதர்கள், வாழ்வு தன் கையின் கட்டுப்பாட்டில் இருந்து நழுவிய ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்களாக இருக்கிறார்கள். (தையல் திருச்சிற்றம்பலம் மனைவி)


யாமம் கண்டுபிடித்த கரீம் ஒரு கட்டத்தில் குதிரை பந்தயத்தில் மீது ஆசை வந்து அனைத்து சொத்துக்களையும் இழந்து ஒரு நாள் திடீரென்று காணாமல் போகிறார். பிறகு ஆண் வாரிசு இல்லாத அவரின் மூன்று மனைவிகள் சுரையா, வஹிதா, ரஹ்மானி ஆகிய மூவரும் வறுமையோடு வாகையையும் சேர்ந்து சுமக்க வேண்டியதாகிவிடுகிறது. பிறகு காலரா சென்னை மாகாணத்தை தாக்குகிறது பின் மரணஓலங்கள் எங்கும். நான்கு மாறுபட்ட நாவல்களை ஒரே நாவலில் சேர்த்து வாசிப்பதை போல இருக்கிறது எல்லாவற்றையும் இனைக்கும் மையமாக வரலாறும் காமமும் வாசனையின் சுகந்தமும் இரவும் இருக்கிறது.